search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Magic"

    • கல்லூரி மாணவி-இளம்பெண் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி ஜெயராம் நகரை சேர்ந்தவர் முத்துசெல்வி. இவரது மகள் அபிதா(வயது19), தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். கல்லூரிக்கு செல்லவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டி ருந்தது. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்க ளில் தேடிப்பார்த்தும் பலனில்லை.

    இதுகுறித்து அருப்புக் கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் முத்துசெல்வி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது மகள் சுபலட்சுமி(24). அங்குள்ள ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். பெற்றோர்கள் இவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில் சுபலட்சுமி செல்போனில் அதிகநேரம் மூழ்கியிருந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் பலனில்லை.

    இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சாத்தூர் அருகே உள்ள சின்னகொள்ளபட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்புத்தாய்(73). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மகன் கணேசன் கொடுத்த புகாரின்பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பார்த்திபன் காரைக்காலில் ஜே.சி.பி. டிரைவராக வேலை செய்து வருகிறார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மலர்விழியை தேடிவருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார் பாளையம் காவேரி நகரை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி மலர்விழி வயது 34) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பார்த்திபன் காரைக்காலில் ஜே.சி.பி. டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன் தினம் பார்த்திபன் காரைக்காலில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அன்று இரவு 8.30 மணியளவில் மலர்விழி கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் எங்கும் மலர்விழி இல்லை. இதையடுத்து பார்த்திபன் தனது மனைவி மாயமானது குறித்து ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மலர்விழியை தேடிவருகிறார்கள்.

    • இளம்பெண்-வாலிபர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது30). இவர்களுக்கு திருமணமாகி கிருத்விக்(4) என்ற மகன் உள்ளார். கோபாலகிருஷ்ணன் திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் சொந்த ஊரில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்காக மனைவி, குழந்தையை அனுப்பி வைத்தார். விசேஷம் முடிந்த பின்பு அவர்களை கோபால கிருஷ்ணனின் உறவினர் திருச்சிக்கு பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் முத்துலட்சுமி திருச்சி செல்லவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் பலனில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் குமாரலிங்க புரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (28), மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் பலனில்லை. இதை தொடர்ந்து மகனை கண்டுபிடித்து தருமாறு ஆமத்தூர் போலீசில் அவரது தாய் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழுப்புரம் அருகே பள்ளி மாணவி மாயமானார்.
    • குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை பள்ளிக்கு செல்வதாக வீட்டை விட்டு சென்றவர், மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து இவரது தாய் செஞ்சி அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செஞ்சி அருகே 2 குழந்தைகளின் தாய் மாயமானார்.
    • இருளர் பாது காப்பு சங்கத்தில் பொறுப்பா ளராக இருந்த வந்த பிரியா திடீரென மாயமானார்.

    விழுப்புரம்:

    செஞ்சி தாலுக்கா பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி பிரியா (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருளர் பாது காப்பு சங்கத்தில் பொறுப்பா ளராக இருந்த வந்த பிரியா திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த ராஜேஷ், பிரியாவை பல இடங்களில் தேடினார்.

    எங்கும் கிடைக்க வில்லை. இது குறித்து நல்லாண் பிள்ளை பெற்றால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை சின்னதுரை புகார் கொடுத்தார்.
    • குமரகுரு என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறியுள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது24) பி.காம் பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் பிற்பகல்3.30 மணிக்கு பண்ருட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். இரவு வரை வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காதால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை சின்னதுரை புகார் கொடுத்தார். புகாரில் குமரகுரு (28) என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறியுள்ளனர். இது குறித்துபண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.

    • சதீஷ்குமார் கூலி வேலை செய்து வருகிறார்.
    • போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கள்ளக்குறிச்சி:  

    சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30) கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மணிமேகலை மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பாததால் கணவன் சதீஷ்குமார் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் போலீசார் மணிமேகலையை தேடி வருகின்றனர்

    • கடந்த 26-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.
    • மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தூங்கிக் கொண்டிருந்த நவீனாவை காணவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆயிபா ளையம் தேவேந்திரன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவரது மனைவி லட்சுமி. இவர்களது மூத்த மகள் கவிதா (30), இளைய மகள் நவீனா (26) இவர் பொறியியல் கல்லூரி பட்டதாரி.

    மூத்த மகள் கவிதாவை வேலகவுண்டன்பட்டி அருகே உள்ள முசிறி காட்டுக்காடு தேவேந்திரன் தெருவை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    இந்நிலையில் கவிதா வின் தங்கை நவீனா கடந்த 2 வாரமாக தனது

    அக்கா கவிதா வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலை யில் கடந்த 26-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தூங்கிக் கொண்டிருந்த நவீனாவை காணவில்லை.

    இது குறித்து கவிதா தனது தாய் லட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். லட்சுமி உறவினர்கள் வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தேடிப்பார்த்துள்ளார். ஆனால் நவீனாவை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து லட்சுமி வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் வழக்கு பதிவு செய்து நவீனா இரவில் எங்காவது தானாகவே சென்று விட்டாரா? அல்லது இரவு நேரத்தில் வெளியில் வந்த போது எவராவது கடத்திச் சென்று விட்டனரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமாரபாளையத்தில் ரம்மி மோகத்தால் வீட்டில் இருந்த 1.60 லட்சம் பணத்துடன் தொழிலாளி மாயமானார்.
    • மனைவி போலீசில் புகார்

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பூசாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவரது மனைவி கார்த்திகா (29). இருவரும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

    மணிகண்டன் ரம்மி விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் அதிக பணத்தையும் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மணிகண்டன் திடீரென மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் மணிகண்டனின் மனைவி கார்த்திகா குமார பாளையம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். அந்த புகாரில் கடந்த 27-ந் தேதி முதல் தனது கணவரை காணவில்லை எனவும், போகும்போது வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை எடுத்து சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மணிகண்டனை தேடி வருகின்றனர்.

    • உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் ஆதிமலர் இல்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் பரசுராமபுரம் பாரதிதாசன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ஆதிமலர் (வயது 47) இவரது கணவர் இறந்து விட்டதால் தனது இளைய மகள் கல்பனா பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை ஆதிமலர் வீட்டு வாசலில் கோலம் போடச்சென்றார். ஆனால் அதன் பிறகு அவரை காணவில்லை. உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் ஆதிமலர் இல்லை.

    இதையடுத்து கல்பனா தனது தாய் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 குழந்தைகளுடன் இளம்பெண், மாணவி மாயமானார்கள்.
    • இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே என்.பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி அய்யம்மாள் (வயது26). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இவர் மனைவி அய்யம்மாள் செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனை அவரது கணவர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அய்யம்மாள் அவரது 2 குழந்தைகளுடன் மாயமானார். இது குறித்து பாஸ்கரன் மேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கொட்டாம்பட்டி அருகே உள்ள சின்ன கொட்டாம்பட்டி இந்த ஊரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரை தந்தை கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விருதுநகரில் காதல் ஜோடிகள் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் ரோசல் பட்டி முத்தால் நகரை சேர்ந்தவர் முருகேஸ்வரி (வயது43). இவரது மகன் விசால் (18). இவர் பாலவநத்ததில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் முருகேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் முதல்வர் மாணவர் மற்றும் மாணவியை அழைத்து அறிவுரை கூறியுள்ளார். ஆனால் அதன் பின்னர் மாணவி ஏழாயிரம் பண்ணையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றபோது மாணவரும் அங்கு சென்றுள்ளார்.

    இது கல்லூரி முதல்வருக்கு தெரியவந்தது. அவர் இருவரையும் அழைத்து எச்சரித்துள்ளார். மேலும் இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்களை வரவழைத்து மாணவியை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் வெளியூருக்கு வேலைக்கு செல்வ தாக கூறி சென்ற விசால் பின்னர் வீடு திரும்பவில்லை.

    சந்தேகமடைந்த முருகேஸ்வரி மாணவியின் ஊருக்கு சென்று விசாரித்தார். அப்போது மாணவியும் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து மகனை கண்டுபிடித்து தருமாறு பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் முருகேஸ்வரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.எஸ்.காலனியை சேர்ந்தவர் நாகலட்சுமி (42). இவரது மகள் கார்த்திகா(19). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மாசிநாயக்கன்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த எழிலரசன் என்பவருடன் பழகி வந்தார். இதனை தாய் கண்டித்துள்ளார். இந்த நிலையில் கார்த்திகாவின் 19-வது பிறந்த நாளை குடும்பத்தினர் கொண்டாடினர். பின்னர் கல்லூரிக்கு சென்ற கார்த்திகா வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்த எழிலரசன் வீட்டிற்கு சென்று உறவினர்கள் விசாரித்தனர். அப்போது எழிலரசனை காணவில்லை என்றும் தேடி கொண்டிருப்பதாகவும் அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×