search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rafael fighter plane"

    சர்ச்சைக்குரிய ரபேல் ஒப்பந்தம் குறித்து பொறுமையுடன் பேசுங்கள் என பா.ஜனதாவுக்கு, சிவசேனா அறிவுரை கூறியுள்ளது. #RafaleDeal #BJP #ShivSena
    மும்பை :

    சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஜல்காவ் பகுதியில் மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா தொண்டர்கள் மோதிக்கொண்ட அதிர்ச்சிகரமான வீடியோவை மக்கள் நாடு முழுவதும் கண்டுள்ளனர். தங்கள் கட்சியில் இணைந்தால் குண்டர்கள் கூட வால்மீகியாக மாறிவிடுவார்கள் என பா.ஜனதா கூறியது. ஆனால் இந்த வன்முறை சம்பவம் மூலம் வால்மீகிகள் குண்டர்களாக மாறிய தருணத்தை அனைவரும் உணர்ந்தனர்.

    இது பா.ஜனதா- சிவசேனா கூட்டணிக்கு ஏற்பட்ட கறை மட்டும் அல்ல. பா.ஜனதா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய தருணம் ஆகும். பா.ஜனதா தன்னைத்தானே மாறுப்பட்ட கருத்துடைய கட்சியாக கூறிக்கொள்கிறது. இந்த வன்முறையையும் வேறுபட்ட கருத்துகளை பிரதிபலிக்கும் நிகழ்வு என கூறி நியாயப்படுத்த முடியாது.



    ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பதிலளிக்கும்போது குறைந்தபட்சம் பொறுமையுடன் பதில் அளியுங்கள். பா.ஜனதாவில் ராணுவ மந்திரியில் இருந்து அனைத்து தலைவர்களும் வாய்க்கு வந்தபடி இந்த பிரச்சினை குறித்து பேசுகிறார்கள்.

    இது கட்சியில் பிரச்சினையை அதிகரிக்க செய்யும். எனவே முடிந்தவரை இதுகுறித்து பேசுவதை குறைத்துகொள்வது நல்லது என்பது எங்களுடைய அறிவுரையாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    நமோ டி.வி.க்கும் தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்காதது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், “ஒன்று அல்லது இரண்டு சேனல்களை தவிர மற்ற அனைத்து சேனல்களும் “நமோ டி.வி.”யாக தான் உள்ளது. அவற்றில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே “நமோ டி.வி.”க்கு தடை விதிப்பதை தவிர்க்க முடியாது” என்று கூறப்பட்டு உள்ளது. #RafaleDeal #BJP #ShivSena
    ரபேல் போர் விமானம் ஊழல் தொடர்பாக ராகுல் காந்தியின் கருத்தை ஆதரிப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். #RafaleDeal #Rahulgandhi

    மும்பை:

    பா.ஜனதாவின் நீண்டகால கூட்டணி கட்சியாக சிவசேனா திகழ்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இக்கட்சி மத்தியில் ஆளும் பா.ஜனதா கூட்டணி ஆட்சியிலும் இடம் பெற்றுள்ளது.

    இருந்தாலும் சமீபகாலமாக இந்த இரு கட்சிகளிடையே கருத்து மோதல்கள் இருந்து வருகின்றன. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார்.

    இதனால் பா.ஜனதா- சிவசேனா கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடையும் அபாயம் ஏற்பட்டது. அதை விரும்பாத சிவசேனா கட்சி எம்.பி.க்கள் பா.ஜனதா கூட்டணியில் தொடர உத்தவ் தாக்கரேயிடம் வலியுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் ரபேல் போர் விமானம் வாங்கிய விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டு அனில் அம்பானி நிறுவனத்துக்கு பெற்றுக் கொடுத்தது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். அது குறித்து பிரதமர் அலுவலகம் ரபேல் நிறுவனத்துக்கு அனுப்பியதாக ஒரு கடிதத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இதுகுறித்து சிவசேனா தனது கட்சியின் அதிகாரப்பூர்வமான ‘சாம்னா’ பத்திரிகையில் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

    “ரபேல் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவரது பேச்சில் தேச பக்தி வெளிப்பட்டது. ராணுவத்தை வலுப்படுத்த காங்கிரஸ் கட்சி விரும்ப வில்லை என்றார். மறுநாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆவணங்களை வெளியிட்டார். அதில் இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் நேரடியாக தலையிட்டிருப்பது தெரிகிறது.

    இதற்கு மோடி பதில் அளிக்க வேண்டும். ரபேல் ஒப்பந்தம் விமான படையை பலப்படுத்துவதற்கா? அல்லது நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தொழில் அதிபரை காப்பாற்றுவதற்கா? .

