search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Passenger Rail"

    • திண்டிவனம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியவர் தண்டவாளத்தில் விழுந்து பலியானார்.
    • இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 58). இவர் செங்க ல்பட்டு மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதை அடுத்து அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டு கம்பெனியில் இருந்து விடைபெற்றார். செங்கல்பட்டில் இருந்து திண்டிவனம் பஸ்சில் வந்த அவர், திண்டிவனம் ெரயில் நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊரான விழுப்புரம் சொல்வதற்கு பேசஞ்சர் ெரயிலில் சென்று கொண்டிருந்தார்.

    அப்பொழுது திண்டிவனத்தில் இருந்து புறப்பட்ட ெரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரது செல்போன் பிளாட்பார்மில் கீழே விழுந்தது. பிளாட்பார்மில் விழுந்த செல்போனை எடுப்பதற்காக ஓடும் ெரயிலில் இருந்து கீழே இறங்கிய போது, நிலை தடுமாறிய சுதாகர், தவறி விழுந்தார். இதில் பிளாட்பாரத்தில் இருந்து கீழே விழுந்து ரெயிலின் அடியில் சிக்கி கால் துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து செங்கல்பட்டு ெரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை- போடி இடையே விரைவில் பயணிகள் ரெயில் முழுமையாக இயக்கப்படும்.
    • மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    மதுரை

    மதுரை-போடி அகல ரெயில் பாதை திட்டத்தில் மதுரை - தேனி வரை பணிகள் முடிந்து ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நிலையில் தேனி - போடி இடையே 15 கிமீ தொலைவுக்கான அகல ரெயில் பாதை பணிகள் தற்போது முடிந்து உள்ளன. இங்கு ஏற்கனவே ரெயில் என்ஜின் விடப்பட்டு வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.

    தேனி - போடி புதிய அகல ரெயில் பாதையில் நேற்று 120 கி.மீ வேகத்தில் ரெயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி போடியில் இருந்து புறப்பட்ட ரெயில் என்ஜின், தேனிக்கு 9 நிமிடங்கள், 20 நொடியில் சென்றது. இந்த ஆய்வின் போது லோகோ பைலட் முத்துகிருஷ்ணன், உதவி லோகோ பைலட் அய்யனார் ஆகியோர் ரெயில் இன்ஜினை ஓட்டினார்கள். தேனி- போடி அகல ரெயில் பாதை சோதனையின் போது தென்னக ரெயில்வே கட்டுமான பிரிவு துணை முதன்மை பொறியாளர் சூரியமூர்த்தி, உதவி பொறியாளர் சரவணன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    மதுரை- தேனி இடையே பயணிகள் ரெயில் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. தேனி முதல் போடி வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு விட்டது. எனவே மதுரை-போடி இடையே பயணிகள் ரெயிலை முழுமையாக இயக்குவது என்று மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    ×