search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ramlila maidan"

    • அமலாக்கத்துறை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது
    • மோடி அரசு சட்டவிரோதமாக மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து 'இந்தியா' கூட்டணி சார்பில் மார்ச் 31-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணி நடத்த இருப்பதாக 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளது.

    எதிர்க்கட்சிகள் மீதான ஒன்றிய அரசின் அடக்குமுறையை கண்டித்தும், நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்' என்ற கருப்பொருளில் எதிர்க்கட்சிகளின் பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவுள்ளன

    டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. அவரை மார்ச் 28ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தற்போது அவர் அமலாக்கத்துறையின் விசாரணையின் கீழ் உள்ளார்

    இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிவைக்கப்படுவதாக குற்றம்சாட்டியும், அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் போராட்டம் நடத்துவதற்காக இந்தியா கூட்டணித் தலைவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

    அதில், எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து சமீபத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் எதிர்க்கட்சிகளுக்கு சமமான வாய்ப்புகள் இல்லை என்றும், எதிர்க்கட்சிகளை அடக்க மோடி அரசு இடைவிடாமல் சட்டவிரோதமாக மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

    • அரியானா போலீசார் பஞ்சாப் எல்லைக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • அரியானா முதல்வர் மீது 302 சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    டெல்லியில் பேரணி நடத்துவதற்காக திரண்ட விவசாயிகள் பஞ்சாப், அரியானா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் முன்னேற முயன்று வருவதால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

    இந்த மோதலில் 21 வயது இளைஞரான சுப்கரன் சிங் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் இரண்டு நாட்கள் பேரணிக்கு செல்லும் திட்டத்தை விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து நடைபெறும் என பாரதிய கிஷான் சிங் தலைவர் பல்பிர் சிங் ரஜேவால் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில் "அரியானா போலீசார் பஞ்சாப் மாநிலத்திற்குள் புகுந்து எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். எங்களுடைய டிராக்டர்களை அடித்து நொறுக்கினார்கள். அரியானா முதல்வர், அரியானாவின் உள்துறை மந்திரி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 பிரிவின் கீழ் (கொலை) வழக்குப்பதிவு செய்ய வேண்டும். விவசாயி மரணம் குறித்த நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மார்ச் 14-ந்தேதி ராம் லீலா மைதானத்தில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெறும்" என்றார்.

    போராட்டம், பேரணி, கருப்பு தினம் மகா பஞ்சாயத்து என விவசாயிகள் எம்.எஸ்.பி.க்காக பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்தடுத்து கையில் எடுக்க உள்ளனர்.

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய குழு கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெறுகிறது. #BJP #NationalCouncilmeet #RamlilaMaidan
    புதுடெல்லி:

    மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், டெல்லி பாஜக சார்பில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பாஜக தேசிய பொது செயலாளர் அனில் ஜெயின், தேசிய செயலாளர் மற்றும் டெல்லி பாஜக இணை பொறுப்பாளர் தருண் சுக், அமைப்பு பொது செயலாளர் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, பாஜக தேசிய குழு கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற உள்ளது என தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, பாஜக தலைவர்கள் கூறுகையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் பாஜக தேசிய குழு கூட்டம் நடைபெற உள்ளது.

    அனைத்து மாநிலங்களில் உள்ள பாஜகவின் 24 பிரிவுகளை சேர்ந்தவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 12 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கின்றனர்.

    பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு வழிகாட்ட உள்ளனர் என தெரிவித்தனர்.

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, இந்த கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #BJP #NationalCouncilmeet #RamlilaMaidan
    பாராளுமன்ற தேர்தல் பணிகளைத் தொடங்குவதற்காக பாஜக தேசியக் குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் வருகிற 9 , 10-ந்தேதிகளில் 2 நாட்கள் நடைபெற உள்ளது. #BJP
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    மார்ச் மாதம் தேர்தல் தேதி அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளதால் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 முக்கிய மாநிலங்களை பா.ஜ.க. இழந்தது.

    இதனால் பா.ஜ.க. தலைவர்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் மத்தியில் கடும் சோர்வு ஏற்பட்டுள்ளது. இந்த சோர்வை போக்கும் வகையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளை பிரதமர் மோடி, தேசியத் தலைவர் அமித் ஷா இருவரும் சந்தித்து பேச தொடங்கி உள்ளனர்.


    இதற்கிடையே பாராளுமன்ற தேர்தல் பணிகளைத் தொடங்குவதற்காக பா.ஜ.க. தேசியக் குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் 2 நாட்கள் நடைபெற உள்ளது.

