search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே   2 இளம்பெண்கள் மாயம் :  போலீசார் விசாரணை
    X

    கடலூர் அருகே 2 இளம்பெண்கள் மாயம் : போலீசார் விசாரணை

    • பரங்கிப்பேட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் டிப்ளமோ நர்சிங் முடித்து வீட்டில் இருந்து வந்தார். திடீரென காணவில்லை.
    • சிதம்பரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு விடுதியில் படித்து வந்தார் மாணவி விடுதிக்கு வரவில்லை.

    கடலூர்:

    பரங்கிப்பேட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் டிப்ளமோ நர்சிங் முடித்து வீட்டில் இருந்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார். சம்பவத்தன்று இளம்பெண் திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் இளம் பெண்ணுக்கும் தஞ்சாவூர் சேர்ந்த நபர் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. அவரைக் காண சென்று விட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணாங்குப்பத்தில் தனியார் பெண்கள் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சிதம்பரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு விடுதியில் படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி விடுதிக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம் மாணவியை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×