search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tiruchendur beach"

    • நாழிக்கிணறு பகுதியில் வெடிகுண்டு போல தோற்றம் அளிக்கக் கூடிய மர்ம பொருள் ஒன்று கிடந்தது.
    • அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இன்று பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது நாழிக்கிணறு பகுதியில் வெடிகுண்டு போல தோற்றம் அளிக்கக் கூடிய மர்ம பொருள் ஒன்று கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மர்மபொருளை கைப்பற்றினர். அது நாட்டு வெடிகுண்டா? அல்லது திருவிழாவின் போது போடப்பட்ட வெடி பொருளா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள கடற்கரையில் இன்று காலை ஒரு டால்பின் மீன் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கடற்கரையில் அவ்வப்போது சில மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது வழக்கம். இதை அந்த பகுதி மீனவர்கள் எடுத்து செல்வார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள கடற்கரையில் இன்று காலை ஒரு டால்பின் மீன் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. அப்பகுதியில் குளித்து கொண்டிருந்தவர்கள் இதை பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அந்த டால்பின் ஓங்கல் எனப்படும் வகையை சேர்ந்தது. டால்பின் முழுவதுமாக அழுகி காணப்பட்டதால் அப்பகுதியில் நின்றவர்கள் அங்கேயே குழி தோண்டி புதைத்தனர். டால்பின் இறந்தது எப்படி? கப்பல் மோதியதில் அது இறந்ததா? அல்லது நச்சு ஏதேனும் தின்றதில் இறந்ததா? என அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    ×