என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guduvancherry"

    • ரெயில்கள் பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
    • வருகிற 22-ந்தேதி தாம்பரம்-காட்டாங்கொளத்தூர் இடையே 5 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்கள் கிளாம்பாக்கம் சென்று பஸ் ஏறுவார்கள். இதனால் தாம்பரம் முதல் கிளாம்பாக்கம் வரை அதிக கூட்ட நெரிசல் காணப்படும்.

    இதைத் தவிர்க்க தாம்பரம் முதல் கூடுவாஞ்சேரி வரையில் வருகிற 17-ந் தேதி 3 பயணிகள் சிறப்பு ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 7.45, 7.53, 8.10 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். இந்த ரெயில்கள் பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    இதே போல் வருகிற 22-ந்தேதி தாம்பரம்-காட்டாங்கொளத்தூர் இடையே 5 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    அதன்படி வருகிற 22-ந்தேதி காட்டாங்கொளத்தூரில் இருந்து அதிகாலை 4, 4.30, 5, 5.35, 6.39 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் தாம்பரத்தை சென்றடையும்.

    இந்த சிறப்பு ரெயில்கள் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    கூடுவாஞ்சேரியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை மீட்டெடுத்ததாக அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரியில் உள்ள மீனாட்சி நகர், இந்திராநகர், நேரு தெரு வீதிகளில் 25 அடி அகலம் கொண்ட கால்வாய் வழியாக கூடுவாஞ்சேரி ஏரியில் மழை நீர் சென்றடையும்.

    மழைக் காலங்களில் மீனாட்சி நகர், இந்திராநகர், நேரு தெருவில் குடியிருக்கும் மக்கள் மழைநீர் வெளியேற முடியாமல் வீட்டுக்குள் மழை நீர் புகுந்து விடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    இதையடுத்து மழைநீர் தங்கு தடையின்றி ஏரி, குளங்களை சென்றடையும் வகையில் வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் மழை நீர் கால்வாய், வருவாய் கால்வாய் ஆகியவற்றை தூர்வாரி, கால்வாய்களை அகலப்படுத்தி வருகின்றனர்.

    நேரு தெருவில் மழை நீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து தனியார் பள்ளி சுற்றுசுவர் அமைத்து இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து செங்கல்பட்டு வட்டாட்சியர் பாக்கிய லட்சுமி, வருவாய் துறை நில அளவையர் நாகராஜ், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிருஷ்சா பிரபு மற்றும் வருவாய் துறை ஊழியர்கள், பொதுப் பணித்துறை ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சுற்று சுவர், பள்ளியால் அமைக்கப்பட்டுள்ள பூங்கா போன்றவற்றை அகற்றினர். 30 கோடி மதிப்பிலான 3 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அந்த நிலத்தை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை மீட்டெடுத்ததாகவும் அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
    ×