search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minampakkam Airport"

    மெட்ரோ ரெயிலில் நேற்று 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இலவச பயணம் செய்தனர். #ChennaiMetroTrain #Metrofreetravel

    சென்னை:

    சென்னை நேரு பூங்கா முதல் விமான நிலையம் வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல்- நேரு பூங்கா இடையேயும், சைதாப்பேட்டை ஏஜி டி.எம்.எஸ். இடையேயும் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து கடந்த 25-ந்தேதி முதல் இன்றுவரை மெட்ரோ ரெயிலில் பயணிகள் இலவசமாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

    இலவச பயணம் தொடர்பாக முதல் நாளில் நிறைய பேருக்கு தெரியாது என்பதால் அன்று பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. நேற்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதால் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    சென்னை பயணிகளும், வெளியூரில் இருந்து வந்தவர்களும் குடும்பம் குடும்பமாக வந்து மெட்ரோ ரெயிலில் ஏறி பயணம் செய்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் மெட்ரோ ரெயில் பெட்டிக்குள் அங்கு மிங்கும் நடந்து சென்று குதூகலித்தனர்.


    இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மெட்ரோ ரெயிலுக்குள் பயணித்த படியே செல்பி எடுத்துக் கொண்டனர். பயணிகள் கூட்டம் அலை மோதினாலும் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் பொறுமையாக காத்து நின்று அதில் ஏறி பயணித்தனர். சுற்றுலா செல்வது போல அவர்கள் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் ஏறிச் சென்று மீண்டும் அந்த இடத்துக்கே வந்து இறங்கினார்கள். கோடை விடுமுறை காரணமாக மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பயணித்தனர்.

    முதல் நாளில் 50 ஆயிரம் பேர் இலவசமாக பயணம் செய்தனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்தே மெட்ரோ ரெயிலில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. இன்று காலை 10 மணிவரை 30 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். அதாவது 3 நாளில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

    இன்றுநேரம் செல்ல செல்ல பயணிகளின் வருகை அதிகரித்தது. இன்று ஒரே நாளில் மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 1½ லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ட்ரல் முதல் விமான நிலையம்வரையும், ஏ.ஜி. டி.எம்.எஸ். முதல் விமான நிலையம் வரையும் இலவசமாக செல்லலாம் என்பதால் பயணிகள் முழு உற்சாகத்துடன் பயணத்தை மேற்கொண்டனர். #Metrotrain

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் முதல் விமான நிலையம் வரையில் மெட்ரோ ரெயிலில் 3 நாட்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ChennaiMetroTrain #Metrofreetravel

    சென்னை:

    சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 28 கி.மீ. தூரத்திற்கு பணிகள் முடிந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    நேரு பூங்கா, எழும்பூர், சென்ட்ரல் (2.7 கி.மீ.) மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். (4.5.கி.மீ) வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதையடுத்து இந்த 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம் சென்ட்ரலில் இருந்து இனி நேரடியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியும். 25 கி.மீ தூரமுள்ள இந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரத்தில் பயணம் செய்யலாம். சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை 2 வழிப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை இனி செயல்படும்.

    சென்ட்ரல் வரையில் புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டதையொட்டி இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் எந்த ரெயில் நிலையத்தில் வேண்டுமென்றாலும் ஏறி இறங்கலாம். #ChennaiMetroTrain #Metrofreetravel
    ×