search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகராட்சி சார்பில் 4 மண்டலங்களில் நாளை மறுநாள் சிறப்பு வரிவசூல் முகாம்
    X

     நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி

    நெல்லை மாநகராட்சி சார்பில் 4 மண்டலங்களில் நாளை மறுநாள் சிறப்பு வரிவசூல் முகாம்

    • நெல்லை மாநகராட்சி சார்பாக 4 மண்டல பகுதிகளில் வரிவசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக பொதுமக்களின் நலன் கருதி நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
    • 4 மண்டல உதவி கமிஷனர்கள் வெங்கட்ராமன், காளிமுத்து, கிறிஸ்டி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சி சார்பாக 4 மண்டல பகுதிகளில் வரிவசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக பொதுமக்களின் நலன் கருதி நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது. 4 மண்டல உதவி கமிஷனர்கள் வெங்கட்ராமன், காளிமுத்து, கிறிஸ்டி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    நெல்லை மண்டலத்தில் வார்டு 21-ல் உள்ள பேட்டை உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள சேனைத்தலைவர் சமுதாய நலக்கூடத்திலும், தச்சநலல்லூர் மண்ட லத்தில் வார்டு 29-ல் உள்ள மீனாட்சிபுரம் நகர்மன்ற மகளிர் மேல்நிலைப்பள்ளி யிலும், மேலப்பாளையம் மண்டலத்தில் வார்டு 31-ல் உள்ள புனித தோமையார் பள்ளி வளாக கூட்டரங்கிலும் பாளையங்கோட்டை மண்டலத்தில் வார்டு 55-ல் உள்ள 8-வது வடக்கு தெரு விக்னவிநாயகர் கோவில் எதிரில் உள்ள கலையரங்கிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாம்களில் அந்தந்த வார்டு பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள், வணிகவளாக உரிமையாளர்கள், தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாளச்சாக்கடை சேவை கட்டணம் போன்ற நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வரியினங்களை உடனடியாக செலுத்திடவும், மேலும் சொத்துவரி, குடிநீர் கட்டணவரி விதிப்பு பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவை களுக்கும் கோரிக்கை மனு அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    பின்தங்கியுள்ள வரிவசூல் மேம்படுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான வரியினங்களை அன்றைய தினமே நிலுவையின்றி செலுத்திட மாநகராட்சி சார்பில் கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×