என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
முத்தூரில் தாய் திட்டியதால் பள்ளி மாணவன் மாயம்
- சின்ன முத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாா்.
- வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெள்ளகோவில்:
முத்தூா் சின்னமுத்தூா் பழனியப்பபுரத்தில் உள்ள ஒரு தனியாா் நூற்பாலையில் அரிச்சந்திரன் என்பவா் மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் மதீஷ் (வயது 13) சின்ன முத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாா்.
இவா் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வர தாமதமாகியுள்ளது. இதனால் அவரது தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றவா் வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.இது குறித்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story