    முதலில் இந்த கூட்டம் இந்திராகாந்தி உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அதிகப்படியான நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதால் பா.ஜ.க. தேசியக் குழு கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. தேசியக்குழு கூட்டம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது. இந்த தடவை நாடு முழுவதிலும் இருந்து சுமார் 4 ஆயிரம் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தேசியக் குழு கூட்டம் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தக் கூட்டமாகக் கருதப்படுகிறது. கூட்டணி, பிரசார வியூகம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளன. எனவே ஜனவரி 9, 10-ந்தேதிகளில் டெல்லியில் நடக்கும் பா.ஜ.க. தேசியக் குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #BJP #ParliamentElection
    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் சாதுக்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வருகிற 9-ந் தேதி நடைபெறும் என்று விசுவ இந்து பரிஷத் இணை செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறினார். #RamTemple #VHP #Delhi
    புதுடெல்லி:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ராமலீலா மைதானத்தில் சாதுக்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வருகிற 9-ந் தேதி நடைபெறும் என்று விசுவ இந்து பரிஷத் இணை செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறினார்.

    டெல்லியில் நிருபர்களிடம் மேலும் கூறுகையில், “ராமர் கோவில் கட்டுவதற்கான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் என்று நம்புகிறோம். அந்த அளவுக்கு ராமர் கோவிலுக்கு எதிரானவர்களின் மனதையும் எங்கள் பொதுக்கூட்டம் மாற்றிவிடும்.

    ஒருவேளை மசோதா கொண்டுவரப்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அலகாபாத் கும்பமேளாவின்போது முடிவு செய்யப்படும்” என்றார். 
    நாடு முழுவதிலும் இருந்து டெல்லியில் திரண்டுள்ள விவசாயிகள் தொடர்ந்து இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #TNFarmersProtest #FarmersProtest
    புதுடெல்லி:

    விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும், 60 வயது விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு டெல்லியில் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த போராட்ட குழுவில் திருச்சியை சேர்ந்த தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான 1,300 பேர் தமிழகத்தில் இருந்து பங்கேற்று உள்ளனர். அதேபோன்று உத்தரப்பிரதேசம், பீகார், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட 29 மாநில விவசாயிகளும், 4 யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 207 விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகளும் என மொத்தம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.

    நேற்று இவர்கள் டெல்லியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள அவர்கள் இன்று டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லப் போவதாக அறிவித்தனர்.

    இதற்காக தமிழக விவசாயிகள் 25 பெண்கள் உள்பட 1,300 பேரும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று காலை 8 மணிமுதல் திரண்டனர். அதேபோன்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் யோகேந்திர யாதவ், தலைமையிலும் மற்ற விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் என லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டிருந்தனர்.

    எங்கு பார்த்தாலும் பச்சை துண்டுகளுடன் விவசாயிகள் தலைகளாக காணப்பட்டன. இதில் தமிழக விவசாயிகள் 10 மணிக்குள் மத்திய அரசு வந்து கோரிக்கை குறித்து, உறுதி கூறி, நிறைவேற்ற வாக்குறுதி தராவிட்டால் பேரணியில் முழு நிர்வாணமாக செல்வோம் என அறிவித்திருந்ததால் பரபரப்பாக இருந்தது. பேரணி இடத்தில் ஆயிரக்கணக்கான டெல்லி போலீசார் மற்றும் மத்திய ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.


    நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு டெல்லி ஆம் ஆத்மி எம். எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததோடு, அவர்கள் நேரடியாக வந்து உணவு வழங்கினர். இன்று காலையும் பேரணி தொடங்கும் முன்பு விவசாயிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தண்ணீர் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டது.

    ராம்லீலா மைதானமே பரபரப்புடன் காணப்பட்டது. போக்குவரத்து மாற்றப்பட்டது.

    தமிழக விவசாயிகள் நிர்வாணமாக பாராளுமன்றம் நோக்கி செல்வோம் என அறிவித்திருந்ததால் டெல்லி போலீசார் அவர்கள் இடத்தில் கூடுதல் போலீசாரை நிறுத்தி இருந்தனர்.

    இதுகுறித்து பேரணியில் நின்ற திருச்சி அய்யாக்கண்ணு கூறியதாவது:-

    மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் ஏற்கனவே டெல்லியில் 141 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அன்று நாங்கள் தொடங்கிய போராட்டம் இன்று இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகளை டெல்லியில் திரள வைத்துள்ளது.

    தமிழக விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ராம்லீலா மைதானத்தில் இருந்து பாராளுமன்றம் வரை 3 கி.மீட்டர் நிர்வாணமாக செல்ல உள்ளோம். விவசாயிகளின் வேட்டி, சட்டையை ஏற்கனவே மத்திய அரசு கழற்றிவிட்டது. இப்போது எங்கள் கோவணத்தையும் மத்திய அரசு கோரிக்கையை நிறைவேற்றாததன் மூலம் கழற்றிவிட்டது என்பதை குறிக்கும் வகையில் செல்ல உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNFarmersProtest #FarmersProtest
    விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். #FarmersProtest
    புதுடெல்லி:

    விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும், அதன் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும், புயல் சேதத்தால் அழிந்து விட்ட அனைத்து விவசாய பயிர்களுக்கும் உரிய நஷ்ட ஈடு விரைந்து வழங்க வேண்டும், 60 வயதடைந்த விவசாயிகளுக்கு மகன், மகள் இருந்தாலும், சொந்தமாக பட்டா நிலம் இருந்தாலும் மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்,

    அழிந்துவிட்ட பயிர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் தொகை செலுத்தியும், மத்திய அரசின் இழப்பீட்டுக்கான காப்பீட்டு தொகை கிடைக்காமல் உள்ளதை மத்திய அரசு விவசாயிகளுக்கு விரைந்து பெற்றுத்தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைத்து டெல்லியில் இன்றும், நாளையும் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கிறார்கள்.

    இதற்காக கடந்த 27-ந்தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ற அவர்கள், அங்கிருந்து சென்னையில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலை டெல்லி சென்றடைந்தனர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய அவர்கள் ரெயிலை மறித்தனர். என்ஜின் மீது ஏறி நின்ற அவர்கள் தண்டவாளத்திலும் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    தமிழக விவசாயிகள் கழுத்தில் மண்டை ஓடு, எலும்பு மாலை அணிந்து அரை நிர்வாணத்துடன் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த காட்சி.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். தொடர்ந்து விவசாயிகள் கையில் மண்டை ஓடு, கழுத்தில் எலும்பு மாலை அணிந்தவாறு அரை நிர்வாணத்துடன் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தனர். இன்றும், நாளையும் அவர்கள் ராம்லீலா மைதானத்தில் திரண்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

    அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் மன்னார்குடி பழனிவேல், மாநில செயலாளர்கள் வந்தவாசி தினேஷ், முருகன், கடலூர் சக்திவேல், மாவட்ட தலைவர்கள் சென்னை மாவட்டம் ஜோதிமுருகன், விழுப்புரம் மாவட்டம் ஏழுமலை, காஞ்சிபுரம் மாவட்டம் சண்முகம், கோவை மாவட்டம் படிஸ்வரன், திருச்சி மாவட்டம் பொன்னுசாமி, கரூர் மாவட்டம் சரவணன் , திருவள்ளூர் மாவட்டம் நாககுமார், தஞ்சாவூர் மாவட்டம் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏற்கனவே டெல்லியில் திருச்சி விவசாயிகள் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தினர். பாராளுமன்றம் முன்பு ஆடைகள் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மீண்டும் தமிழக விவசாயிகளால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #FarmersProtest
    டெல்லியில் மிகப்பிரமாண்ட போராட்டத்தை நடத்துவதற்காக நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்து வருகின்றனர். #FarmersProtest
    புதுடெல்லி:

    டெல்லியில் விவசாயிகள் இன்றும், நாளையும் போராட்டம் நடத்துகின்றனர். 207 விவசாய அமைப்புகள் இணைந்த அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு அழைப்பின் பேரில், இப்போராட்டம் நடக்கிறது. கடன் நிவாரணம், விளைபொருட்களுக்கு உரிய விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்கிறார்கள்.


    இன்று (வியாழக்கிழமை) டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமலீலா மைதானத்துக்கு ஊர்வலமாக செல்கிறார்கள். நாளை அங்கிருந்து பாராளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக செல்கிறார்கள். நாடாளுமன்ற தெருவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், அவர்களிடையே பா.ஜனதா தவிர, இதர கட்சிகளின் தலைவர்கள் பேசுகிறார்கள். விவசாய சங்க தலைவர்களும் விவசாயிகள் பிரச்சனை பற்றி பேசுகின்றனர்.

    டெல்லியில் விவசாயிகள் இன்றும், நாளையும் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்கின்றனர். #FarmersProtest
    ×