search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arabic College"

    • பட்டமளிப்பு விழாவிற்கு சாலிஹாத் டிரஸ்ட் பொருளாளர் கலீலூர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
    • முஸ்லிம் பட்டங்களை கல்லூரி நிறுவனத்தலைவர் இமாம் அபு உபைதாவும், கணினி சான்றிதழ்களை மதரஸா காப்பாளர் அப்துல் ரபீக் வழங்கினர்.

    உடன்குடி:

    உடன்குடி பெரிய தெரு இமாம் மகளிர் அரபிக் கல்லூரியில் 18-வது பட்டமளிப்பு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழாக்கள் 4 நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் அபு உபைதா தலைமை தாங்கினார்.வரலாற்று கண்காட்சியை ம.ம.க. மாநில நிறுவனத் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவில் பெண்களுக்கு சிறப்பு பயான், மாணவிகளின் சிற்றுரைகள், மாணவிகள், உலமாக்களின் பட்டிமன்றங்கள், கருத்தரங்கம், பல்வேறு அரபிக் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.பட்டமளிப்பு விழாவிற்கு சாலிஹாத் டிரஸ்ட் பொருளாளர் கலீலூர் ரஹ்மான் தலைமை தாங்கினார். ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் ஜஹபர் சாதிக் சிராஜி வாசித்தார்.

    முஸ்லிம் பட்டங்களை கல்லூரி நிறுவனத்தலைவர் இமாம் அபு உபைதாவும், கணினி சான்றிதழ்களை மதரஸா காப்பாளர் அப்துல் ரபீக், தையல் சான்றிதழ்களை ஜக்கரியாவும் வழங்கினர். கல்வியின் நோக்கம், ஒழுக்கமான வாழ்க்கைக்கு இஸ்லாம் காட்டும் நெறிமுறைகள் ஆகியவை குறித்து ஒய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ஹாஜி அப்துல் கரீம் பேசினார். உடன்குடி ஓன்றிய அளவில் 12-ம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உடன்குடி பேரூராட்சி உறுப்பினர்கள் மும்தாஜ்பேகம், சித்தி ஷபீனா, பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்கள் சலீம், மகபூப் மற்றும் திரளான இஸ்லாமிய அறிஞர்கள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

    • கடையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி யில் 44-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
    • கல்லூரியின் துணை முதல்வர் எம்.ஏ. முகம்மது இக்பால் ஆலிம் 30 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி யில் 44-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் நிர்வாகக்குழுத் தலைவர் பத்ஹீர் ரப்பானி தலைமை தாங்கினார். ஈரோடு முகம்மது ஹஸன் அலி, தென்காசி மாவட்ட ஜக்கிய ஜமாஅத் தலைவர் வி.டி.எஸ்.ஆர் முகம்மது இஸ்மாயில், கயத்தாறு பி.எச். சுல்தான், கடையநல்லூர் தொழில் அதிபர்கள் ஏ.ஐ.கே.அமானுல்லா, கே.நயினா முகம்மது, கே.ஏ.ஜாபர் சாதிக், எஸ்.மக்தும், இப்ராஹிம். ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    கல்லூரியின் முதல்வரும், தென்காசி மாவட்ட அரசு ஹாஜியுமான முஹ்யித்தீன் ஹஜரத் வரவேற்று பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ. எம்.முகம்மது அபுபக்கர், கீழக்கரை சீனாதானா செய்யிது அப்துல் காதிர், சென்னை குரோம்பேட்டை காயிதேமில்லத் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் என்.முகம்மது காசிம், நெல்லை ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, சென்னை எஸ்.முகம்மது ரபீக் பேராசிரியர் ப.அ.முகம்மது இக்பால், தென்காசி ஹாஜி முஸ்தபா குருப்ஸ் எஸ்.எம். கமால் முகைதீன் ஆகியோர் பேசினார்கள்.


