search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "field"

    • காரில் சிக்கி இருந்தவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் நடராஜன்.

    இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் இன்று கோயம்புத்தூருக்கு காரில் புறப்பட்டார்.

    காரை டிரைவர் நடராஜன் என்பவர் ஒட்டினார்.

    கார் தஞ்சாவூர் அருகே உள்ள 8 கரம்பை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிரே லாரி வந்து கொண்டிருந்தது.

    இதனால் டிரைவர் காரை சாலையோரம் ஒதுக்கியுள்ளார்.

    ஆனால் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கொட்டி வைத்திருந்த நெல் குவியல் மீது மோதி வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது.

    இந்த விபத்தில் 3 பேர் காரை விட்டு வெளியே வந்தனர்.

    நடராஜன், டிரைவர் நடராஜன், ஜெயலட்சுமி, சுலோட்சனா ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அப்போது அவ்வழியே சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விபத்தை பார்த்துவிட்டு காரில் சிக்கிக் கொண்டவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.

    இதனையடுத்து காயம் அடைந்தவர்களை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து கள்ளப்பெரும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விபத்தை கண்டு உடனடியாக ஆம்புலன்ஸை நிறுத்தி மீட்ட ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    • இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர்.
    • உடலை மீட்டு பாசார் கிராம நிர்வாக அலுவலர் குழந்தைவேலுவிடம் ஒப்படைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் ராமலிங்கம் (வயது 38) விவசாயி. இவர் வயல்வெளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் நீச்சல் தெரியாததால் ராமலிங்கம் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரர் ராஜா மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி ராமலிங்கத்தின் உடலை மீட்டு பாசார் கிராம நிர்வாக அலுவலர் குழந்தைவேலுவிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூதராயநல்லூர் கிராமத்தில் வயல்வெளிகளில் இரும்பு கம்பங்கள் நட்டு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.
    • சிறிய மின் கம்பத்திற்கு இடையில் மரம் ஒன்று முளைத்து கிளை விட்டு உயர்ந்து வளர்ந்து நிற்கிறது.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள பூதராயநல்லூர் கிராமத்தில் வயல்வெளிகளில் இரும்பு கம்பங்கள் நட்டு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. 30 அடி உயரமுள்ள மின்கம்பத்தில் அடியில் இருந்து 6 உயரத்திற்கு சிறிய அளவிலான மற்றொரு இரும்பு கம்பம் நடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரிசையாக நடப்பட்டுள்ள மின் கம்பங்களில் ஒன்றில் பெரிய மின் கம்பத்துக்கும் அதற்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள சிறிய மின் கம்பத்திற்கு இடையில் மரம் ஒன்று முளைத்து கிளை விட்டு உயர்ந்து வளர்ந்து நிற்கிறது.

    இந்த மின்கம்பம் அமைந்துள்ள வயல் தற்போது தரிசாக காணப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் வயலில் தண்ணீர் பாய்ச்சி விவசாய பணிகள் தொடங்கிவிடும். அப்போது இதில் வளர்ந்துள்ள மரம் மேலே உள்ள மின்சாரக் கம்பியை தொடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த மின்சார வயர்களின் வழியாக செல்லும் கிராமங்களில் மின்தடைஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

    எனவே பூதராய நல்லூர் கிராமத்தின் அருகில் வயல்வெளியில் உள்ள மின்சாரக் கம்பத்தில் வளர்ந்துள்ள மரத்தை அகற்றி சீரான மின்விநியோகத்திற்கும் எதிர்காலத்தில் மின் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளவும் வழி செய்ய வேண்டும் என்று விவசாயிகள். சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செந்தில்குமார் ராமலிங்கத்தை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
    • வயலுக்கு சென்ற ராமலிங்கம் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அடுத்த மனக்குன்னம் மேல தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45). கூலி தொழிலாளி. இவரது மனைவி காந்திமதி.இவரது எதிர்வீட்டில் செந்தில்குமார் (41) என்பவர் வசித்து வருகிறார்.

    இவர் வீட்டில் வளர்க்கும் ஆடுகள் அடிக்கடி ராமலிங்கம் வீட்டிற்கு சென்று பூச்செடிகளை மேய்ந்து விடுவது வழக்கம்.

