search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்ப்பிணியான பெண் குழந்தையுடன் மாயம்
    X

    கர்ப்பிணியான பெண் குழந்தையுடன் மாயம்

    • கள்ளக்காதல் மூலம் கர்ப்பிணியான பெண் குழந்தையுடன் மாயமானார்.
    • அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் விவேகானந்தர் புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). இவரது மனைவி அழகு ராணி (25). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    கடந்த சில மாதங்களாக அழகு ராணி தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டி என்பவருடன் பழகி வந்தார். இது குறித்து கணவர் கேட்டபோது தான் சகோதர முறையில் பழகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அழகு ராணி தனது கணவரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டி தான் காரணம் என கூறியுள்ளார். இதனால் மாரிமுத்து அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த அழகு ராணி தனது 5 வயது மகளுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாரிமுத்து அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மனைவி மாயமான தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த பாண்டி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×