சென்னையில் புறநகர் ரெயில் சேவை பாதிப்பு- பயணிகள் கடும் அவதி

சிக்னல் கோளாறு காரணமாக இந்த ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.ஆத்திரமடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் புறநகர் ரெயில் சேவை பாதிப்பு- பயணிகள் கடும் அவதி
Published on

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் வழித்தடங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்க்கமாக புறப்படும் ரெயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஆனதால், பணி முடிந்து வீடுகளுக்கு செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சிக்னல் கோளாறு காரணமாக இந்த ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இருப்பினும், ஆத்திரமடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com