    இதனையடுத்து, நேற்றும் அதேபோல் ஆடுகள் பூச்செடிகளை மேய்ந்த போது ராமலிங்க மும், அவரது மனைவியும், செந்தில்குமாரை சத்தம் போட்டுள்ளனர். மேலும், ஆடுகளை கட்டிப்போட்டு வளர்க்கும்படி கூறியுள்ளனர்.

    இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் ராமலிங்கத்தை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், இருவருக்கும் தகராறும் ஏற்பட்டுள்ளது.

    பின்னர், வயலுக்கு சென்ற ராமலிங்கம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பனந்தாள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எதிர்பாராத விதமாக பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து, ராமலிங்கம் மனைவி கொடுத்த புகாரின் பேரில் பந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
    • உடனடியாக சாய்ந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர கோடை கால நெல் சாகுபடியும் நடைபெறும்.

    தஞ்சை மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கோடைகால நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணி நடந்து வந்தது.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

    அதிலும் குறிப்பாக கண்டிதம்பட்டு, புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஏக்கருக்கும் மேல் கோடைகால நெற்பயிர்கள் வயலிலே தண்ணீர் தேங்கி சாய்ந்தன. மாவட்டம் முழுவதும் கணக்கிட்டால் சாய்ந்த நெற்பயிர்களின் ஏக்கர் அளவு அதிகரிக்கும். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து வந்தது. அறுவடை செய்யும் நேரத்தில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இன்னும் குறைந்தது மூன்று நாட்களுக்காவது மழை இன்றி வெயில் அடித்தால் மட்டுமே தேங்கிய தண்ணீரை வெளியேற்றி பயிர்களை ஓரளவாது காப்பாற்ற முடியும். தற்போது தண்ணீர் தேங்கி பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சாய்ந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    • சிவக்கொல்லை பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய எல்லைக்கு ட்பட்ட பகுதியான பண்ணை வயல் சாலையில், மெயின் ரோட்டில் இடது புறத்தில் சிவக்கொல்லை பகுதியில் உள்ள தரிசு நிலத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க, ஊதா கலர் கட்டம் போட்ட கைலியும், பழுப்பு நிற கட்டம்போட்ட முழுக்கை சட்டையும் ஒரு வெள்ளை பனியன் பழுப்பு நிற ஜட்டி அணிந்த ஆண் பிரேதம் ஒன்று நேற்று மாலை 5 மணியளவில் கண்ட றியப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இந்த நபர் பற்றிய விபரம் தெரிந்தால் பட்டுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகரை தொடர்பு கொள்ளலாம்.

    • விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகள் மட்டுமன்றி மண்ணும், மக்களும் நலம் பெற வேண்டும்.
    • பூட்டப்பட்ட நல்லேர் மூலம் விவசாயிகளின் வயலில் ஏர் ஓட்டினர்.

    தஞ்சாவூர்:

    விவசாயிகள் சித்திரை முதல் நாளையே விவசாயத்துக்கு உரிய புத்தாண்டாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

    சித்திரை மாதத்திலிருந்து தான் விவசாய பணிகளை மேற்கொள்வதற்கான சரியான பருவம் தொடங்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    விவசாய பணிகள் சிறப்பாக முடிந்து நல்ல விளைச்சலை கொடுத்தமைக்கு நன்றி சொல்லும் விதமாக தை முதல் நாளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

    அதே போல் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டில் புதிய பருவத்தை வரவேற்கும் விதமாக நல்லேர் பூட்டி வணங்கி கொண்டாடி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    அதிலும் குறிப்பாக தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டத்தில் சித்திரை முதல் நாளில் விவசாயிகள் நல்லேர் பூட்டி வணங்குகின்றனர்.

    அதன்படி இன்று தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன் குடிக்காடு கிராமத்தில் சித்திரை திருவிழாவின் தொடக்கமாக நல்லேர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதிதாகத் தொடங்க உள்ள விவசாய பணிகளுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட இயற்கை தொடர்பிலான எந்த பிரச்னையும் வராமல் சிறப்பாக நடைபெறவும், விளைச்சல் அமோகமாக இருக்கவும், விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகள் மட்டுமன்றி மண்ணும் மக்களும் நலம் பெற வேண்டும் என்பதற்காக வயல் பகுதிகளில் வைத்து உழவு மாடுகளில் ஏர் கட்டி, வாழை இலையில் பழங்கள், விதை பொருள்கள், இனிப்பு கலந்த அரிசி ஆகியவற்றைப் படைத்து வணங்கினர்.