    சென்னை சுன்னத் ஜமாஅத் பேரியக்க தலைவர் டாக்டர் எஸ்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி சிறப்புரையாற்றினார். கல்லூரியின் துணை முதல்வர் எம்.ஏ. முகம்மது இக்பால் ஆலிம் 30 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் நெல்லை மஜீத் மாவட்ட பொருளாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹீம் மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்வகாப், அச்சன்புதூர் அக்பர்அலி முகைதீன் பள்ளி இமாம் இப்ராஹிம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சிக்கு மஸ்ஜித் முபாரக் கமிட்டித் தலைவர் க.அ. சேகுதுமான் தலைமை தாங்கினார்.
    • முதலாவதாக 2-ம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு ஜாமிஆ அன்நஜாஹ் அரபிக் கல்லூரியில் படித்து முடித்த 40 மாணவிகளுக்கு மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் எஸ். எஸ். யூ .சைபுல்லாஹ் ஹாஜா பட்டங்களை வழங்கினார்

    கடையநல்லூர்:

    கடையநல்லூர், மெயின் பஜாரில் அமைந்துள்ள மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் வளாகத்தில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் நடத்தப்படும் ஜாமிஆ அன் நஜாஹ் அரபிக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.

    மஸ்ஜித் முபாரக் கமிட்டித் தலைவர் க.அ. சேகுதுமான் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் பஷீர் அஹ்மத் உமரி தொகுத்து வழங்கினார். மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டி செயலாளர் முஹம்மது காசிம் சின்சா, பேராசிரியர்கள் ஜபருல்லாஹ் பத்ரி, முஹிபுல்லாஹ், மற்றும் ஆசிரியைகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர் முஹம்மது கோரி வரவேற்று பேசினார்.

    முதலாவதாக 2-ம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு ஜாமிஆ அன்நஜாஹ் அரபிக் கல்லூரியில் படித்து முடித்த 40 மாணவிகளுக்கு மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் எஸ். எஸ். யூ .சைபுல்லாஹ் ஹாஜா பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், அப்துல் மஜீத், கஸ்ஸாலி முஹம்மது கோரி, முஹம்மது யஹ்யா, ரபீக் அஹ்மத் மற்றும் உறுப்பினர்கள், மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கடையநல்லூர் நூருல் ஹுதா மகளிர் அரபிக் கல்லூரி 12-வது ஆண்டு ஆலிமா நூரிய்யா பட்டமளிப்பு விழா மதினா நகரில் நடந்தது.
    • கல்லூரி நிர்வாகி அப்துல் குத்தூஸ் ஆலிம் வரவேற்றார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நூருல் ஹுதா மகளிர் அரபிக் கல்லூரி 12-வது ஆண்டு ஆலிமா நூரிய்யா பட்டமளிப்பு விழா மதினா நகரில் நடந்தது. கல்லூரி முதல்வர் ஹிதாயத்துல்லாஹ் ஆலிம் தலைமை தாங்கினார். மதினா நகர் பள்ளிவாசல் தலைவர்அப்துல் மஜீத், செயலாளர் சம்சுதீன், பொருளாளர் நயினா முகம்மது, ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் ஆகியோர் முன்னி லை வகித்தனர். மாணவி ஹனா பாத்திமா கிராஅத் ஓதினார். கல்லூரி நிர்வாகி அப்துல் குத்தூஸ் ஆலிம் வரவேற்றார். பேராசிரியர் செய்யது இப்ராஹிம் ஆலிம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    வல்லம் என்.எம்.முஹம்மது சுல்தான் ஆலிம், தென்காசி மாவட்ட அரசு காஜி முஹ்யித்தீன் ஹழ்ரத், மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் வடகரை ஷாகுல் ஹமீது ஆலிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலப் பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் ஹைதர் அலி 10 மாணவிகளுக்கு ஸனது பட்டம் வழங்கி சிறப்புரை யாற்றினார். எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் சமுக சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது. விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடையநல்லூர் நகர தலைவர் செய்யது மசூது, துணை தலைவர் செய்யது இமாம், தொகுதி அமைப்பாளர் ஹைதர் அலி, அப்துல் மஜீத் ஆலிம், சாகுல் ஹமீது, பேராசிரியர் காஜா முஹையதீன் ஆலிம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளிவாசல் இமாம் அஹமது மீரான் ஆலிம் துஆ ஓதினார். அப்துல் ரசாக் நன்றி கூறினார்.

    ×