என் மலர்
நீங்கள் தேடியது "Chennai train"
- சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து மாநகர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் இதுவரை 2.75 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஒரு வாரமாகவே ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்துக்கான ஆடைகளை வாங்கிவிட்டனர். அவர்கள் தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கும் புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் சென்று கொண்டாட விரும்பும் மக்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 4 நாட்கள் சிறப்பு பஸ்களும் விடப்பட்டுள்ளன. மேலும் மற்ற முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த 4 நாட்களும் மொத்தம் 20,378 பஸ்கள் விடப்படுகிறது.
இந்த சிறப்பு பஸ்கள் நேற்று முதல் புறப்பட்டு சென்றன. சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், சிறப்பு பஸ்களும் புறபட்டு செல்கின்றன. இந்த பஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து மாநகர சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
முதல் நாளான நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்கள், 761 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 2,853 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் 1,28,275 பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் இதுவரை 2.75 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்களுடன் 2,165 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 4,257 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,790 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இன்று சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இன்று மட்டும் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வருகிற திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை (சனிக்கிழமை) முதல் விடுமுறை தொடங்குகிறது. இதனால் கடைசி நேர நெரிசலை தவிர்ப்பதற்காக இன்று முதல் பொதுமக்கள் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். அதன் அடிப்படையில் இன்று சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
மேலும் பொதுமக்கள் நேரடியாக சென்று, அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்யும் வகையில், சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பஸ் நிலையங்களில் 12 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுஉள்ளன. இந்த முன்பதிவு மையங்கள் நேற்று முதல் செயல்பட்டு வருகின்றன. இங்கும் பொதுமக்கள் நேரடியாக சென்று டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
வார இறுதி நாட்களான நாளையும், நாளை மறுநாளும் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்வார்கள் என்றும், கடைசி நேரத்தில் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் கூடுதல் பஸ்களை இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் தனியார் ஆம்னி பஸ்கள் மூலமும் பயணிகள் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு நேற்று முதல் புறப்பட்டு சென்றனர். தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனாலும் இன்று முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆம்னி பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் ஏற்கனவே ஆம்னி பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ரெயில் பயணத்தையே முதலில் திட்டமிடுவது வழக்கம். தற்போது ரெயில்களில் பயணம் செய்வதற்கு 2 மாதங்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. தீபாவளிக்காக ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நாளிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன.
இதையடுத்து தீபாவளிக்கு சிறப்பு ரெயில்களும் அறிவிக்கப்பட்டன. அந்த ரெயில்களிலும் டிக்கெட் முழுவதும் நிரம்பிவிட்டது. சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து புறப்படும் 60 ரெயில்களில் பயணிக்க சுமார் 2.20 லட்சம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து உள்ளனர். இந்த ரெயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் மேலும் 35 ஆயிரம் பயணிகள் பயணம் செய்ய முடியும்.
மேலும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்றும் நாளையும் முன்பதிவு இல்லாத ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்யவும் பயணிகள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.
இதுதவிர சென்னையில் வசிப்பவர்களில் பலர் கார்கள் உள்ளிட்ட தங்களது சொந்த வாகனங்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களது சொந்த வாகனங்கள் மூலம் தீபாவளி பண்டிகையை கொண்டாட தென்மாவட்டங்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்றும் நாளையும் சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் செல்ல கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அவை மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகின்றன.
மேலும், கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் வெளியூர் செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து பழைய மாமல்லபுரம் சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும். அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி நேற்று முதலே போலீசார் அறிவுறுத்திய பாதைகளில் சொந்த வாகனங்களில் சென்றவர்கள் பயணம் செய்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள், ரெயில்கள் மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.
- பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- ஆறு மணி நேரம் வரை ரெயில் சேவை ரத்து.
சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 25 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மூர்மார்க்கெட்டில் இருந்து வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணி, 9.00 மணி, 9.30 மணி, 10.30 மணி மற்றும் 11.35 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து இதே தேதிகளில் காலை 9.55 மணி, 11.25 மணி, மதியம் 12.00 மணி, 1.00 மணி, 2.30 மணி மற்றும் மாலை 3.15 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 8.35 மணி, 10.15 மணி, மதியம் 12.10 மணி,1.05 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து இதே தேதியில் காலை 11.45 மணி, மதியம் 1.15 மணி, 3.10 மணி மற்றும் இரவு 9.00 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9.40 மணி, மதியம் 12.40 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் மறுமார்க்கத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து இதே தேதியில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.
- ரெயிலில் பயணித்த 2 பயணிகள், அதே ரெயிலில் சிக்கி இறந்துவிட்டனர்.
- 2 பயணிகள் ரெயிலில் சிக்கி இறந்த சம்பவம காசர்கோட்டில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:
சென்னையில் இருந்து கேரள மாநிலம் மங்களூருவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று இந்த ரெயில் மங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் பயணித்த 2 பயணிகள், அதே ரெயிலில் சிக்கி இறந்துவிட்டனர்.
ஜார்க்கண்ட் மாநில எல்லையில் உள்ள ஜாஷ்பூரை சேரந்தவர் சுஷாந்த் சாஹூ(வயது41). இவர் கேரள மாநிலம் மங்களூருவில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று இவர் மங்களூருவில் இருந்து சென்னை சென்ற ரெயிலில் பயணித்துள்ளார்.
அந்த ரெயில் காசர்கோடு ரெயில் நிலையத்துக்கு வந்தபோது தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக ரெயிலில் இருந்து சுஷாந்த் சாஹூ இறங்கியுள்ளார். அப்போது ரெயில் புறப்பட்டுவிட்டது. இதனால் ஓடும் ரெயிலில் அவர் ஏற முயன்றார். அப்போது சுஷாந்த் சாஹூ தவறி விழுந்து ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கினார்.
இதில் படுகாயமடைந்த அவர் உடல் துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மங்களூரு-சென்னை ரெயில் நிறுத்தப்பட்டது. சுஷாந்த் சாஹூவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காசர்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அந்த ரெயில் புறப்பட்டது. காசர்கோடு-கும்ப்ளா ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது அந்த ரெயிலில் இருந்து ஒரு வாலிபர் விழுந்தார். இதனை அந்த பெட்டியில் பயணித்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் ரெயில்வே தண்டவாளத்தில் சோதனை செய்தனர். அப்போது காசர்கோடு ரெயில் நிலையம் அருகே அந்த வாலிபர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கண்ணூர் குத்து பரம்பு பகுதியை சேரந்த ரபி என்பவரிரன் மகன் ரனீம்(18) என்பது தெரிய வந்தது.
அவர் மங்களூருவில் உள்ள என்நிஜூயரிங் கல்லுரியில் படித்து வந்திருக்கிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து இறந்துவிட்டார். அடுத்தடுத்து 2 பயணிகள் ரெயிலில் சிக்கி இறந்த சம்பவம காசர்கோட்டில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
- காற்றழுத்த தாழ்வுப்பகுதி வங்கக்கடலில் உருவாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
- பிற்பகல் 2.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது என வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் 2-வது சுற்றுக்காக காத்திருக்கும் சூழலில், அதற்கான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வங்கக்கடலில் உருவாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
ஏற்கனவே கடந்த 6 அல்லது 7-ந் தேதிகளில் உருவாகும் என முதலில் தெரிவிக்கப்பட்டு, பின்னர் 8, 9-ந் தேதிகளில் உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று உருவாவதற்கான சூழல் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் உருவாகவில்லை. இப்படியாக 3 முறை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவது தள்ளிப்போனது. மியான்மர் கடல் பகுதியில் இருக்கும் காற்று சுழற்சி வடகிழக்கு காற்றை தடை செய்வதால்தான் இந்த தாமதம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது.
பிற்பகல் 2.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, அடுத்த 2 நாட்களில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால், சென்னையில் இன்று தொடங்கி 15ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொங்கல் கொண்டாட சென்னையில் இருந்து 20 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி சென்றனர்.
- பொங்கல் பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செல்ல வசதியாக 6 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக வெளியூர் பயணம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
10-ந்தேதி தொடங்கி இன்று வரை அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் வழக்கமான ரெயில்கள், சிறப்பு ரெயில்கள் மற்றும் கார், வேன் போன்ற சொந்த வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
இன்று அரசு வேலை நாளாக இருந்தாலும் மதசார்பு விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்பதால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் இன்று ஆர்.எச். விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊர் சென்றனர். பொங்கலை கொண்டாட வும் சுற்றுலா மையங்களுக்கு செல்லவும் திட்டமிட்டு பயணம் மேற்கொண்டதால் பஸ், ரெயில்கள் அனைத்தும் நிரம்பி சென்றன.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
கடந்த 3 நாட்களில் சுமார் 18 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள், கோவை, திருவனந்தபுரம், மும்பை நகரங்களுக்கும் எழும்பூர், தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் பிற நகரங்களுக்கும் இயக்கப்பட்ட வழக்கமான ரெயில்கள், சிறப்பு ரெயில்களில் சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்களில் 3 நாட்களில் பொது பெட்டிகளில் நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு பயணித்தனர்.
முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் பல மணி நேரத்துக்கு முன்பாக காத்திருந்தனர். படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர். முன்பதிவு பெட்டிகளிலும் ஆங்காங்கே அமர்ந்து பயணம் செய்தனர்.
அரசு பஸ்களில் நேற்று வரை 11,463 பஸ்களில் 6 லட்சத்து 40 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றனர்.
இன்று 4-வது நாளாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது. காலையில் இருந்தே மக்கள் பயணத்தை தொடங்கினார்கள். கிளாம்பாக்கம் பஸ் முனையத்திற்கு மக்கள் படையெடுத்தார்கள். இன்று நள்ளிரவு வரை வெளியூர்களுக்கு மக்கள் புறப்பட்டு செல்ல வசதியாக பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. இன்று 2 லட்சத்திற்கும் மேலானவர்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம்னி பஸ்களில் கடந்த 3 நாட்களில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று 60 ஆயிரம் பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்திருப்பதாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சஙக தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
இது தவிர கார்களிலும் சொந்த ஊர்களுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் பயணத்தை தொடர்ந்து உள்ளனர். பஸ், ரெயில்களில் இட நெருக்கடியை பார்த்து 3 நாட்களுக்கு முன்பே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், புதுச்சேரி, வந்த வாசி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் சென்னையில் இருந்து மோட்டார்சைக்கிளில் பயணம் செய்தனர்.
பொங்கல் பண்டிகையை யொட்டி கடைசி நேர பயணம் மேற்கொள்பவர்கள் இன்று தொடங்கினர். இத னால் சென்னையில் மக்கள் நடமாட்டம், வாகன ஓட்டம் குறைந்தது. சென்னையில் இருந்து இன்றுடன் சேர்த்து சுமார் 20 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
- சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.
- தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்தது.
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.
சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்தது.
இந்நிலையில், சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே காலை 5.10 மணி முதல் ரத்து செய்யப்பட்ட மின்சார ரெயில் மீண்டும் தொடங்கியது.
மாலை 4.10 மணிக்கு மேல் சேவை தொடங்கிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை:
சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமையகத்தில் ‘ரெயில் பார்ட்னர்’ எனப்படும் செயலி அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
இந்த செயலியை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே. குல்சிரேஷ்டா அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-
தாமிரபரணி புஷ்கர விழாவுக்காக 18 சிறப்பு ரெயில்களும், தசரா பண்டிகைக்காக 33 சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே 42 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில்கள் சென்னையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கோவைக்கு விடப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் 8 முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இவற்றில் சென்னை- நெல்லைக்கு 4 சிறப்பு ரெயில்களும், சென்னை- கோவைக்கு 4 சிறப்பு ரெயில்களும் இயக்கப்படும்.

நடப்பு ஆண்டில் தெற்கு ரெயில்வேயின் கீழ் உள்ள பாலக்காடு, திருவனந்தபுரம், சென்னை ஆகிய கோட்டங்களில் 311 ஆளில்லாத ரெயில்வே கேட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வே 2018-19-ம் ஆண்டில் செப்டம்பர்வரை ரூ.4434.14 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டம் வருவாயுடன் ஒப்பிடும் போது 14.94 சதவீதம் அதிகமாகும்.
கடந்த செப்டம்பர் மாதம் வரை 42.2 கோடி பேர் ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.8 சதவீதம் அதிகம்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘ரெயில் பார்ட்னர்’ செயலி மூலம் ரெயில்கள் புறப்படும் நேரம், வந்தடையும் நேரம், பாதுகாப்பு உதவி எண், ரெயில் பயணத்தின் போது தேவையான வசதிகள், தேவைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த செயலி மூலம் 20 முக்கிய தேவைகளுக்கான நேரடி அழைப்பு வசதிகள் கொடுக்கப்படும்.
இந்த செயலி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார். #Train #SpecialTrain






