search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Central"

    • பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்வதற்கு பெரிதும் அவதிப்பட்டனர்.
    • புதிய சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் மெட்ரோ ரெயில் சார்பில் நடந்தது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் அருகே பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல நகரும் படிக்கட்டு வசதியுடன் புதிய சுரங்கப் பாதை விரைவில் திறக்கப்படவுள்ளது.

    சென்னை சென்ட்ரல் மெமோரியல் ஹால் அருகில் வாகன நெரிசல் தினமும் அதிகரித்து வருகிறது. இதன் அருகில் அமைந்து உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் இந்த சிக்னல் பகுதியில் நீண்ட நேரமாக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டு வந்தது.

    இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்வதற்கு பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் அங்கு பொது மக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல வசதியாக நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) புதிய சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் மெட்ரோ ரெயில் சார்பில் நடந்தது.

    இந்த புதிய சுரங்கப் பாதை பணிகள் முழுவதும் நிறைவடைந்து உள்ளன.பொதுமக்கள் சுரங்க நடைபாதையில் எளிதில் செல்ல நகரும்படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வசதி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய சுரங்கப்பாதை வழியாக பொது மக்கள் சாலையை கடந்து மறுபுறம் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு எளிதில் செல்லலாம். இதற்காக புதிய சுரங்கப் பாதையின் நுழைவு வாயில் அருகே இரு புறமும் 2 'எஸ்கலேட்டர்கள்' மற்றும் கிரானைட் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. சுரங்கப்பாதையின் சுவர்களில் பொதுமக்களை கவரும் வகையில் அழகிய இயற்கை காட்சி ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

    இந்த புதிய சுரங்க நடை பாதையால் பொதுமக்கள் நீண்ட நேரம் அங்குள்ள சிக்னல் பகுதியில் காத்திருப்பது தவிர்க்கப்பட உள்ளது.

    பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த நவீன சுரங்க நடைபாதையை விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    சென்னை சென்டிரல்-நாகர்கோவில் இடையே அதிவேக ரெயில் வாரம் 3 முறை இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல்-நாகர்கோவில் (12689/12690) அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் வாரம் ஒரு முறை மட்டுமே சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்பட்டு வந்தது. ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஒரே ரெயிலும் இதுதான். இதனால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லூரிக்கும் செல்லும் மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த ரெயில் பேருதவியாக இருக்கிறது. இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தெற்கு ரெயில்வே வாரத்திற்கு 3 முறை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரலில் இருந்து புறப்படும் ரெயில் திருச்சிக்கு செல்லாமல் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக நாகர்கோவில் சென்றடையும். இதேபோல் மறுமார்க்கமாக புறப்படும் ரெயில் திருச்சி செல்லாமல் சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரலுக்கு வந்தடையும். தெற்கு ரெயில்வேயின் எதிர்வரும் கால அட்டவணையில் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    சென்னை சென்ட்ரல், திருச்சி உள்ளிட்ட 36 முக்கிய ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல், திருச்சி, டெல்லி, மும்பை சென்ட்ரல், ஹவுரா, அலகாபாத், லக்னோ, குவாஹட்டி, செகந்திராபாத், விசாகப்பட்டினம், புவனேஷ்வர், புனே, மைசூரு, ஜெய்ப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது.

    சுற்றுச்சூழலை பாதுகாக் கும் வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க ரெயில் பயணிகளுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாமல் அவற்றிற்கு பதிலாக மாற்று பொருட்களுளை உபயோகிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக ‘ஐ.எஸ்.ஏ. 14001’ தர சான்றிதழ் பெறுவதற்காக 36 ரெயில் நிலையங்களில் 5 சதவீத நிலையங்களை கண்டறிந்து தூய்மைப் பணி, குடிநீர் வசதி, மின்சார சிக்கன நடவடிக்கை போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது.ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், பார்வையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க சுகாகாரத்துறை மூலம் கண்காணிக்கப்படுவார்கள். ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராவை பயன்படுத்தி கண் காணித்து இத்திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக் கப்படுகிறது.

    முதலில் 36 ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தும் வகை யில் இத் திட்டம் நிறை வேற்றப்படுகிறது. ரெயில் நிலையங்களில் திடக்கழிவு பொருட்களையும் பிளாஸ் டிக் பொருட்களையும் தவிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து ஐ.எஸ்.ஒ. 14001 தர சான்றிதழை பெறுவதே ரெயில்வே துறையின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இத்திட்டத்தை செயல் படுத்த நோடல் ஆபீசர் நியமிக்கப்பட இருக்கிறார்கள். ரெயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், பிளாட்பாரங்கள், உடனுக்குடன் சுத்தம் செய் யப்பட வேண்டும், உறை கழிவுகள், திண்பண்டங்களின் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களுக் கும் தடை விதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ரெயில் நிலையங்கள் தூய்மையாகிவிடும் என்ப தோடு மட்டுமின்றி சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும் என்பது உறுதி.

    சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்துக்கு 2 வழித்தடங்களில் நேரடி மெட்ரோ ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படுகிறது. #MetroTrain #ChennaiAirport
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமானநிலையம்வரை, உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

    டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை 10 கி.மீ சுரங்க வழித்தட பாதையில் விரைவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. 45 கி.மீ தூரத்துக்கான முதல்கட்ட ரெயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

    சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்துக்கு அண்ணாசாலை வழியாக நேரடி மெட்ரோ ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படுகிறது. ஏற்கனவே சென்ட்ரலில் இருந்து எழும்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக நேரடி மெட் ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    50 நிமிடங்களில் நேரடியாக பயணிகள் விமான நிலையத்தை சென்றடைந்து விடுவார்கள். இதனால் பொதுமக்கள், பயணிகள் இடையே பெரிதும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்ட்ரலில் இருந்து விமானநிலையத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை நேருபார்க், செனாய்நகர், அண்ணாநகர், வடபழனி, ஆலந்தூர் வழியாக 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்பட்டு வருகிறது. டி.எம்.எஸ்-வண்ணாரப் பேட்டை வழித்தட பாதையில் விரைவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படுகிறது.

