என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RajyaSabha adjourned"

    • பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர்.
    • மக்களவை கூடிய 6 நிமிடங்களில் ஒத்தி வைக்கப்பட்டது.

    பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் பாராளுமன்றம் முடங்கியது. ஆபரேசன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பி வருகிறார்கள்.

    இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற மக்களவை கூடியது. அப்போது பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர்.

    இவ்விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். சில உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதியில் நின்று பதாகைகளை காட்டினர்.

    எதிர்க்கட்சி எம்.பி.க்களை இருக்கைகளுக்கு செல்லுமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார். விதிகளின்படி பிரச்சினைகளை எழுப்ப அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

    கோஷமிடுவதும், பதாகைகளைக் காண்பிப்பதும் சபையின் கண்ணியத்திற்கு ஏற்றதல்ல. இதுபோன்ற செயல்கள் என்ன மாதிரியான செய்தியை அனுப்பும் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும் என்று சபாநாயகர் கூறினார்.

    ஆனால், சபாநாயகரின் கோரிக்கையை ஏற்காததால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதையடுத்து சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். மக்களவை கூடிய 6 நிமிடங்களில் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 4-வது நாளாக பாராளுமன்ற மக்களவை முடங்கியது.

    மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் இன்று பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு சபை துணைத் தலைவர் ஹரி வன்ஷ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இதற்கிடையே மேல்-சபையிலும் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பினர். அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஏற்கவில்லை. இதனால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    அசாம் மாநில குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் நீக்கப்பட்டதை எதிர்த்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ், திரிணாமுல் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்றும் முடங்கியது. #RajyaSabhaadjourned #AssamNRC
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் அசாமியர்களுடன், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களும் பெரும் அளவில் வசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் யார் அசாமியர், யார் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அசாமில் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தயாரிக்கப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதில் இந்தியர்களின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரம் நேற்றும் இன்றும் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.


    நேற்றைய கூட்டத்தொடரின்போது தடைபட்ட பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் உரையை இன்றும் தொடருமாறு மாநிலங்களவை சபாநாயகர் வெங்கயா நாயுடு கேட்டு கொண்டார். இதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கோஷமிட்டவாறு சபாநாயகர் இருக்கையை நோக்கி சென்ற அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இன்று 12 மணி வரையிலும், பின்னர் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    பிற்பகல் 2 மணிக்கு பின்னர் அவை கூடியபோது, இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டு கொண்டார். இந்த பிரச்சனை தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக தொடர்ந்து மூன்று நாட்களாக மாநிலங்களவைக்கு வருகை தந்தமைக்காக ராஜ்நாத் சிங்குக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர் வெங்கையா நாயுடு அவரை பேச அனுமதித்தார்.


    இருப்பினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ராஜ்நாத் சிங் பேச எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், ராஜ்நாத் சிங் பேச்சு தடைபட்டது. சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட உறுப்பினர்களை வெங்கையா நாயுடு கடுமையாக எச்சரித்தபோதும் கூச்சலும், குழப்பநிலையும் அவையில் நீடித்தது.

    இதைதொடர்ந்து, தனது முழு உரையை குறிப்புகளாக அவையில் ராஜ்நத் சிங் சமர்ப்பித்தார். தொடர்ந்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabhaadjourned  #AssamNRC
    ×