search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகராட்சி சார்பில் டவுனில் போலீசாருக்கு நிலவேம்பு கசாயம்
    X
    நிலவேம்பு கசாயம் வழங்கி உறுதிமொழி எடுத்துக்கொண்ட காட்சி.

    நெல்லை மாநகராட்சி சார்பில் டவுனில் போலீசாருக்கு நிலவேம்பு கசாயம்

    • நெல்லை மாநகர பகுதியில் பருவமழையை முன்னிட்டு அங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • டெங்கு தடுப்பு மற்றும் போலீசாருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் டவுன் போலீஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் பருவமழையை முன்னிட்டு அங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உத்தரவின்படி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுரையின்படி உதவி பொறியாளர் வாசுதேவன் வழிகாட்டுதலின்படி டெங்கு தடுப்பு மற்றும் போலீசாருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் டவுன் போலீஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் தலைமையில் போலீசார் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் நிலவேம்பு கசாயம் போலீசாருக்கு வழங்கப்பட்டது. டெங்கு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை டவுன் ரத வீதிகளில் உள்ள கடை உரிமையாளர்கள், டவுன் மார்க்கெட் பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் காவலர்கள், டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரை யாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×