search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பூர் அருகே  அடையாளம் தெரியாத வாகனம் மோதி 45 வயது மதிக்கத்தக்கவர் பலி
    X

    வேப்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 45 வயது மதிக்கத்தக்கவர் பலி

    • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டின் அருகே‌ நேற்று இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக நடந்து சென்றார்.
    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் அந்த நபர் மீது மோதியது.

    கடலூர்:

    வேப்பூர் அருகே சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டின் அருகே நேற்று இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் அந்த நபர் மீது மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இறந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது காரை மோதி விபத்துக்குள்ளாக்கிய காரை ஓட்டி வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×