என் மலர்
நீங்கள் தேடியது "கூடுவாஞ்சேரி"
- ரெயில்கள் பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
- வருகிற 22-ந்தேதி தாம்பரம்-காட்டாங்கொளத்தூர் இடையே 5 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்கள் கிளாம்பாக்கம் சென்று பஸ் ஏறுவார்கள். இதனால் தாம்பரம் முதல் கிளாம்பாக்கம் வரை அதிக கூட்ட நெரிசல் காணப்படும்.
இதைத் தவிர்க்க தாம்பரம் முதல் கூடுவாஞ்சேரி வரையில் வருகிற 17-ந் தேதி 3 பயணிகள் சிறப்பு ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 7.45, 7.53, 8.10 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். இந்த ரெயில்கள் பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
இதே போல் வருகிற 22-ந்தேதி தாம்பரம்-காட்டாங்கொளத்தூர் இடையே 5 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி வருகிற 22-ந்தேதி காட்டாங்கொளத்தூரில் இருந்து அதிகாலை 4, 4.30, 5, 5.35, 6.39 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் தாம்பரத்தை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில்கள் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
- 2,100 க்கும் மேற்பட்ட சிறு, தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ளன.
- 500 பேர் மட்டும் தான் தொழில் உரிமத்தை புதுப்பித்து உள்ளனர்.
வண்டலூர்:
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் ராணி கூறியிருப்பதாவது:-
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள், வணிகர்கள், சில்லறை வியாபாரிகள் முறையாக கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்காதவர்கள் மற்றும் புதிய தொழில் உரிமங்களை பெறாதவர்கள் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலர் நாகராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் ஆகியோரிடம் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை வழங்கி, அதற்குரிய கட்டணம் செலுத்தி உரிமங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கு இரண்டு முறை நினைவூட்டல் கடிதம் நேரில் வழங்கப்படும் அதிலும் அவர்கள் தொழில் உரிமங்களை பெறாமல் அல்லது புதுப்பிக்காமல் வணிகம் செய்து வந்தால், கடையை பூட்டி சீல் வைத்து, நீதிமன்ற நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2,100 க்கும் மேற்பட்ட சிறு, தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ளன. அதில் தற்போது வரை 500 பேர் மட்டும் தான் தொழில் உரிமத்தை புதுப்பித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






