என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாலிபர்-முதியவர் பலி
- வாலிபர்-முதியவர் பலியாகினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
சிவகாசி அருகே போடுரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் ராமானுஜன் (வயது 22). இவர் மது போதைக்கு அடிமையாகி கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராமானுஜம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் வல்சாபுரத்தில் உள்ள தனது சித்தி சித்ரா வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். இந்த நிலையில் நேற்று காலை துலுக்கன்குறிச்சி அருகில் ரோட்டோரம் நெற்றில் காயத்துடன் ராமானுஜம் இறந்து கிடந்துள்ளார்.
இதனை கண்ட மாரிச்சாமி என்பவர் ராமானுஜத்தின் தந்தை வரதராஜிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வரதராஜ் சம்பவ இடத்திற்கு சென்று ராமானுஜம் உடலை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதில், ராமானுஜம் மோட்டார் சைக்கிளில் ஓட்டிச் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி அருகே கீழ இடையன்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (52). இவர் சென்ற மோட்டார் சைக்கிள் திடீ ெரன பழுதாகி விட்டது. அவர் சாலையோரமாக நின்றபோது அந்த வழியாக வந்த லாரி மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவலறிந்த அவரது மகள் திவ்யா முனீஸ்வரி நரிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்