என் மலர்
இந்தியா

'வாக்கு திருட்டு'க்கு எதிராக டிசம்பர் 14 டெல்லியில் பேரணி - காங்கிரஸ் அறிவிப்பு
- பாஜக-தேர்தல் ஆணையத்தின் தீய தந்திரங்களை நிராகரித்து, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கோடிக்கணக்கான கையெழுத்துகளைப் பெற்றுளாம்.
- காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
வாக்கு மோசடிக்கு எதிராக டிசம்பர் 14 ஆம் தேதி டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்தப்போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும், நமது அரசியலமைப்பை அழிக்கும் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு செய்தியை அனுப்ப டிசம்பர் 14 அன்று டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் 'வோட் சோர் காடி சோட்' என்ற பிரமாண்ட பேரணியை காங்கிரஸ் நடத்தும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் எக்ஸ் இல் பதிவிட்டுள்ளார்.
மேலும், "போலி வாக்காளர்களைச் சேர்ப்பது, எதிர்க்கட்சிகளுக்குச் சார்பான வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது மற்றும் வாக்காளர் பட்டியலில் பெருமளவில் மாற்றங்களைச் செய்வது போன்ற பாஜக-தேர்தல் ஆணையத்தின் தீய தந்திரங்களை நிராகரித்து, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கோடிக்கணக்கான கையெழுத்துகளைப் பெற்றுளாம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேரணி நடத்துவது என்று முன்னதாக நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