    மேலும், ரபேல் ஒப்பந்தம் குறித்து இந்தியா- பிரான்ஸ் இடையே நடந்த ஆலோசனையின் போது பிரதமர் அலுவலகம் தலையிட்டதாக கூறியிருப்பதை பாதுகாப்பு துறை அமைச்சகம் மறுத்தது. பிரதமர் மோடியும் திட்டவட்டமாக மறுத்தார். அப்போது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பி.க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

    ஆனால் ராகுல் காந்தி வெளியிட்ட ஆவணங்கள் அவர்களின் தேசபக்தி கோ‌ஷங்களையும், மேஜையை தட்டி எழுப்பிய ஆரவாரத்தையும் அமைதி அடைய செய்து விட்டது.

    இந்த ஒப்பந்த விவகாரத்தில் மோடி நேரடியாக தலையிட்டுள்ளார். முக்கிய பிரமுகர்களான ராணுவ மந்திரியும், ராணுவ அமைச்சக செயலாளரும் இடம் பெறவில்லை. மோடியே தன்னிச்சையாக செயல்பட்டு இருக்கிறார். ரபேல் போர் விமானத்தின் விலை மற்றும் காண்டிராக்டை யார் பெற வேண்டும் என அவரே தீர்மானித்து இருக்கிறார்.

    எனவே இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை மோடி எதிர் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #RafaleDeal #Rahulgandhi

    ரபேல் முறைகேடு தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றால் பிரதமர் நரேந்திரமோடி ஜெயிலுக்கு செல்வார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். #RafaleDeal #RahulGandhi #PMModi

    இந்தூர்:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதை பா.ஜனதா அரசு மறுத்து வந்தது.

    இந்த நிலையில் ரபேல் முறைகேடு தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றால் பிரதமர் நரேந்திரமோடி ஜெயிலுக்கு செல்வார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார். இது தொடர்பாக ராகுல்காந்தி கூறியதாவது:-

    பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானம் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக முறையாக விசாரணை நடைபெற்றால் பிரதமர் மோடி ஜெயிலுக்கு செல்வார்.

    மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அமைந்ததில் இருந்து இதுவரை ஒரு வாக்குறுதி கூட நிறைவேற்றப்படவில்லை. ஊழலை ஒழிப்போம் என்றார்கள். ஒழிக்கவில்லை. நல்லநாள் பிறக்கும் என்றார்கள். இதுவரை பிறக்கவில்லை.

    தேர்தலில் அளித்த வாக்குறுதிகளின்படி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வில்லை. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை பெற்று தரவில்லை. மொத்தத்தில் அவர்களால் எந்தவிதமான நன்மையும் நாட்டு மக்களுக்கு கிடைக்க போவதில்லை.

     


    மக்கள் இனி வாக்காளிக்க மாட்டார்கள் என தெரிந்து தான் தற்போது ராமர்கோவில் பிரச்சினையை மீண்டும் அவர்கள் கையில் எடுத்து உள்ளனர். ஆனால் இந்த முயற்சி ஒரு போதும் அவர்களுக்கு கை கொடுக்காது.

    நான் ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு செல்லும் போது பா.ஜனதாவினர் அதை விமர்சிக்கிறார்கள். நாட்டில் உள்ள ஆலயங்கள் அனைத்தும் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தனி சொத்தா? அங்கு செல்ல அமித்ஷா, மோடி மட்டும் தான் உரிமம் பெற்றுள்ளனரா? மற்ற எவரும் செல்லக்கூடாதா?

    எனக்கு தோன்றினால் எந்த கோவிலுக்கு வேண்டுமானாலும் செல்வேன். கடவுளை வழிபடுவேன். அதேபோன்று தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும், குருத் வாராக்களுக்கும் செல்வேன்.

    குறிப்பிட்ட மதத்தை மட்டும் அடையாளமாக்கி கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏனெனில் நான் தேசிய தலைவர். மாறாக இந்துத்துவா தலைவர் அல்ல.

    இந்துயிசம் அன்பையும், நெறியையும் போதிக்கிறது. அதை எவரும் சொந்தம் கொண்டாட முடியாது. அது அனைவருக்கும் உரித்தானது.

