search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai train"

    • ரெயிலில் பயணித்த 2 பயணிகள், அதே ரெயிலில் சிக்கி இறந்துவிட்டனர்.
    • 2 பயணிகள் ரெயிலில் சிக்கி இறந்த சம்பவம காசர்கோட்டில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    சென்னையில் இருந்து கேரள மாநிலம் மங்களூருவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று இந்த ரெயில் மங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் பயணித்த 2 பயணிகள், அதே ரெயிலில் சிக்கி இறந்துவிட்டனர்.

    ஜார்க்கண்ட் மாநில எல்லையில் உள்ள ஜாஷ்பூரை சேரந்தவர் சுஷாந்த் சாஹூ(வயது41). இவர் கேரள மாநிலம் மங்களூருவில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று இவர் மங்களூருவில் இருந்து சென்னை சென்ற ரெயிலில் பயணித்துள்ளார்.

    அந்த ரெயில் காசர்கோடு ரெயில் நிலையத்துக்கு வந்தபோது தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக ரெயிலில் இருந்து சுஷாந்த் சாஹூ இறங்கியுள்ளார். அப்போது ரெயில் புறப்பட்டுவிட்டது. இதனால் ஓடும் ரெயிலில் அவர் ஏற முயன்றார். அப்போது சுஷாந்த் சாஹூ தவறி விழுந்து ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கினார்.

    இதில் படுகாயமடைந்த அவர் உடல் துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மங்களூரு-சென்னை ரெயில் நிறுத்தப்பட்டது. சுஷாந்த் சாஹூவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காசர்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து அந்த ரெயில் புறப்பட்டது. காசர்கோடு-கும்ப்ளா ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது அந்த ரெயிலில் இருந்து ஒரு வாலிபர் விழுந்தார். இதனை அந்த பெட்டியில் பயணித்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் ரெயில்வே தண்டவாளத்தில் சோதனை செய்தனர். அப்போது காசர்கோடு ரெயில் நிலையம் அருகே அந்த வாலிபர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கண்ணூர் குத்து பரம்பு பகுதியை சேரந்த ரபி என்பவரிரன் மகன் ரனீம்(18) என்பது தெரிய வந்தது.

    அவர் மங்களூருவில் உள்ள என்நிஜூயரிங் கல்லுரியில் படித்து வந்திருக்கிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து இறந்துவிட்டார். அடுத்தடுத்து 2 பயணிகள் ரெயிலில் சிக்கி இறந்த சம்பவம காசர்கோட்டில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    சென்னையில் இருந்து நெல்லை, கோவைக்கு தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் 8 முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். #Train #SpecialTrain

    சென்னை:

    சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமையகத்தில் ‘ரெயில் பார்ட்னர்’ எனப்படும் செயலி அறிமுக நிகழ்ச்சி நடந்தது.

    இந்த செயலியை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே. குல்சிரேஷ்டா அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-

    தாமிரபரணி புஷ்கர விழாவுக்காக 18 சிறப்பு ரெயில்களும், தசரா பண்டிகைக்காக 33 சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே 42 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில்கள் சென்னையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கோவைக்கு விடப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் 8 முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இவற்றில் சென்னை- நெல்லைக்கு 4 சிறப்பு ரெயில்களும், சென்னை- கோவைக்கு 4 சிறப்பு ரெயில்களும் இயக்கப்படும்.


    நடப்பு ஆண்டில் தெற்கு ரெயில்வேயின் கீழ் உள்ள பாலக்காடு, திருவனந்தபுரம், சென்னை ஆகிய கோட்டங்களில் 311 ஆளில்லாத ரெயில்வே கேட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வே 2018-19-ம் ஆண்டில் செப்டம்பர்வரை ரூ.4434.14 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டம் வருவாயுடன் ஒப்பிடும் போது 14.94 சதவீதம் அதிகமாகும்.

    கடந்த செப்டம்பர் மாதம் வரை 42.2 கோடி பேர் ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.8 சதவீதம் அதிகம்.

    புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘ரெயில் பார்ட்னர்’ செயலி மூலம் ரெயில்கள் புறப்படும் நேரம், வந்தடையும் நேரம், பாதுகாப்பு உதவி எண், ரெயில் பயணத்தின் போது தேவையான வசதிகள், தேவைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

    இந்த செயலி மூலம் 20 முக்கிய தேவைகளுக்கான நேரடி அழைப்பு வசதிகள் கொடுக்கப்படும்.

    இந்த செயலி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Train #SpecialTrain

    சென்னை சென்ட்ரல் வந்த திருவனந்தபுரம் ரெயிலில் துப்பாக்கி குண்டுகள் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #ChennaiTrain #Bullets
    சென்னை:

    கேரள மாநிலம் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதிலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர்.

    அதன்பின்னர், ஊழியர்கள் ரெயில் பெட்டியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பி-2 என்ற பெட்டியில் ஊழியர்கள் சுத்தப்படுத்திய போது, 8-ம் எண் இருக்கைக்கு கீழ் சுருட்டப்பட்ட காகித பொட்டலம் ஒன்று இருப்பதை கண்டனர். அதை எடுத்து பிரித்துப் பார்த்தபோது அதில் வெடிக்கப்படாத 3 துப்பாக்கி குண்டுகள் இருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அந்த துப்பாக்கி குண்டுகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பயணிகள் ரெயிலில் துப்பாக்கி குண்டுகள் கிடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. #ChennaiTrain #Bullets
    ×