    இதையொட்டி சென்ட்ரலில் இருந்து விமானநிலையத்துக்கு அண்ணாசாலை, டி.எம்.எஸ், சின்னமலை, வழியாக நேரடி மெட்ரோ ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படுகிறது. இதனால் 2 வழித்தடங்கள் மூலம் நேரடியாக விமான நிலையத்தை பயணிகள் எளிதில் சென்றடையலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain #ChennaiAirport
    மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகளை கவர சிறப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. சிறுவர்களுக்காக பல்வேறு விளையாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. #MetroTrain #ChennaiMetro #CMRL

    சென்னை:

    சென்னை மாநகர போக்கு வரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ பயணிகள் சேவை தற்போது நடந்து வருகிறது.

    பயணிகள், பொது மக்கள் இடையே மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு சிறப்பு வசதிகளை மெட்ரோரெயில் நிர்வாகம் உருவாக்கிஉள்ளது.

    வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம், ஆலந்தூர் உள்ளிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகளுக்காக சிறப்பு புகைப்பட கண்காட்சி, ஓவிய கண்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்காக பல்வேறு விளையாட்டு முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    சமூக, பாரம்பரியங்கள் குறித்த புகைப்பட, ஓவிய காட்சிகள் பயணிகளை பெரிதும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால் தொடங்கி வைத்தார். மெட்ரோ ரெயில் நிலையங்களில் இதனை பொது மக்கள், பயணிகள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மெட்ரோ ரெயிலில் நேற்று 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இலவச பயணம் செய்தனர். #ChennaiMetroTrain #Metrofreetravel

    சென்னை:

    சென்னை நேரு பூங்கா முதல் விமான நிலையம் வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல்- நேரு பூங்கா இடையேயும், சைதாப்பேட்டை ஏஜி டி.எம்.எஸ். இடையேயும் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து கடந்த 25-ந்தேதி முதல் இன்றுவரை மெட்ரோ ரெயிலில் பயணிகள் இலவசமாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

    இலவச பயணம் தொடர்பாக முதல் நாளில் நிறைய பேருக்கு தெரியாது என்பதால் அன்று பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. நேற்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதால் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    சென்னை பயணிகளும், வெளியூரில் இருந்து வந்தவர்களும் குடும்பம் குடும்பமாக வந்து மெட்ரோ ரெயிலில் ஏறி பயணம் செய்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் மெட்ரோ ரெயில் பெட்டிக்குள் அங்கு மிங்கும் நடந்து சென்று குதூகலித்தனர்.


    இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மெட்ரோ ரெயிலுக்குள் பயணித்த படியே செல்பி எடுத்துக் கொண்டனர். பயணிகள் கூட்டம் அலை மோதினாலும் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் பொறுமையாக காத்து நின்று அதில் ஏறி பயணித்தனர். சுற்றுலா செல்வது போல அவர்கள் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் ஏறிச் சென்று மீண்டும் அந்த இடத்துக்கே வந்து இறங்கினார்கள். கோடை விடுமுறை காரணமாக மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பயணித்தனர்.

    முதல் நாளில் 50 ஆயிரம் பேர் இலவசமாக பயணம் செய்தனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்தே மெட்ரோ ரெயிலில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. இன்று காலை 10 மணிவரை 30 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். அதாவது 3 நாளில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

    இன்றுநேரம் செல்ல செல்ல பயணிகளின் வருகை அதிகரித்தது. இன்று ஒரே நாளில் மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 1½ லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ட்ரல் முதல் விமான நிலையம்வரையும், ஏ.ஜி. டி.எம்.எஸ். முதல் விமான நிலையம் வரையும் இலவசமாக செல்லலாம் என்பதால் பயணிகள் முழு உற்சாகத்துடன் பயணத்தை மேற்கொண்டனர். #Metrotrain

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் முதல் விமான நிலையம் வரையில் மெட்ரோ ரெயிலில் 3 நாட்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ChennaiMetroTrain #Metrofreetravel

    சென்னை:

    சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 28 கி.மீ. தூரத்திற்கு பணிகள் முடிந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    நேரு பூங்கா, எழும்பூர், சென்ட்ரல் (2.7 கி.மீ.) மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். (4.5.கி.மீ) வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதையடுத்து இந்த 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம் சென்ட்ரலில் இருந்து இனி நேரடியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியும். 25 கி.மீ தூரமுள்ள இந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரத்தில் பயணம் செய்யலாம். சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை 2 வழிப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை இனி செயல்படும்.

    சென்ட்ரல் வரையில் புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டதையொட்டி இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் எந்த ரெயில் நிலையத்தில் வேண்டுமென்றாலும் ஏறி இறங்கலாம். #ChennaiMetroTrain #Metrofreetravel
    பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வருகிற 22-ந்தேதி சென்னை சென்டிரலில் இருந்து கோவை நோக்கி சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்பட இருக்கிறது.
    சென்னை:

    பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வருகிற 22-ந்தேதி இரவு 10.30 மணிக்கு, சென்னை சென்டிரலில் இருந்து கோவை நோக்கி சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்: 06043) இயக்கப்பட இருக்கிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 6.45 மணிக்கு கோவையை சென்றடையும்.

    இந்த சிறப்பு கட்டண ரெயிலில் ஒரு மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி, 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 9 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்ப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. #tamilnews
    ×