search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "airforce"

    • மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் பல அரசு துறை அலுவலகங்களை கொண்ட சத்ராபவன் உள்ளது.
    • முதலில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் பல அரசு துறை அலுவலகங்களை கொண்ட சத்ராபவன் உள்ளது. பழங்குடியினர் நலத்துறையின் பிராந்திய அலுவலகம் அமைந்துள்ள இந்த அரசு கட்டிடத்தின் 3-வது மாடியில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென்று தீப்பிடித்தது. 3-வது மாடியில் இருந்து மேலே உள்ள 3 தளங்களிலும் தீ மளமளவென வேகமாக பரவியது. ஏ.சி. மெஷின்கள், சிலிண்டர்களில் தீ பரவியதால் பல வெடிப்புகள் ஏற்பட்டன. இதனால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    முதலில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டது. 14 மணி நேர கடும் போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் 15 வாகனங்களை ஈடுபடுத்தி உள்ளனர்.
    • மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி ஏற்பாடு.

    மத்தியப் பிரதேச மாநில தலைநகரான போபாலில் உள்ள சத்புரா பவன் என்ற கட்டிடம் அரசின் பல்வேறு துறைகளுக்கு சொந்தமானது.

    இந்த அரசு கட்டிடத்தில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சத்புரா பவனின் மூன்றாவது மாடியில் இருந்து ஆறாவது மாடிக்கும் தீ பரவியது.

    இதையடுத்து, ஊழியர்கள், அலுவலர்கள் உடனடியாக கட்டிடத்தில் இருந்து வெளியேறினர். இதனால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    கட்டிடத்தில் இருந்த பர்னிச்சர் மற்றும் ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் 15 வாகனங்களை ஈடுபடுத்தி உள்ளனர்.

    இந்நிலையில், தீ 50 சதவீதம் கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தீயை முழுவதும் அணைக்க இந்திய விமானப் படையின் உதவியை மாநில அரசு நாடியுள்ளது.

    மேலும், மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • சூலூர் விமானப் படை தளத்தின் ஆயுத கிடங்கு மற்றும் ராணுவ தளவாட தொழில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
    • அளவீடு பணி மேற்கொள்ள வந்த வருவாய் துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் ஆட்சேம் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    கோவை,திருப்பூர் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள சூலூர் விமானப் படை தளத்தின் ஆயுத கிடங்கு மற்றும் ராணுவ தளவாட தொழில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் ஒன்றியம் பருவாய் கிராமத்தில் 86 ஏக்கர்38 சென்ட் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. அதற்கான நில அளவீடு, வீட்டுமனைகள், விளை நிலங்கள், மரங்கள், ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. அளவீடு பணி மேற்கொள்ள வந்த வருவாய் துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் ஆட்சேம் தெரிவித்தனர்.

    அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 3ந் தேதி பல்லடம் அருகேயுள்ள சங்கோதிபாளையத்தில் விமான தள விரிவாக்க பணி சம்பந்தமான பொதுமக்கள் சார்பிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சூலூர் விமானப் படை தளம் அருகில் இருப்பதால் விரிவாக்கம் செய்யும் போது நிலத்தை கையகப்படுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தில் கடந்த பல ஆண்டுகளாக யாரும் நிலம் வாங்க முன்வரவில்லை. இதனால் அரசின் நில வழிகாட்டி மதிப்பு குறைவாக உள்ளது. இதன் சந்தை மதிப்பு ஏக்கருக்கு ரூபாய் கோடிக்கணக்கில் வியாபாரம் ஆக கூடியது தடைபட்டுள்ளது. அரசின் நில இழப்பீடு சட்டத்தின்படி இப்பகுதி நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.2கோடியே 91 லட்சம் வழங்கிட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி சட்டப்படியும், ஜனநாயக முறைப்படியும் போராட்டங்கள் நடத்திடவும், இக்கோரிக்கைகளை பிரதமர், முதல்வர், மத்திய,மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு மனுவாக அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே சங்கோதிபாளையத்தில் நிலம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் பா.ஜ.க. மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், மாவட்ட தலைவர் செந்தில்வேல்,மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கார்த்திகேயன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கோடங்கிபாளையம் காவீ.பழனிசாமி, பருவாய் ரவிச்சந்திரன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பருவாய் சக்திவேல், சுப்பிரமணியம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பின்னர் பா.ஜ.க. மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இப்பகுதியில் பல தலைமுறைகளாக வசிக்கும் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலத்தை அரசு கையகப்படுத்தும் போது இவர்களது வாழ்வாதாரமே கேள்விகுறியாகும். சூலூர் விமான படை தளத்திற்கு அருகாமையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள் இருக்கும் போது விவசாய நிலத்தை ஏன் அரசு கையகப்படுத்த வேண்டும். விவசாயத்தை அழிக்காமல் மாற்று இடமாக தரிசு நிலம் இருப்பதை மாநில அரசு கவனத்தில் கொண்டு அதனை கையகப்படுத்த வேண்டும். இது குறித்து மத்திய அமைச்சர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றார்.முன்னதாக சர்வே செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

    டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முப்படை தளபதிகள், இந்தியா எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது என தெரிவித்துள்ளனர். #IAF #IndianAirForce #Pakistan #Abhinandan #RGKapoor #DSGujral #SurendraSinghMahal
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் முப்படை அதிகாரிகளான ஆர்.ஜே.கே.கபூர், சுரேந்திர சிங் மெஹல் மற்றும் தல்பீர் சிங் ஆகியோர் இன்று கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

    விமான தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பல தவறான தகவல்களை கூறிவருகிறது. பிப்ரவரி 27ம் தேதி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் நுழைந்ததை ரேடார் மூலம் அறிந்தோம்.

    காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனால் இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானம் இந்தியாவின் மிக்-21 ரக விமானத்தின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.



    இரு இந்திய விமானிகளை கைது செய்ததாக பாகிஸ்தான் பொய் கூறியது. ஆளில்லா இடங்களில் தான் தாக்குதல் நடத்தியதாக பாக். கூறியது, ஆனால் அவர்கள் இந்திய தளவாடங்களை குறிவைத்து தான் தாக்கியுள்ளனர். மேலும் பாக். எஃப்-16 ரக விமானத்தை பயன்படுத்தவில்லை என்றும் கூறியது. ஆனால் அதைத்தான் நாம் சுட்டு வீழ்த்தினோம். எல்லையில் உள்ள அனைத்துப் படைகளும் தயார் நிலையில் உள்ளது.

    பாலகோட்டில் இந்தியா நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்ற எண்ணிக்கையை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. விமானி அபினந்தன் விடுவிக்கப்படுவது எங்களுக்கு மகிழ்ச்சி..

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், இந்திய படைகள் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமானத்தின் பாகங்களை முப்படை அதிகாரிகள் காட்டினர். #IAF #IndianAirForce #Pakistan #Abhinandan #RGKapoor #DSGujral #SurendraSinghMahal
    ×