search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "occupation land"

    கூடுவாஞ்சேரியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை மீட்டெடுத்ததாக அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரியில் உள்ள மீனாட்சி நகர், இந்திராநகர், நேரு தெரு வீதிகளில் 25 அடி அகலம் கொண்ட கால்வாய் வழியாக கூடுவாஞ்சேரி ஏரியில் மழை நீர் சென்றடையும்.

    மழைக் காலங்களில் மீனாட்சி நகர், இந்திராநகர், நேரு தெருவில் குடியிருக்கும் மக்கள் மழைநீர் வெளியேற முடியாமல் வீட்டுக்குள் மழை நீர் புகுந்து விடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    இதையடுத்து மழைநீர் தங்கு தடையின்றி ஏரி, குளங்களை சென்றடையும் வகையில் வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் மழை நீர் கால்வாய், வருவாய் கால்வாய் ஆகியவற்றை தூர்வாரி, கால்வாய்களை அகலப்படுத்தி வருகின்றனர்.

    நேரு தெருவில் மழை நீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து தனியார் பள்ளி சுற்றுசுவர் அமைத்து இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து செங்கல்பட்டு வட்டாட்சியர் பாக்கிய லட்சுமி, வருவாய் துறை நில அளவையர் நாகராஜ், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிருஷ்சா பிரபு மற்றும் வருவாய் துறை ஊழியர்கள், பொதுப் பணித்துறை ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சுற்று சுவர், பள்ளியால் அமைக்கப்பட்டுள்ள பூங்கா போன்றவற்றை அகற்றினர். 30 கோடி மதிப்பிலான 3 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அந்த நிலத்தை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை மீட்டெடுத்ததாகவும் அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
    கடையம் அருகே பால்வண்ணநாதபுரத்தில் ஊர் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட பொதுமயான நிலத்தை மீட்டுதர கோரி கலெக்டரிடம் காங்கிரசார் மனு அளித்துள்ளனர்.
    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பால்வண்ணநாதபுரத்தில் ஊர் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட பொதுமயான நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்ததாக தெரிகிறது. இதையடுத்து நிலத்தை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. 

    இதில் மாநில பொதுகுழு உறுப்பினர் வக்கீல் காமராஜ், வட்டார தலைவர் மாரியப்பன், நகர தலைவர் தங்கராஜா, மாவட்ட விவசாய அணி தலைவர் சிவன்பாண்டியன், ஊடக பிரிவு தலைவர் தருவை காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    ×