என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் உள்பட 3 பேர் மாயம்
    X

    பெண் உள்பட 3 பேர் மாயம்

    • விருதுநகர் மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள வக்கனாங்குண்டு பகுதியை சேர்ந்தவர் காளிசெல்வி (28). இவர் பட்டமேற் படிப்பு முடித்து கோவையில் சில ஆண்டுகள் வேலை பார்த்தார்.

    6 மாதங்களுக்கு முன்பு விருதுநகர் அய்யனார் நகர் பகுதியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு வந்து அங்கு தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி உறவினர் ஒருவருடன் ஜவுளி எடுக்க சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிசெல்வியை தேடி வருகின்றனர்.

    பாறைப்பட்டியை சேர்ந்தவர் பூசாரி நாயக்கர் (95). இவர் அப்பகுதியில் உள்ள ஜக்கம்மாள் கோவிலுக்கு தினசரி சென்று வருவது வழக்கம். கடந்த 21-ந் தேதி கோவிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் சக்கையா அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் முத்து காமாட்சி (37). இவருக்கு திருமாணமாகிவிட்டது. ஒரே வீட்டில் இருந்த போதும் மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது.

    திருமணத்திற்கு முன்பு வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை தந்தையிடம் கொடுத்துள்ளார். தற்போது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்ட போது அவர் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி மூலம் முத்துகாமாட்சியை காணவில்லை.பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என மனைவி உமாமகேஷ்வரி அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×