    பின்னர் பூட்டப்பட்ட நல்லேர் மூலம் விவசாயிகளின் வயலில் ஏர் ஓட்டினர்.

    இதையடுத்து விதைப் பயிர்கள் ஊன்றினர்.

    இதே போல் தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் குடும்பத்தோடு திரண்டு நல்லேர் பூட்டி வணங்கினர். 

    • வயல்வெளியில் பிணத்தை தூக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • விரைவாக பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி, மேல் நாச்சிகுளம், கீழ் நாச்சிகுளம், கரட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஒரு சமுதாயத்திற்கு தனி சுடுகாடு உள்ளது.

    இந்த சுடுகாடு கோட்டை மேடு-நரிமேடு 2 கிராமங்களுக்கும் மைய பகுதியில் அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்ல முன்பு பெரியாறு பாசன கிளை கால்வாய் வழியாக படிக்கட்டு அமைக்கப்பட்டிருந்தது. அதையொட்டி உள்ள கரை ஓரமாக சென்று மயானத்திற்கு சென்று வந்தனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு கிளை கால்வாய் அகலப்படுத்தப்பட்ட போது படிக்கட்டுகள் இருந்த இடத்தில் மீண்டும் படிக்கட்டு அமைக்காமல் சமதளமாக பூசி விட்டனர்.இதனால் மயானத்திற்கு செல்லும் வழி தடைபட்டது.

    தற்போது நரிமேடு சாலை வழியாக வயல்வெளியில் பிணத்தை தூக்கி செல்ல வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்து பொதுப்பணித்துறை மூலம் சிறுபாலம் அமைக்க உத்தரவு பெறப்பட்ட பிறகும் பாலம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த அவல நிலை தொடராமல் இருக்க விரைவாக பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • அறுவடை செய்யும் விவசாயிகள் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் எந்திரத்தை இயக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்
    • பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் விபத்து எதுவும் ஏற்படுமோ என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தில், 1200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் விவசாயிகளின் வயல்வெளிகளில் ஆங்காங்கே மின் கம்பங்கள் உள்ளன.

    இந்த மின்கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் தங்களது விவசாய பணிகள் செய்வதில் அச்சப்படுகின்றனர். மேலும் அறுவடை நேரங்களில் எந்திரம் மூலம் அறுவடை செய்யும் விவசாயிகள் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் எந்திரத்தை இயக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    தற்போது சம்பா சாகுபடி முடிவடைந்த நிலையில் விவசாயிகள் தங்களது நெல் வயல்களில் பயிர், உளுந்து உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர். குறுவை சாகுபடி அதனைத் தொடர்ந்து குறுவை சாகுபடி நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் இப்பகுதிகளில் பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் விபத்து எதுவும் ஏற்படுமோ என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'மின்வாரிய துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து வயல்வெளிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்' என்றனர்.

    • ஆண்டிபட்டியில் வயல்வெளி பள்ளி கருத்தரங்கு நடந்தது.
    • வாடிப்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நடந்தது.

     வாடிப்பட்டி

    வாடிப்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் சாத்தையாறு உபவடி நில பகுதியான ஆண்டிபட்டியில் வயல்வெளி பள்ளி கருத்தரங்கு நடந்தது. வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) சுப்புராஜ் தலைமை தாங்கினார். வயல்வெளி பள்ளியின் நோக்கம் மற்றும் வட்டார அளவில் செயல்படும் திட்டங்கள் பற்றி வேளாண்மை உதவி இயக்குநர் வாசுகியும், விதை நேர்த்தி பூச்சி அடையாளம் காணுதல், பயிர் கண்காணிப்பு பற்றி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்பிரமணியும், தீமை தரும் பூச்சிகளை வயல்வெளிகளில் அடையாளம் காணுதல், பூச்சிக்கொல்லி இல்லாமல் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி மண்ணியல் துறை உதவி பேராசிரியர் கிருஷ்ணகுமார், வேளாண்மை விரிவாக்க உதவி பேராசிரியர் ஜெகதீசன் ஆகியோர் செயல்முறை விளக்கமளித்தனர்.விவசாயி வெங்கடசாமி வயலில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 30 விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் சத்தியவாணி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் சரவணகுமார், பாண்டியராஜன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் அருணா தேவி ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக வேளாண்மை துணை இயக்குனர் சுப்புராஜ் நெல்கோ 51 மற்றும் துவரை எல்.ஆர்.ஜி 52 விதைப்பண்ணையை ஆய்வு செய்தார். உதவி விதை அலுவலர் முத்துபாண்டியன் உடன் இருந்தார்.

