என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விடுதி சுவர்களில் ஜெய் பீம்- மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
- விடுதி சுவர்களில் ஜெய்பீம் என்று எழுதியதாக கூறி சஸ்பெண்ட்.
- ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் உத்தரவு ரத்து.
விடுதி சுவர்களில் ஜெய்பீம் என்று எழுதியதாக கூறி சஸ்பெண்ட் செய்த மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது.
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் பயிலும் மாணவர்கள், விடுதியின் சுவர்களில் ஜெய் பீம் என்று எழுதியதாக கூறி அந்நிறுவனம் இரண்டாம் இரண்டாம் ஆண்டு படிக்கும் அஸ்லம், சயீத், நஹல், இப்னு ஆகிய 3 மாணவர்களை இடைநீக்கம் செய்தது.
இந்த இடைநீக்க உத்தரவை எதிர்த்து மாணவர்கள் மூன்று பேரும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
இந்நிலையில், 3 மாணவர்களை இடைநீக்கம் செய்த ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் சஸ்பெண்ட் உத்தரவு உள்நோக்கத்தோடு பிறப்பிக்கப்பட்டுள்ளதான வாதத்தை ஏற்றும், மாணவர்களின் நடத்தையில் குறைபாடு இருந்தாலும் மற்ற சூழ்நிலைகளை கருதியும் ரத்து செய்யப்படுவதாக ஐகோர்ட்டு தெரிவித்தது.






