search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AN 32 Aircraft"

    • மாயமான விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுக்குப் பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • நீர்மூழ்கி வாகனம் பதிவுசெய்த படங்களை ஆய்வு செய்ததில் விமான பாகங்கள் உறுதி செய்யப்பட்டன.

    சென்னை:

    சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு 2016-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படை விமானம் வங்கக் கடல் பகுதியில் பறந்தபோது திடீரென மாயமானது. இதில் விமான ஊழியர்கள் 6 பேர், 11 விமானப்படை வீரர்கள், 2 ராணுவ வீரர்கள், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த தலா ஒரு வீரர், கடற்படை ஆயுதக் கிடங்கு ஊழியர்கள் 8 பேர் என 29 பேர் பயணம் செய்தனர்.

    தொடர்பு துண்டிக்கப்பட்டதும் விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ராடாருடன் கூடிய செயற்கைக்கோள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு படம்பிடிக்கப்பட்டது. எந்த முன்னேற்றமும் இல்லாததால் செப்டம்பர் 15-ம் தேதி தேடும் பணி கைவிடப்பட்டு, அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மாயமான விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுக்குப் பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் மூலம் சமீபத்தில் அனுப்பப்பட்ட நீர்மூழ்கி வாகனம் பதிவுசெய்த படங்களை ஆய்வு செய்ததில், சென்னை கடற்கரையில் இருந்து 310 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் 3.4 கி.மீ. ஆழத்தில் கிடக்கும் பாகங்கள் காணாமல் போன ஏஎன்-32 விமானத்தின் பாகங்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×