என் மலர்
உள்ளூர் செய்திகள்

தோகைமலை அருகே மரத்தடியில் சடலம் மீட்பு
- தோகைமலை அருகே மரத்தடியில் சடலம் மீட்கபட்டது
- இதுகுறித்து தோகைமலை போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்
கரூர்:
திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (47) கூலி தொழிலாளி. இவர் தோகைமலையில் உள்ள தனது அக்கா சந்திராவை பார்ப்பதற்காக சென்றார். இந்நிலையில் பாதிரிப்பட்டி ஒயின்ஷாப் செல்லும் சாலையில் மரத்தடியில் பெரியசாமி இறந்து கிடந்தார். இதுகுறித்து தோகைமலை போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து பெரியசாமி மனைவி பூங்கொடி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






