search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கோட்டத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் அனைத்து நகர பஸ்களிலும் பயணம் செய்ய அனுமதி- போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல்
    X

    நெல்லை கோட்டத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் அனைத்து நகர பஸ்களிலும் பயணம் செய்ய அனுமதி- போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல்

    • அனைத்து வகை நகர பஸ்களிலும் பள்ளி மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
    • ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் மூலமாக இவை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மண்டல போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மகேந்திரகுமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், நெல்லை கோட்ட பஸ்கள் இயக்க பகுதியான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் பாதுகாப்பாக குறித்த நேரத்தில் பள்ளிக்கு சென்று வருவதற்கு வசதியாக நெல்லை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து வகை நகர பஸ்களிலும் (சாதாரண, எல்.எஸ்.எஸ் மற்றும் சொகுசு பஸ்கள்) பயணம் செய்ய அனுமதிக்கப் படுகின்றனர். இதனை ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×