என் மலர்
உள்ளூர் செய்திகள்

4 பெண்கள் திடீர் மாயம்
- சிவகாசியில் 4 பெண்கள் திடீரென மாயமானார்கள்.
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி முனீஸ்நகரை சேர்ந்தவர் காளிராஜ். இவருக்கு 17 வயது மகள் உள்ளார். இவர்களது வீட்டின் அருகிலேயே காளிராஜின் மாமனார் வீடு உள்ளது.
காளிராஜின் மகள் அங்கிருக்கும் தனது சித்தி ஆனந்த ஈஸ்வரியை அடிக்கடி சென்று பார்த்து வருவார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த காளிராஜ் மகளை அழைத்து வருவதற்காக மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது மகளையும், ஆனந்த ஈஸ்வரியையும் காணவில்லை. எங்கு சென்றார்கள்? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துவேல் மனைவி இசக்கியம்மாள் மற்றும் அவரது மகள் நாகஜோதியையும் காணவில்லை என தெரியவந்தது.
மேலும் விசாரித்தபோது இந்த 4 பேரும் அந்தப்பகு தியில் உள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனி முன்பு நின்று பேசிக் கொண்டிருந்ததாக தெரியவந்தது. ஆனால் இந்த 4 பேரும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை.
இதையடுத்து பெண்கள் மாயமானது குறித்து காளிராஜ் மாரனேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.