search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி
    X

    பலியான சிறுமிகள்.

    ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

    • குடமுருட்டி ஆற்றில் துணி துவைத்து குளித்து விட்டு வருவதாக சென்றனர்.
    • சிறுமிகளை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்து விட்டதாக கூறினார்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்து வேலி, காமராஜ் காலனி, கீழத்தெருவை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி திருநாவுக்கரசு மகள் பிரித்திகா (வயது14) இவர் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அதே தெருவை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் மகள் குணசுந்தரி (16).

    இவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    2 பேரும் நேற்று காலை அருகே உள்ள குடமுருட்டி ஆற்றில் துணி துவைத்து குளித்து விட்டு வருவதாகவும், வீட்டில் இருந்த ஆடுகளை மேய விட்டு வருவதாகவும் சொல்லிவிட்டு ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றனர்.

    நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவர்களை தேடி குடமுருட்டி ஆற்றுப்பகு திக்கு சென்றனர்.

    குடமுருட்டி ஆற்றுப்ப குதியில் சிறுமிகள் கொண்டு சென்ற இரண்டு அலுமினிய பாத்திரங்களும் மணலில் வைக்கப்பட்டிருந்தன.

    துணிகள் துவைத்து காய வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    2 பேரையும் காணவில்லை. உடனடியாக அங்கிருந்த இளைஞர்கள் ஆற்றில் குதித்து தேடினார்கள்.

    அப்போது ஆற்றில் மூழ்கி மயங்கிய நிலையில் இருந்த 2 சிறுமிகளையும் மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் 2 சிறுமிகளையும் பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் 2 பேர் பிணத்தை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பிரேதபரிசோதனைக்கு பின்னர் 2 சிறுமிகளின் உடல்களும் ஒன்பத்துவேலி காமராஜர் காலனியில் உள்ள வீட்டிற்கு கொண்டு வந்து வைக்கப்பட்டு உள்ளது.

    அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×