search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    X

    குன்னத்தூரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டிய காட்சி.

    நெல்லை அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    • அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • குன்னத்தூரில் நியாயவிலை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    நெல்லை:

    பாளையங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட முன்னீர்பள்ளம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    பின்னர் நெல்லை டவுனை அடுத்துள்ள குன்னத்தூரில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நியாயவிலை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை, அடிக்கல் நாட்டுவிழா ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    இதேபோல் சீவலப்பேரி பஞ்சாயத்தில் புதியதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி திறப்புவிழா விழாவில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் பள்ளி கல்வி அதிகாரி முருகன், தலைமையாசிரியர் மனோகர், மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, பாளையங்கோட்டை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கணேசன், பஞ்சாயத்து தலைவர்கள் வெங்கடேஷ் உமாமகேஷ்வரி, அனுசியா, குமரேசன், மின்சார வாரியத்தின் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் உதவி செயற்பொறியாளர் ஜாண்பிரிட்டோ, முத்து குமார், முருகேசன் மற்றும் மின் வாரிய ஊழியர்கள், முன்னீர்ப்பள்ளம், குன்னத்தூர், பகுதி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தனபால் கோயில்பிச்சை, நந்தகோபால், ஜெயசேகர், பிச்சுமணி, இசக்கிபாண்டி, தசதாசிவம், தங்கவிநாயகம், மாரியப்பன், மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×