என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train Service Canceled"

    • ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை 5-ந் தேதி பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • கண்ணூர்-கோவை ரெயில் போத்தனூர்-கோவை இடையே இயக்கப்படாது.

    திருப்பூர்:

    கோவை-போத்தனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை 5-ந் தேதி பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை ரெயில் சேவை மாற்றியமைக்கப்பட உள்ளது. அதன்படி சொரணூர்-கோவை ரெயில் நாளை காலை 11.10 மணிக்கு கோவைக்கு வரும். இந்த ரெயில் போத்தனூர்-கோவை வரை நாளை இயங்காது. மதுரை-கோவை ரெயில் நாளை போத்தனூர்-கோவை வரை இயங்காது. கோவைக்கு மதியம் 12.15 மணிக்கு சேரும். கண்ணூர்-கோவை ரெயில் போத்தனூர்-கோவை இடையே இயக்கப்படாது.

    கோவை-கண்ணூர் ரெயில் போத்தனூரில் இருந்து கண்ணூருக்கு ரெயில் இயக்கப்படும். போத்தனூரில் மதியம் 2.34 மணிக்கு இயக்கப்படும். கோவை-மதுரை ரெயில் போத்தனூரில் மதியம் 2.52 மணிக்கு புறப்படும். போத்தனூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும். கோவை-சொரணூர் ரெயில் மாலை 4.41 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு சொரணூர் சென்றடையும்.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்-கோவை இடையே கடந்த மாதம் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த ரெயில் சேவை வருகிற மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தன்பாத்-கோவை வாராந்திர ரெயில் நாளை 5-ந் தேதி முதல் மார்ச் மாதம் 26-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தன்பாத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை கோவைக்கு அதிகாலை 4 மணிக்கு வந்து சேரும். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கும், ஈரோட்டுக்கு 1.35 மணிக்கும் செல்லும்.

    கோவை-தன்பாத் வாராந்திர ரெயில் புதன்கிழமை நள்ளிரவு 12.50 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு தன்பாத் சென்று சேரும். இந்த ரெயில் 8-ந் தேதி முதல் மார்ச் மாதம் 29-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. ஈரோட்டுக்கு புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கும், சேலத்–துக்கு 3.30 மணிக்கும் செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு நாகர்கோவில் செல்லும் அந்த்யோதயா விரைவு ரெயில் 14-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
    • எழும்பூரில் இருந்து புறப்படும் வைகை, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்ததாக பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் தாம்பரம் ரெயில் நிலையத்தை 3-வது முனையமாக மாற்றுவதற்காக விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.

    தற்போது 8 நடைமேடைகள் உள்ளன. விரைவு ரெயில்களை கூடுதலாக இயக்க வசதியாக கூடுதலாக 2 தண்டவாளங்கள் அமைக்கப்படுகிறது. மேலும் சரக்கு ரெயில்கள் தடங்கல் இல்லாமல் செல்ல வசதியாக தனி பாதையும் அமைக்கப்படுகிறது. இதற்காக சிக்னல்கள் அமைப்பது, பாயிண்டுகள் அமைப்பது ஆகிய பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்த பணிகள் காரணமாக கடந்த 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் 14-ந்தேதி வரை ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. பின்னர் பயணிகள் சிரமத்தை மனதில் கொண்டு அதை கைவிட்டு விடுமுறை நாளான இன்றும், நாளையும் மட்டும் மாற்றம் செய்தது.

    அதன்படி இன்று காலை 9.20 மணிக்கு பிறகு தாம்பரம்-கடற்கரை- செங்கல்பட்டு இடையே ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு குறிப்பிட்ட இடைவெளியில் சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. இதனால் இன்று காலையில் மின்சார ரெயில்களில் கூட்டம் அலை மோதியது.

    வருகிற 1-ந்தேதி முதல் விரைவு ரெயில் போக்குரத்தில் மாறுதல் செய்யப்பட்டு உள்ளது.

    தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு நாகர்கோவில் செல்லும் அந்த்யோதயா விரைவு ரெயில் 14-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    எழும்பூரில் இருந்து தினமும் காலை 5.35 மணிக்கு காரைக்குடி செல்லும் விரைவு ரெயில் மாலை 3.45 மணிக்கு காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரெயில் ஆகிய 2 ரெயில்களும் செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.

