search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்கள்-கல்லூரி மாணவர் மாயம்
    X

    இளம்பெண்கள்-கல்லூரி மாணவர் மாயம்

    • இளம்பெண்கள்-கல்லூரி மாணவர் மாயமானார்கள்.
    • சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி அம்மச்சி யாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது 16 வயது மகள் திருச்சுழியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை சிவானந்த புரத்தை சேர்ந்தவர் தேவ ஜோதி. இவரது மகள் திலக வதி (20). சம்பவத்தன்று வெம்பக்கோட்டை அருகே சிப்பிப்பாறையில் தங்களது பழைய வீட்டிற்கு தாய்-மகள் வந்துள்ளனர். அங்கி ருந்த திலகவதி திடீ ரென மாயமானார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவர்

    சிவகாசி சுப்பிரமணிய புரம் காலனியை சேர்ந்தவர் முக்தீஸ்வரி. இவரது மகன் தனமகேந்திரன் (16). பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த இவர், சம்ப வத்தன்று சென்னை செல்வ தாக கூறி விட்டு சென்றார். அதன் பின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை. செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. சிவகாசி கிழக்கு போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கல்பனாதேவி(வயது38). இவரது கணவர் லட்சும ணன் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு போனில் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் கல்பனா தேவி கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். ஆனால் அப்போதும் போனில் அழைத்து மனை வியை லட்சுமணன் தகாத வார்த்தைகளை பேசி திட்டி யதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கல்பனாதேவி தாய் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். பல இடங்க ளில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதையடுத்து அவரது தாய் கஸ்தூரி அளித்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம் பட்டியை சேர்ந்தவர் லதா(45). இவரது தாயார் லட்சுமி(80). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுரைக்கு செல்வதற்காக தாயாருடன் அருப்புக்கோட்டை பஸ் நிலையத்திற்கு லதா வந்தார். அங்கு லட்சுமி மாயமானார். எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதையடுத்து லதா அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் லட்சுமியை தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள புனல்வேலி புலவர்தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகள் ராமலட்சுமி(வயது 23). இவருக்கும், சங்கரன் கோவில் அருகே உள்ள சுப்புலாபுரத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும் திருமணமாகி வானதி (2) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராமலட்சுமியை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்து சமாதானப்படுத்தும்படி கூறி மகேந்திரன் விட்டுச்சென்றுள்ளார்.

    இந்தநிலையில் பெற்றோர் வீட்டிலிருந்த ராமலட்சுமி, குழந்தையுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மகளை கண்டுபிடித்து தருமாறு தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் மகாலிங்கம் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×