search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free eye treatment camp"

    • சிவகங்கை வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு- இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன், மாங்குடி பங்கேற்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை வட்டார போக்குவரத்து துறை சார் பில், அனைத்து வகையான வாகனங்களின் ஓட்டுனர்க ளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற் றும் இலவச கண் சிகிச்சை முகாம், சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்திலுள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன் மற்றும் சிவகங்கை சட்டமன்ற உறுப் பினர் பிஆர்.செந்தில்நாதன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்து, பார்வை யிட்டனர். அப்போது வட்டா ரப் போக்குவரத்து அலுவ லர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம் மற்றும் கரைக் குடி மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்நிகழ்ச்சியில், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாக னங்கள் மற்றும் அரசு பேருந்துகள் ஆகியவைக ளின் ஓட்டுனர்க ளுக்கு, சாலை பாதுகாப்பு தொடர் பான பல்வேறு விழிப்பு ணர்வு கருத்துக்கள் எடுத்து ரைக்கப்பட்டு, அவர்களின் நலன் காக்கின்ற வகையில், ரத்த அழுத்த பரிசோதனை, இலவச கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத் துவ பரிசோதனைகள் இம் முகாமில் மேற்கொள்ளப் பட்டது.

    இதில், மாவட்டம் முழு வதும் 500-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்றனர். இம்முகாமினை, சிவ கங்கை வட்டார போக்குவ ரத்து அலுவலகம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தியது.

    • நத்தம் யூனியன் அலுவலகம் எதிரில் உள்ள திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • முகாமில் கண்புரை,பார்வை குறைபாடு, கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    நத்தம்:

    நத்தம் யூனியன் அலுவலகம் எதிரில் உள்ள அம்மா திருமண மண்டபத்தில் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வேலம்பட்டி ஊராட்சி மன்றம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

    இதற்கு வேலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா, தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நகர செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் கண்புரை,பார்வை குறைபாடு, கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராசு, நகர அவைத் தலைவர் சரவணன், மாவட்ட பிரதிநிதி குடகிப்பட்டி அழகர்சாமி, பேரூராட்சி கவுன்சிலர் இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 250 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்
    • ஏராளமானனோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் ரோட்டரி சங்கம், நல்லம்மை ராமநாதன் ரோட்டரி மருத்துவமனை, கோவை சங்கரா கண் மருத்துவமனை, வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் அமரர் மு.க.மெய்ஞானம்- வசந்தி அம்மாள் அறக்கட்டளை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.

    முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.மேகராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் கே.எம்.ராஜேந்திரன், இயக்குனர் பாபு, தலைவர் தேர்வு ரங்காவாசுதேவன், சி.கண்ணன்,மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கண் சிகிச்சை முகாமை கே.எம்.ஜி.கல்வி நிறுவன ங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞர் கே.எம்.பூபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர்கள் ஆர்.கே.மகாலிங்கம், செ.கு.வெங்கடேசன், அரிகிரு ஷ்ணன், அன்பு அன்பரசன் உள்பட ஏராளமான ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 650 பேர் கண் சிகிச்சை மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்டனர். 250 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    • செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • முகாமில் மொத்தம் சுமார் 230பேர் கலந்து கொண்டனா். அதில் 72பேருக்கு மருந்து வழங்கப்பட்டது. 42பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. 40பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், கன்னி யாகுமரி விவேகானந்தா கேந்திரம், பிரானுார், பார்டர் மர வியாபாரிகள், சாமில் உரிமையாளா்கள் சங்கம் சார்பில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. சாமில் உரிமையாளா்கள் சங்க நிர்வாகி தொழிலதிபர் படேல் குரூப்ஸ் அம்ரூத்படேல்மோகன் தலைமை தாங்கினார்.

    பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலா் முருகன், மேலச்செங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியா் ராஜன், தமிழ்நாடு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மைய மாநில செயலாளா் மணிமகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். அதனைதொடா்ந்து ரமிளாமோகன், சாமில் உரிமையாளா்கள் சங்க நிர்வாகி காஞ்சனாபிரவீன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா்.

    கேந்திர அன்பர்கள் கல்யாணக்குமார், கோமதிநாயகம், பேச்சிமுத்து நுாலகர் ராமசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முகாமில் அரவிந்த் கண் மருத்துமனை மருத்துவா்கள் மற்றும் குழுவினா் கண் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினா். முகாமில் மொத்தம் சுமார் 230பேர் கலந்து கொண்டனா். அதில் 72பேருக்கு மருந்து வழங்கப்பட்டது.

