search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goverment Bus"

    • அனைத்து வகை நகர பஸ்களிலும் பள்ளி மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
    • ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் மூலமாக இவை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மண்டல போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மகேந்திரகுமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், நெல்லை கோட்ட பஸ்கள் இயக்க பகுதியான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் பாதுகாப்பாக குறித்த நேரத்தில் பள்ளிக்கு சென்று வருவதற்கு வசதியாக நெல்லை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து வகை நகர பஸ்களிலும் (சாதாரண, எல்.எஸ்.எஸ் மற்றும் சொகுசு பஸ்கள்) பயணம் செய்ய அனுமதிக்கப் படுகின்றனர். இதனை ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாபநாசம் பணிமனையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் 506 என்ற பஸ், கரம்பை பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை.
    • 200-க்கும் மேற்பட்டோர் திடீரென பஸ்களை மறித்து சாலை மறியல் செய்தனர்.

    சிங்கை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள கரம்பை பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றி பொட்டல் மூலச்சி, மலையன்குளம். மாத உடையார் குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமத்தில் இருந்து நெல்லை, தென்காசி ஆகிய பகுதிகளில் மக்கள் வேலை செய்கிறார்கள். மேலும் இப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் நகர பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகிறார்கள். இதற்காக பாபநாசம் பணிமனையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் 506 என்ற பஸ், கரம்பை பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை. இதனால் அப்பகுதி பொது மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

    பஸ் நின்று செல்லாததை கண்டித்து இன்று வக்கீல் பார்த்திபன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கரம்பை பகுதியில் திடீரென பஸ்களை மறித்து சாலை மறியல் செய்தனர்.

    உடனே சம்பவ இடத்திற்கு சேரன்மகாதேவி டி.எஸ்.பி.ராம கிருஷ்ணன் தலைமை யில் கல்லி டைக்குறிச்சி போலீசார், அம்பை தாசில்தார் மற்றும் பாபநாசம் பணிமனை நிர்வாக இயக்குனர், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆகியோர் சென்று மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அந்த பஸ் குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியல் கை விடப்பட்டது. 

    • தென்காசி - நெல்லை நான்கு வழிச்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக பஸ் பாய்ந்தது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் பள்ளத்தில் சிக்கியிருந்த பஸ்சை மீட்டனர்.

    பாவூர்சத்திரம்:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், நெல்லை வழியாக ராமேஸ்வரம் செல்லும் அரசு பஸ் இன்று அதிகாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.

    பஸ்சை டிரைவர் மாடசாமி ஓட்டி வந்தார். பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது தென்காசி - நெல்லை நான்கு வழிச்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக பஸ் பாய்ந்தது.

    இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறல் சத்தம் போட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இன்றி உயிர்தப்பினர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் பள்ளத்தில் சிக்கியிருந்த பஸ்சை மீட்டனர்.

    இதுகுறித்து பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பணி நடந்து வருவதை குறிப்பிடும் வண்ணம் அதற்கான எச்சரிக்கை பலகைகள், பாதுகாப்பு மற்றும் பணி உபகரணங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். எவ்வித விபத்துக்களும் இன்றி பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×