    இதே போல் எழும்பூரில் இருந்து புறப்படும் வைகை, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.

    சென்னையில் இன்று கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று காலை 9.20 மணி முதல் இந்த மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.


    தாம்பரம் பகுதிகளில் இருந்து மின்சார ரெயிலில் சென்னையின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்ய வந்த பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதை அறிந்ததும் மாநகர பஸ்களில் ஏறி பயணம் செய்தனர். இதன் காரணமாக தாம்பரம் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலை பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அங்கிருந்து மாநகர பஸ்களில் ஏறி செல்வதற்காக பயணிகள் சாலைகளில் காத்து நின்றதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    மேலும் பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப மாநகர பஸ்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக மாநகர பஸ்களில் ஏறுவதற்காக பயணிகள் முண்டியடித்தனர். இதனால் தாம்பரம் பகுதியில் மாநகர பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    • கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் அறிவிப்பு.
    • முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை.

    தாம்பரம் - கடற்கரை இடையே நாளை காலை 7 முதல் மாலை 4 வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால், கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் தெரிவித்துள்ள்து.

    இதுகுறித்து சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    05.01.2025 அன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் New Foot Over Bridge பணிகள் நடைபெற இருப்பதால் காலை 07.00 மணி முதல் மாலை 16.00 மணி வரை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் ரெயில்கள் பல்லாவரம் வரையும், அதேபோல் செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரெயில்கள் காலை 11.00 மணி முதல் மாலை 16.00 வரை செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சேரி வரையும் ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 05.01.2025 அன்று தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 10 பேருந்துகளையும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 10 பேருந்துகளையும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்துகளை மா.போ.கழகம் இயக்க உள்ளது.

    மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விமான சேவைகள் மற்றும் ரெயில் சேவைகள் பாதிக்கப்படுகின்றன.
    • பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக விமான சேவைகள் மற்றும் ரெயில் சேவைகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் விமான பயணிகள் மற்றும் ரெயில் பயணிகள் கடந்த சில நாட்களாகவே கடும் கவதி அடைந்து வருகிறார்கள்.

    அடர்ந்த பனிமூட்டம் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 564 விமானங்கள் தாமதமாக வந்து தரையிறங்கின. மேலும் 95 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    இந்த நிலையில் டெல்லி யில் இன்றும் கடும் பனி மூட்டம் நீடித்தது. இதன் காரணமாக இன்றும் விமான சேவைகள் மற்றும் ரெயில் சேவைகள் பாதிக் கப்பட்டுள்ளன. இன்று காலை 10 மணிவரை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக டெல்லிக்கு வந்தன.

    • வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று புறநகர் ரெயில் சேவை ரத்து.
    • தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை வரும் 9ம் தேதி ஞாயிறன்று காலை 5.10 முதல் மாலை 4.10 வரை ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ரெயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

    மேலும், பயணிகள் வசதிக்காக, தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கோவை வழியாக கேரளா செல்லும் 6 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு பல இடங்களில் ரெயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளது.

    இதனால் கேரளாவுக்கு கோவை வழியாக செல்லும் ரெயில்களின் சேவை கடந்த 4 நாட்களுக்கு மேலாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சில ரெயில்கள் ஈரோடு, மதுரை, நெல்லை நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

    மேலும் ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.

    எனவே சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் பாதுகாப்பு கருதி கோவை வழியாக கேரளாவுக்கு செல்லும் ரெயில் சேவை ரத்து செய்துள்ளது. ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் விவரம் வருமாறு

    கண்ணூர்- ஆலப்புலா எக்ஸ்பிரஸ், கண்ணூர்- திருவனந்தபுரம் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்- கண்ணூர் எக்ஸ்பிரஸ், மங்களூர்- நாகர்கோவில் ஏர்நாடு எக்ஸ்பிரஸ், கொச்சிவேலி-யஸ்வந்பூர் எக்ஸ்பிரஸ்,

    எர்ணாகுளம்- பெங்களூர் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 6 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ×