search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt building"

    • மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் பல அரசு துறை அலுவலகங்களை கொண்ட சத்ராபவன் உள்ளது.
    • முதலில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் பல அரசு துறை அலுவலகங்களை கொண்ட சத்ராபவன் உள்ளது. பழங்குடியினர் நலத்துறையின் பிராந்திய அலுவலகம் அமைந்துள்ள இந்த அரசு கட்டிடத்தின் 3-வது மாடியில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென்று தீப்பிடித்தது. 3-வது மாடியில் இருந்து மேலே உள்ள 3 தளங்களிலும் தீ மளமளவென வேகமாக பரவியது. ஏ.சி. மெஷின்கள், சிலிண்டர்களில் தீ பரவியதால் பல வெடிப்புகள் ஏற்பட்டன. இதனால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    முதலில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டது. 14 மணி நேர கடும் போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் 15 வாகனங்களை ஈடுபடுத்தி உள்ளனர்.
    • மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி ஏற்பாடு.

    மத்தியப் பிரதேச மாநில தலைநகரான போபாலில் உள்ள சத்புரா பவன் என்ற கட்டிடம் அரசின் பல்வேறு துறைகளுக்கு சொந்தமானது.

    இந்த அரசு கட்டிடத்தில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சத்புரா பவனின் மூன்றாவது மாடியில் இருந்து ஆறாவது மாடிக்கும் தீ பரவியது.

    இதையடுத்து, ஊழியர்கள், அலுவலர்கள் உடனடியாக கட்டிடத்தில் இருந்து வெளியேறினர். இதனால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    கட்டிடத்தில் இருந்த பர்னிச்சர் மற்றும் ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் 15 வாகனங்களை ஈடுபடுத்தி உள்ளனர்.

    இந்நிலையில், தீ 50 சதவீதம் கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தீயை முழுவதும் அணைக்க இந்திய விமானப் படையின் உதவியை மாநில அரசு நாடியுள்ளது.

    மேலும், மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ×