search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடையம் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும்- கலெக்டரிடம் காங்கிரசார் மனு
    X

    கடையம் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும்- கலெக்டரிடம் காங்கிரசார் மனு

    கடையம் அருகே பால்வண்ணநாதபுரத்தில் ஊர் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட பொதுமயான நிலத்தை மீட்டுதர கோரி கலெக்டரிடம் காங்கிரசார் மனு அளித்துள்ளனர்.
    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பால்வண்ணநாதபுரத்தில் ஊர் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட பொதுமயான நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்ததாக தெரிகிறது. இதையடுத்து நிலத்தை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. 

    இதில் மாநில பொதுகுழு உறுப்பினர் வக்கீல் காமராஜ், வட்டார தலைவர் மாரியப்பன், நகர தலைவர் தங்கராஜா, மாவட்ட விவசாய அணி தலைவர் சிவன்பாண்டியன், ஊடக பிரிவு தலைவர் தருவை காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    Next Story
    ×