    அதேவேளையில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். உரிமை கொண்டாடும் இந்துத்துவம் வெறுப்புணர்வையும், வேறுபாடுகளையும் தான் ஏற்படுத்துகிறது. அதனால் நாட்டில் பிரிவினை தான் உருவாகுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RafaleDeal #RahulGandhi #PMModi

    ரூ.45 ஆயிரம் கோடி மோசடி செய்த அம்பானிக்கு ரபேல் போர் விமான ஒப்பந்தங்களை வழங்கியதால் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். #RahulGandhi #Modi #RafaleDeal
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ‘ரிலைன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனத்துக்கு வரம்புகளை மீறி சலுகை வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

    இந்த நிலையில், மொலைத் தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் சுவீடன் நாட்டை சேர்ந்த எரிக்சன் நிறுவனம், அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனத்தின் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆர்காம் நிறுவனம் ஒப்புக்கொண்டபடி 550 கோடி ரூபாயை எங்கள் நிறுவனத்துக்கு தரவில்லை. எனவே அனில் அம்பானி மற்றும் அவரது 2 உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அனில் அம்பானியை கண்டிக்கும் விதமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-



    இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தங்களை பெற வேண்டும் என்றால் அதற்கு ரூ.45 ஆயிரம் கோடி மோசடி செய்தவராக இருக்க வேண்டும். நிலுவைத் தொகை செலுத்தாததன் காரணமாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பிரதமர் மோடியால் ‘பாய்’ என்று அழைக்க வேண்டும். தகுந்த அனுபவம் இல்லாதவராக இருக்க வேண்டும். பிரதமர் இந்த விதிகளை வகுத்துள்ளார்.

    இவ்வாறு ராகுல் அதில் குறிப்பிட்டுள்ளார்.  #RahulGandhi #Modi #RafaleDeal
    ரபேல் விமான ஒப்பந்த ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று, கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் கூறினார். #MukulWasnik
    கோவை:

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானம் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்று உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றன. இந்த ஊழலை கண்டித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ரபேல் விமானம் வாங்குவதற்காக உலகளாவிய டெண்டர் விடப்பட்டது. இறுதியில் டசால்ட் என்ற பிரான்சு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 126 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒவ்வொரு விமானத்தின் விலையும் ரூ.526 கோடியாகும்.

    ஆனால் நரேந்திர மோடி பிரதமரானதும் 126 விமானங்களுக்கு பதிலாக வெறும் 36 விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டார். ஒரு விமானத்தை ரூ.526 கோடிக்கு வாங்குவதற்கு பதில் ரூ.1,670 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    மன்மோகன் சிங் போட்ட ஒப்பந்தம் மூலம் ரபேல் விமானங்கள் வாங்க ரூ.19 ஆயிரம் கோடி போதும். ஆனால் நரேந்திரமோடி போட்ட ஒப்பந்தம் மூலம் வாங்க வேண்டும் என்றால் ரூ.60 ஆயிரம் கோடி வேண்டும். இதன் மூலம் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் முரண்பாடான தகவல்களை தெரிவித்து வருகிறார்.

    எனவே இந்த ஊழலை விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். அந்த குழு இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் விசாரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர் பேசும்போது, ‘ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் நடப்பது பா.ஜனதாவின் பினாமி ஆட்சி. இதனால் அவர்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய மோடி பதவி விலக வேண்டும்’ என்று கூறினார். #MukulWasnik
    ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென்று வலியுறுத்திய ராகுல்காந்தியின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து உள்ளது. #RahulGandhi #RafaleScam
    புதுடெல்லி:

    இந்திய ராணுவத்துக்கு பிரான்ஸ் நாட்டின் ரபேல் நிறுவனத்திடம் இருந்து போர் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

    பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசுகையில் ராகுல்காந்தி இதுபற்றி குறிப்பிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். அவரது குற்றச்சாட்டுக்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேரடியாகவே மறுப்பு தெரிவித்து பேசினார்.

    என்றாலும் ராகுல்காந்தியும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு பற்றி பேசி வருகிறார்கள். இந்த முறைகேடு பற்றி பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தி வருகிறார்.

    அவரது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டி வருமாறு:-


    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு என்று அந்த கட்சிக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டை காங்கிரஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. காங்கிரஸ் முதலில் தனது கட்சியின் நேர்மையை நிரூபிக்க வேண்டும். அறியாமை என்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது.

    அந்த கட்சியில் ஒருவருக்கு புரிந்து கொள்ளும் தன்மை இல்லாவிட்டால் அந்த கட்சி முழுவதுக்குமே புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமல் போய்விடும்.

    பா.ஜனதா அரசானது உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் உதிரி பாகங்களை இறக்குமதி செய்கிறது. சிலருக்கு இது தெரிந்திருக்கவில்லை. இதில் குற்றம்சாட்டும் காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக அறியாமை தொற்றிக் கொண்டு உள்ளது.

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

    இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார். #RahulGandhi #RafaleScam
    ×