    42பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. 40பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள், கேந்திர தொ ண்டா்கள், சுபம் அமைப்புசாரா தொழி லாளா்கள் சங்க அலுவலக மேலாளா் கோபக்கு மார், சிவக்குமார், முத்து மாரியப்பன், சத்யபாமா சமூக ஆர்வலா்கள் செய்திருந்தனா்.

    • கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார்.
    • 13 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் வடுகபாளையம் புதூர் ஊராட்சி, திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் தலைமை வகித்தார். பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி முன்னிலை வகித்தார். பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 13 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ முகாமில் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் மருத்துவ குழுவினர் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை செய்தனர்.
    • முகாமில் 88 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் வைத்து கிராம உதயம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சங்கர சுப்பையா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலரும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன் முன்னிலை வகித்தார்.

    கிராம உதயம் இலவச மருத்துவ துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். மகாத்மா காந்தி சேவா மன்ற தலைவர் மனோகர், சமூக ஆர்வலர்கள் பாட்டத்தூர் பால்ராஜ், சங்கரன்கோவில் பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் ஆகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை செய்தனர்.

    இதில் 88 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 38 பேர் இலவச கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    கிராம உதயம் களப்பணியாளர் ஜெயராணி நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை கிராம உதயம் மருத்துவதுறையினர் செய்திருந்தனர்.

    • தேனி வழக்கறிஞர் சங்கம் மற்றும் தேனி வாசன் ஐ கேர் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு இலவசமாக கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.

    தேனி:

    தேனி வழக்கறிஞர் சங்கம் மற்றும் தேனி வாசன் ஐ கேர் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் தேனி மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண் பரிசோதனை முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் மூத்த வழக்கறிஞர்கள் வீரசிகாமணி, பாண்டியராஜன் உள்பட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு இலவசமாக கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தேனி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.
    • 17-ந் தேதி திருக்குறுங்குடி பேரூராட்சி வட்டக்குளத்தில் கூட்டாஞ்சோறு நிகழ்ச்சி நடக்கிறது.

    நெல்லை:

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.பாளை மகாராஜநகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இணையவழியில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பி னர்கள் சேர்க்கும் பணியில் பணியாற்றி யோருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    இதையொட்டி நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முழுவதும் இன்று முதல் 4 நாட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி காமராஜர் பிறந்த நாளை கொண்டாட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்துள்ளார்.

    அதன்படி முதல்நாளான இன்று நாங்குநேரியில் உள்ள ஆர்.யூ.சி. மஹாலில் இலவச கண்சிகிச்சை முகாமை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மாலை 4 மணிக்கு மன்னார்புரம் விலக்கில், விவேக் முருகன் ஏற்பாட்டில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவில் நாங்குநேரி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    பாளை மகாராஜநகரில் உள்ள தனது இல்லத்தில் 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இணையவழியில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பி னர்கள் சேர்க்கும் பணியில் பணியாற்றி யோருக்கு பரிசுகள் வழங்குகிறார்.

    காமராஜர் பிறந்த நாளான நாளை காலை 7 மணிக்கு ரெட்டியார்பட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    தொடர்ந்து காலை 7.30 மணிக்கு சுருளை கிராமத்திலும், 7.45 மணிக்கு முனைஞ்சிப்பட்டியிலும், 8மணிக்கு விஜயஅச்சம்பாட்டி லும், 9.15 மணிக்கு இட்ட மொழியிலும், 10 மணிக்கு பரப்பாடியிலும், 11.30 மணிக்கு களக்காட்டிலும், மதியம் 12.45 மணிக்கு சிதம்பராபுரத்திலும், மதியம் 1 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்திலும் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்று இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    மாலை 4 மணிக்கு ஓமநல்லூர் மாலை 5 மணிக்கு மருதகுளம், 6 மணிக்கு கண்ணநல்லூர், இரவு 7.15 மணிக்கு இளையநயினார்குளம் ஆகிய இடங்களில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாக்களில் கலந்து கொள்கிறார்.

    16-ந் தேதி காலை 10 மணிக்கு குன்னத்தூர் கிராமத்தில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    மதியம் 3 மணிக்கு நாகர்கோவிலில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பு கபடி போட்டியை தொடங்கி வைக்கிறார். இரவு 8 மணிக்கு ஆரைக்குளம் கிராமத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    17-ந் தேதி காலை 10 மணிக்கு திருக்குறுங்குடி பேரூராட்சி வட்டக்குளத்தில் நடைபெறும் கூட்டாஞ்சோறு நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுடன் கலந்துரையாடி, உணவு அருந்துகிறார். மாலை 6.30 மணிக்கு கே.டி.சி. நகர் மாதா மாளிகையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார்.

    ×