search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mortuary"

    • சம்பவத்தன்று 2 பேரும் மோட்டார் சைக்கிளில் எறையூர் சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
    • தர்ஷினி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த காட்டுசெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36), அவரது மகள் தர்ஷினி (4). சம்பவத்தன்று 2 பேரும் மோட்டார் சைக்கிளில் எறையூர் சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது காட்டு செல்லூர் தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த கார் ஆறுமுகம் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த தர்ஷினி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்து ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆறுமுகம் மனைவி உஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • திருச்சுழி அரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்சாதனப்பெட்டி வசதியில்லாததால் இறந்தவர்கள் உடல்கள் துர்நாற்றம் வீசுகிறது.
    • பிரீசர் வசதி செய்து தர அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அரசு மருத்துவ–மனை செயல்பட்டு வருகி–றது. இங்கு நாள்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற் பட்ட பொதுமக்கள் பல் வேறு நோய்களுக்கான சிகிச்சைகளுக்காக மருத்து–வமனை வந்து செல்கின் றனர். மேலும் அவ்வப்போது விபத்துக்கள் மற்றும் இயற்கை மரணங்களும் நிகழ்கிறது.

    இந்த நிலையில் திருச்சுழி, நரிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் அசம்பாவிதங் கள் நிகழும் போது ஆங் காங்கே உள்ள பகுதிகளுக்கு உட்பட்ட அரசு சுகாதார நிலையங்களில் முதலுவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உடனடியாக தீவிர சிகிச் சைகளுக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். அப்போது விபத்து மற்றும் அநேக நபர்களுக்கு இதய அடைப்பு போன்ற பல்வேறு தவிர்க்க முடியாத காரணங் களால் பெரும்பாலான நேரங்களில் இறப்பு சம்ப வங்களும் நடக்கிறது.

    மேலும் திருச்சுழி அரசு மருத்துவமனையை தவிர வேறு எங்கும் பிரேத பரி–சோதனை செய்யும் வசதி இல்லை. எனவே விபத்துக–ளால் ஏற்படும் மரணம், இடி, மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் மரணம், தற் கொலை மரணங்கள் ஆகிய வற்றால் இறந்தவர்களின் உடல்களை மருத்துவமனை யில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டு அதன் பிறகு பிரேத பரிசோதனை செய் யப்பட்டு சம்மந்தப்பட்ட உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நரிக்குடி பகுதிகளில் வாகன விபத்து மற்றும் நெஞ்சுவலி காரணமாக திடீரென இரண்டு பேரும் இறந்து–போன நிலையில் பிரேத பரிசோதனைக்காக அவர்க–ளின் உடல்களை அருகருகே ஒரே அறையில் ஒரே மேடையில் பாதுகாப்பின்றி கேட்பாரற்று போடப்பட்டி–ருந்ததாக உறவினர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோ–தனை செய்யப்படாமல் பல மணி நேரங்களாக பிணவ–றையிலேயே கிடந்தது.

    அந்த உடல்களில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி பி–ணவறை பகுதிக்கே செல்ல முடியாத நிலையில் இறந்த–வர்களின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களு–டன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதல் நாள் மாலையில் இறந்து மறுநாள் மதியம் வரை ஒருநாள் முழுவதும் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோ–தனை செய்யப்படாமல் பிணவறையிலேயே கிடப் பில் போடப்பட்டதா–லும், பிரேதங்களை பாதுகாக்கும் பிரீசர் வசதி இல்லாத கார–ணத்தாலும் நேரம் செல்ல செல்ல இறந்தவர்களின் உடல்கள் கடும் துர்நாற்றம் வீசியதாகவும் உறவினர்கள் கவலை தெரிவித்தனர்.பிரேத பரிசோதனைக் காக பல மணிநேரம் காத் துக்கிடக்கும் அவலநிலையும் தொடர் கதையாகி வருவதா–கவும் குற்றம் சாட்டி வரு–கின்றனர். ஒரு வேளை பிரேத பரிசோதனை செய் வ–தற்கு பல மணி நேரங்கள் தாமதமானால் உறவினர் களே தங்களது சொந்த செலவில் குளிர்சா–தனப் பெட்டியை ரூ.2000 முதல் வரை ரூ.4000 ரூபாய் வரை வாடகை செலுத்தி இறந்த–வர்களின் உடல்கள் பிண–வறையில் கெட்டுப்போ–காமல் இருக்க பொதுமக்கள் தங்களது சொந்த செலவி–லேயே பாதுகாக்கும் நிலை–யும் நடந்து வருகிறது.

    இறந்தவர்களின் உடல் களை கிடப்பில் போட்டு பல மணி நேரங்களுக்கு பிறகு தாமதமாக உடற்கூ–ராய்வு செய்யப்படும் போது கடும் துர்நாற்றத்துடன் கூடிய இறந்தவர்களின் உடல்களை வாங்கி சென்று உறவினர்கள் இறுதி சடங் குகள் செய்து அடக்கம் செய்வதிலும் சிக்கல்கள் நீடித்து வருகிறது.மேலும் இறந்தவர்களின் உடல்களை துர்நாற்றத்துடன் கொண்டு செல்வதால் நோய்த்தொற் றுக்கு ஆளாகி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின் றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அவலநிலை தொடர்வதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பிரேதங்கள் மிகவும் தாமதமாக பரிசோதனை செய்வது குறித்து மருத்து–வர்களிடம் கேட்டாலும் சரிவர விபரங்களை தெரி விப்பதில்லை எனவும் ஆதங்கம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் திருச்சுழி அரசு மருத்துவமனையில் பிரீசர் வசதியில்லாத கார–ணத்தால் இறந்தவர்களின் உடல்களை 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள விருதுந–கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்ப–தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகி–றார்கள். ஆகவே திருச்சுழி, நரிக் குடி மற்றும் அதனை சுற்றி–யுள்ள பகுதிகளில் விபத்து மற்றும் தற்கொலை மரணங் கள் நிகழும் சமயங்களில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக தாமத–மாகும் நேரங்களில் இறந்த–வர்களின் உடல்களை கெட் டுப்போகாமல் பாதுகாப் பாக வைக்க திருச்சுழி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் குளிர்சாதன பெட்டி (பிரீசர்) வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கும், மாவட்ட கலெக் டருக்கும் பொதுமக்கள் கூட்டாக கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • திருவாடானையில் அரசு மருத்துவமனை பிணவறை பழுதடைந்த நிலையில் உள்ளது.
    • புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருவாடானை

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையானது தாலுகாவின் தலைமையிடமாகும். இந்த தாலுகாவை சுற்றிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் தாலுகா அரசு பொது மருத்துவ மனையாக திருவாடானையில் உள்ள அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது.

    இந்த மருத்துவமனையில் உள்ள பிணவறை கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பல ஆண்டுகளாகவே இந்த கட்டிடம் எந்த அடிப்படை வசதியுமின்றி பழுதடைந்து ஜன்னல், கதவு உடைந்து பாதுகாப்பின்றி உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பிணவறை கட்டிடம் பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. இது வேதனை அளிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்டு இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வுக்காக இங்கு தரையில் கிடத்தப்படும் அவலநிலை தான் உள்ளது.

    குளிர்சாதனப்பெட்டி போன்ற எந்த அடிப்படை வசதியும் இங்கு இல்லை. பழுதடைந்த இந்த கட்டிடத்தை முற்றிலும் அகற்றிவிட்டு நவீன வசதிகளோடு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ×