search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "free travel"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    தெலங்கானாவில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயண சேவை வழங்கப்படுகிறது.

    இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் மஹ்பூப்நகரை சேர்ந்த தேவா (வயது 45) குடிபோதையில் தனது ஆட்டோவுடன் முதல் மந்திரி முகாம் அலுவலகமான ஐதராபாத் பிரஜா பவனுக்கு வந்தார்.


    பின்னர் பெண்களுக்கான இலவச பஸ் பயணத்தால் எங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    இதனைத் தொடர்ந்து ஆட்டோவுக்கு திடீரென தீ வைத்தார். இதனை பார்த்த பிரஜா பவன் ஊழியர்கள் மற்றும் போலீசார், ஆட்டோவில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

    இருப்பினும் தீ பரவியதில் ஆட்டோ முழுவதும் எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.

    • தேர்தல் பிரசாரம் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.
    • நாளை வரை 3 நாட்களுக்கு தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 30-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    தேர்தல் பிரசாரம் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநித்தில் தேர்தலின்போது வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும் மக்களுக்கு, இலவசமாக பைக் சேவையை வழங்க உள்ளதாக ரேபிடோ நிறுவனம் அறிவித்துள்ளது.

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில், வாக்களிப்பை அதிகரிக்கவும், பொது மக்களின் சிரமங்களை குறைக்கவும் ஐதராபாத்தில் உள்ள மையங்களுக்கு இந்த சேவையை வழங்க உள்ளதாக இணை நிறுவனர் பவன் குண்டுபலி தகவல் தெரிவித்துள்ளார்.

    • அனைத்து வகை நகர பஸ்களிலும் பள்ளி மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
    • ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் மூலமாக இவை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மண்டல போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மகேந்திரகுமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், நெல்லை கோட்ட பஸ்கள் இயக்க பகுதியான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் பாதுகாப்பாக குறித்த நேரத்தில் பள்ளிக்கு சென்று வருவதற்கு வசதியாக நெல்லை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து வகை நகர பஸ்களிலும் (சாதாரண, எல்.எஸ்.எஸ் மற்றும் சொகுசு பஸ்கள்) பயணம் செய்ய அனுமதிக்கப் படுகின்றனர். இதனை ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் கடந்த 11-ந் தேதி தொடங்கப்பட்டது.
    • நாளுக்கு நாள் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வது அதிகரித்து வருகிறது.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் கடந்த 11-ந் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த 13-ந் தேதி (நேற்று முன்தினம்) மாநிலம் முழுவதும் 51.52 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்திருந்தார்கள். இதன்மூலம் பெங்களூரு பி.எம்.டி.சி. கே.எஸ்.ஆர்.டி.சி உள்பட 4 போக்குவரத்து கழகங்களுக்கும் ரூ.10 கோடியே 82 லட்சத்து 2 ஆயிரத்து 191 செலவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    இதனால் நாளுக்கு நாள் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    • கலெக்டர் உத்தரவு
    • பாடங்களை கவனமாக கேட்டு படிக்க வேண்டும் என அறிவுரை

    வேலூர்:

    வேலூர் முஸ்லிம் அரசு பள்ளியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

    அவர் பேசியதாவது:-

    பள்ளிகள் திறக்கப்பட்ட இன்று புத்தாண்டாக கருதி மாணவர்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை கவனமாக கேட்டு படிக்க வேண்டும்.

    மாணவர்கள் ஒரு குறிக்கோளை வைத்து படிக்க வேண்டும். மாணவர்களுக்கு தனிமனித ஒழுக்கம் இருக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடத்தை சரிவர கவனிக்காதது தான் தோல்விக்கு காரணம்.

    மாணவர்கள் ஒவ்வொரு வரும் தினமும் இரண்டு நிமிடம் ஒதுக்கி மனசாட்சி படி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    100-க்கு 100 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்பது இல்லை நல்ல மதிப்பெண்கள் பெற்றால் போதும் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ளலாம்.

    10 ஆண்டுகள் கழித்து நாம் எதுவாக இருக்க வேண்டும் என்பதை இப்போது தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்க ளுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

    மாணவர்களுக்கு ஆசிரி யர்கள் நல்லொழுக்கத்தை ஏற்படுத்தி தர வேண்டும். மாணவர்கள் படிப்பு, விளையாட்டு, ஒழுக்கம், பொது அறிவு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    வேலூர் மாவட்டத்தில் இன்று 6 முதல் 12-ம் வகுப்பு வரை இன்று வகுப்புகள் தொடங்கியது. 4 லட்சத்து 44 ஆயிரம் பாட புத்தகங்கள், 99 ஆயிரத்து 491 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    நீண்ட தூரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாண வர்கள் சிரமம் அடைந்து வந்ததாக புகார் வந்தது.

    மாணவர்கள் சீருடை அணிந்து வந்தாலே அவர்களை பஸ்சில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டுமென போக்குவரத்து துறை பொது மேலாளருக்கு அறிவுறுத்தி உள்ளோம். இன்னும் 10 நாட்களில் மாணவர்கள் எளிதாக பள்ளிக்கு வந்து செல்ல ஏற்பாடு செய்து தரப்படும்.

    வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 3.36 கோடி பெண்கள் இலவச பயணம் செய்கின்றனர்.
    • திருக்குறளை திருவள்ளுவர் படத்துடன் அனைத்து அரசு பஸ்களிலும் இடம் பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ராமநாதபுரம்

    முதல்-அமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 5 திட்டங்களை செயல்படுத்து வதற்கு கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவச பயண திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு நிதிசுமை குறைந்து பயனடைவார்கள்.

    இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், அவருடன் ஒரு உதவியாளர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இலவசமாக பயணம் செய்பவர்களுக்கு அரசு டவுன் பஸ்களில் கட்டணமில்லா தனி பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் 6 டெப்போக்கள் செயல்பட்டு வருகின்றன. டவுன் பஸ்கள் ஏறத்தாழ 120 வழித்தடங்களிலும், புறநகர் பஸ்கள் 200க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுநாள் வரை 3 கோடி 36 லட்சத்து 52 ஆயிரத்து 835 பெண்கள், 2 லட்சத்து 32 ஆயிரத்து 613 மாற்றுத்திறனாளிகள், 10 ஆயிரத்து 411 மாற்றுத்திறனாளிகள் உடன் வரும் உதவியாளர்கள், 12 ஆயிரத்து 767 மூன்றாம் பாலினர்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பெண்கள் இத்திட்டத்தின் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் செய்து பயனடைந்து வருகின்றனர்.

    அதே போல, தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் உலகப் பொதுமறையாம் திருக்குறளை அய்யன் திருவள்ளுவர் படத்துடன் அனைத்து அரசு பஸ்களிலும் இடம் பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வினோத் தெரிவித்துள்ளார்.

    1-ந் தேதி முதல் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் விருப்பத்தை பொறுத்தே காப்பீடு (இன்சூரன்ஸ்) செய்யப்படும். #IRCTC #Insurance
    சென்னை:

    இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலம் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ரெயில் பயணத்தின்போது எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளில் சிக்கி இறப்பவர்களுக்கும், படுகாயமடைபவர்களுக்கும் உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக ரெயில்வே நிர்வாகம் பயணிகளிடம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ரூ.1 மட்டும் காப்பீடு தொகையாக வசூலித்து வருகிறது. இணையதளம் மூலம் பெறப்படும் இ-டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த வசதி செய்யப்பட்டு வருகிறது. ரெயில்வே கவுண்ட்டர்களில் எடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு காப்பீடு கட்டண திட்டம் நடைமுறையில் இல்லை.

    இந்தநிலையில் வருகிற 1-ந்தேதி முதல் இணையதளம் மூலம் இ-டிக்கெட்டுகள் பெறுபவர்களுக்கு அவர்களது விருப்பத்தின் பேரிலேயே காப்பீடு செய்யப்பட உள்ளது. இதற்காக காப்பீடு வேண்டுமா? வேண்டாமா? என்று ஒரு பகுதி இடம்பெற்றிருக்கும். அதில் பயணிகள் தங்கள் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

    காப்பீடு செய்தவர்கள் விபத்து ஏற்படும் பட்சத்தில் இறக்க நேரிட்டால் ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.7.50 லட்சமும் இழப்பீடு தொகையாக வழங்கப்படும்.

    இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.   #IRCTC #Insurance 
    சென்னை மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.#chennaimetrotrain
    சென்னை:

    சென்னையில் நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் சின்னமலை இடையிலான மெட்ரோ ரெயில் சேவையின் புதிய வழித்தடம் கடந்த 25-ந் தேதி தொடங்கப்பட்டது. இதனையடுத்து அன்றைய தினம் இலவச பயணத்துக்கு மெட்ரோ ரெயில் நிறுவனம் அனுமதித்தது. கூடுதலாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இந்த இலவச பயணம் நீடிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பு பொதுமக்கள் இடையே குதூகலத்தை ஏற்படுத்தியது. கோடை விடுமுறை என்பதாலும் வார கடைசி நாட்கள் என்பதாலும் சனிக்கிழமையன்று 1 லட்சத்து 20 ஆயிரத்து 500 பேரும், ஞாயிற்றுக்கிழமையன்று 1 லட்சத்து 84 ஆயிரத்து 518 பேரும் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தினர். இதனால் ரெயிலில் கூட்டம் அலைமோதியது. குழந்தைகளுடன் பலர் மெட்ரோ ரெயிலில் பலமுறை பயணம் செய்தனர்.

    இந்த நிலையில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் பொது மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் 4-வது நாளாக நேற்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

    இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அலுவலகம் செல்வோர் பலர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.

    மெட்ரோ ரெயிலில் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் உற்சாகமாக பயணித்த காட்சி

    இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில்:-

    ‘மெட்ரோ ரெயிலின் குளு குளு பயணம் மற்ற ரெயில் பயணங்களை விட வித்தியாசமாக இருக்கிறது. இந்த அனுபவம் முற்றிலும் புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளது. இலவசமாக பயணம் செய்வது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. அலுவலகம் செல்லும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் பயணம் செய்ய முடிகிறது’

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரெயிலில் மக்களின் கூட்டம் அலைமோதியது. மக்கள் நிற்க கூட இடம் இன்றி பயணம் செய்தனர்.

    ஆனால் 4-வது நாளான நேற்று இலவச பயணம் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கடந்த 3 நாட்களை விட நேற்று பயணிகளின் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. பயண கட்டணம் கூடுதலாக உள்ளதால் மக்கள் எந்த அளவு மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்துவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயிலில் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் (செவ்வாய்க் கிழமை) பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. #chennaimetrotrain
    மெட்ரோ ரெயிலில் நேற்று 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இலவச பயணம் செய்தனர். #ChennaiMetroTrain #Metrofreetravel

    சென்னை:

    சென்னை நேரு பூங்கா முதல் விமான நிலையம் வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல்- நேரு பூங்கா இடையேயும், சைதாப்பேட்டை ஏஜி டி.எம்.எஸ். இடையேயும் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து கடந்த 25-ந்தேதி முதல் இன்றுவரை மெட்ரோ ரெயிலில் பயணிகள் இலவசமாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

    இலவச பயணம் தொடர்பாக முதல் நாளில் நிறைய பேருக்கு தெரியாது என்பதால் அன்று பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. நேற்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதால் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    சென்னை பயணிகளும், வெளியூரில் இருந்து வந்தவர்களும் குடும்பம் குடும்பமாக வந்து மெட்ரோ ரெயிலில் ஏறி பயணம் செய்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் மெட்ரோ ரெயில் பெட்டிக்குள் அங்கு மிங்கும் நடந்து சென்று குதூகலித்தனர்.


    இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மெட்ரோ ரெயிலுக்குள் பயணித்த படியே செல்பி எடுத்துக் கொண்டனர். பயணிகள் கூட்டம் அலை மோதினாலும் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் பொறுமையாக காத்து நின்று அதில் ஏறி பயணித்தனர். சுற்றுலா செல்வது போல அவர்கள் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் ஏறிச் சென்று மீண்டும் அந்த இடத்துக்கே வந்து இறங்கினார்கள். கோடை விடுமுறை காரணமாக மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பயணித்தனர்.

    முதல் நாளில் 50 ஆயிரம் பேர் இலவசமாக பயணம் செய்தனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்தே மெட்ரோ ரெயிலில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. இன்று காலை 10 மணிவரை 30 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். அதாவது 3 நாளில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

    இன்றுநேரம் செல்ல செல்ல பயணிகளின் வருகை அதிகரித்தது. இன்று ஒரே நாளில் மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 1½ லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ட்ரல் முதல் விமான நிலையம்வரையும், ஏ.ஜி. டி.எம்.எஸ். முதல் விமான நிலையம் வரையும் இலவசமாக செல்லலாம் என்பதால் பயணிகள் முழு உற்சாகத்துடன் பயணத்தை மேற்கொண்டனர். #Metrotrain

    மெட்ரோ ரெயிலில் நேற்று இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதால் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் நேரு பூங்கா-சென்டிரல், ஏ.ஜி.டி.எம்.எஸ்.-சின்னமலை இடையே மெட்ரோ ரெயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதையொட்டி, சோதனை அடிப்படையில் நேற்று முன்தினமும், நேற்றும் இலவச பயணம் செய்ய மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனுமதித்தது.



    இதனால் நேற்று மெட்ரோ ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது கோடை விடுமுறையாக இருப்பதால், பலர் ஆர்வமுடன் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் நீண்ட வரிசையில் நின்று பயணிகள் மெட்ரோ ரெயிலில் ஏறி பயணம் செய்தனர்.

    அதேபோல், சில ரெயில் நிலையங்களில் ஏறி, இறங்குவதில் பயணிகள் திக்குமுக்காடினார்கள். அந்த அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெற்றோருடன் வந்திருந்த குழந்தைகள், சிறுவர் மற்றும் சிறுமிகள் குதூகலத்துடன் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ததை பார்க்க முடிந்தது.

    இலவச பயணம் என்பதால், பலரும் ஒரு முறைக்கு பல முறை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். சென்டிரலில் இருந்து விமானநிலையம், பரங்கிமலைக்கும், ஏ.ஜி.டி.எம்.எஸ்.-ல் இருந்து விமான நிலையத்துக்கும் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணத்தை மேற்கொண்டனர்.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து செல்வதற்கு ஏதுவான வசதிகளுடன் மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களில் இருப்பது, வெளிநாடுகளில் இருப்பது போன்ற அனுபவத்தை தருவதாக பலரும் தெரிவித்தனர்.



    இதுகுறித்து மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பயணிகள் சிலர் கூறியதாவது:-

    தேனாம்பேட்டையை சேர்ந்த அக்ரிதி:-

    மெட்ரோ ரெயில் சேவை அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் எதிர்பார்த்ததை விட ரொம்ப அழகாய் வடிவமைத்து இருக்கிறார்கள். சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் நிலையங்கள் ஒவ்வொன்றும் விமான நிலைய தோற்றத்தை போலவே இருக்கிறது.

    இதில் பயணம் செய்வதால் நேரம் மிச்சமாகிறது. நாங்கள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்வது வழக்கம். அந்தவகையில் தேனாம்பேட்டையில் இருந்து விமானநிலையத்துக்கு காரில் செல்வோம். போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்போம். அது இனிமேல் எங்களுக்கு தேவை இருக்காது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல், ‘குளு குளு’ வசதியுடன் விமானநிலையத்துக்கு செல்ல அருமையான வழியை மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஏற்படுத்தி தந்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சவுகார்பேட்டையை சேர்ந்த மகாலட்சுமி:-

    என் அப்பாவுடன் வந்தேன். முதல் முறையாக மெட்ரோ ரெயிலில் பயணிக்கிறேன். இந்த பயணம் வியப்பை ஏற்படுத்தியது. நான் இப்படி இருக்கும் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. சாதாரணமான மின்சார ரெயில் போல தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை. எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்துவிட்டேன்.

    இதில் பயணம் செய்தால், சென்னையையே ஒரு முறை சுற்றி வந்தது போல் இருக்கிறது. சுரங்கப்பாதையில் ரெயில் செல்லும்போது ரொம்ப திரில்லாக இருந்தது. கட்டணத்தை கொஞ்சம் குறைத்தால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    வேளச்சேரியை சேர்ந்த நாராயணன்:-

    மெட்ரோ ரெயில் பயணம் சூப்பராக இருந்தது. நான் தினமும் வேளச்சேரியில் இருந்து தேனாம்பேட்டைக்கு வேலைக்காக வருவேன். இனி கிண்டி வரை வந்து, அங்கிருந்து மெட்ரோ ரெயிலில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ஏ.ஜி.டி.எம்.எஸ் ரெயில் நிலையத்தில் இறங்கி பணிக்கு செல்வேன்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயணிக்க ஏதுவான சேவையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அளித்து இருக்கிறது. கட்டணம் அதிகமாக இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் பயணிக்க வேண்டும் என்பதால் அதை கொஞ்சம் குறைக்கலாம். மற்றபடி இதில் குறை சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் முதல் விமான நிலையம் வரையில் மெட்ரோ ரெயிலில் 3 நாட்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ChennaiMetroTrain #Metrofreetravel

    சென்னை:

    சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 28 கி.மீ. தூரத்திற்கு பணிகள் முடிந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    நேரு பூங்கா, எழும்பூர், சென்ட்ரல் (2.7 கி.மீ.) மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். (4.5.கி.மீ) வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதையடுத்து இந்த 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம் சென்ட்ரலில் இருந்து இனி நேரடியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியும். 25 கி.மீ தூரமுள்ள இந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரத்தில் பயணம் செய்யலாம். சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை 2 வழிப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை இனி செயல்படும்.

    சென்ட்ரல் வரையில் புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டதையொட்டி இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் எந்த ரெயில் நிலையத்தில் வேண்டுமென்றாலும் ஏறி இறங்கலாம். #ChennaiMetroTrain #Metrofreetravel
    ×