    • வாய்க்கால் மற்றும் நடவு செய்திருக்கும் வயல் வழியாக இறந்தவர் உடலை எடுத்து செல்லும் நிலை.
    • இரண்டு நாட்கள் கழித்து இறுதி சடங்குகள் செய்ய வேண்டிய அவலம்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், பெருங்குடி ஊராட்சியில் கடந்த 80 ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் வாய்க்கால் மற்றும் நடவு செய்திருக்கும் வயல் வழியாக இறந்தவர் உடலை எடுத்து செல்லும் நிலை உள்ளது.

    இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்தவர் உடலை மழையால் வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக உள்ள தால் இரண்டு நாட்கள் கழித்து இறுதி சடங்குகள் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து கிராமமக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதே நிலை நீடித்தால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கிராமமக்கள் கூறுகின்றனர்.

    • 68 மாணவர்கள் வருவாய் மாவட்ட போட்டியில் கலந்து கொண்டனர்.
    • சீர்காழி ரெயில் நிலையத்திலிருந்து வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

    சீர்காழி:

    தரங்கம்பாடி தாலுகா, பொறையார் காட்டுசேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு திடலில் நடைபெற்று முடிந்த மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டிகளில் 100 மீ ஓட்டப்போட்டி, 200 மீ ஓட்டப்போட்டி, 400 மீ ஓட்டப்போட்டி, 100 மீ தட ஓட்டம், 400 மீ தடை ஓட்டம், நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் குண்டு எரிதல், வட்டு எறிதல் , ஈட்டி எறிதல், கோலூன்றி தாண்டுதல், 100 மீ அஞ்சல் ஓட்ட போட்டி, 400 மீ ஓட்ட போட்டி, ஆகிய அனைத்துப் போட்டிகளிலும் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 14 வயது உட்பட்ட பிரிவு, 17 வயது உட்பட்ட பிரிவு, 19 வயது உட்பட்ட பிரிவு மாணவர்கள் இப்பள்ளியிலிருந்து குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 68 மாணவர்கள் வருவாய் மாவட்ட போட்டியில் கலந்து கொண்டனர்.

    இவ்வீரர்களிலிருந்து 24 மாணவ மாணவிகள் திருவண்ணாமலையில் நடைபெறக்கூடிய தமிழக அரசின் பள்ளிக்க ல்வித்துறை சார்பில் 63வது குடியரசு தின மாநில தடகள போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள செயற்கை இழையிலான நவீன விளையாட்டு மைதானத்தில் நடைபெறக்கூடிய போட்டியில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    குறிப்பாக இப்பள்ளியைச் சார்ந்த கிருத்திகா, பவித்ரா, ஜெனிஷா, நிஷாந்தி, கிருத்திகா, அஜய் குமார், சக்திவேல், பென்னி ஆகிய மாணவர்கள் மூன்று போட்டிக்கு மேலாக வெற்றி பெற்று, பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.

    இந்த மாணவர்களை பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன், சக்திவேல், ஹரிஹரன், ராகேஷ் ஆகியோர்களை பள்ளியின் முன்னாள் செயலர் பாலசுப்பிரமணிய முதலியார், பள்ளியின் செயலர் இராமகிருஷ்ண முதலியார், பள்ளியின் குழு தலைவர் சொக்கலிங்கம், பள்ளி தலைமையா சிரியர் அறிவுடை நம்பி சீர்காழி புகைவண்டி நிலையத்திலிருந்து வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

    மாணவர்களை உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரங்கன், வரதராஜன் மற்றும் பள்ளியைச் சார்ந்த இருபால் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    ×