என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold Missing"

    • தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வு குழு கடந்த 17-ந்தேதி கைது செய்தனர்.

    சபரிமலை கோவிலின் துவார பாலகர்கள் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    தங்கம் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தேவசம் போர்டு அதிகாரிகள் ஒன்பது பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடமும் விசாரணை நடந்தது.

    இருப்பினும் இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைத்தரகாகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவஸ்வம் போர்டு துணை ஆணையர் முராரி பாபு, செயலாளர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், திருவாபரண பெட்டியின் முன்னாள் ஆணையர் பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    துவாரபாலகர்கள் சிலைகள் மற்றும் கோவில் கதவுகளில் தங்கம் மாயமானது தொடர்பான வழக்குகளில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் பெயரே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டது.

    இதையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வு குழு கடந்த 17-ந்தேதி கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் தங்க தகடு திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

    சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் கோவில் நிர்வாக அதிகாரி முராரி பாபுவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கு தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி ஏற்கனவே கைதான நிலையில் தற்போது முராரி பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.

    • கடந்த 40 ஆண்டுகளாக தணிக்கை நடைபெறவில்லை.
    • குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்படும் குன்றிமணி மூட்டைகள் மாயமாகி உள்ளது.

    திருச்சூர்;

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. புகழ் பெற்ற இக்கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி, பாத்திரங்கள், தந்தம் போன்றவை அதிக அளவில் உள்ளன. ஆனால், இந்த விலை மதிப்பற்ற பொருட்களுக்கான ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படாததால், முறைகேடு நடந்து இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று குருவாயூர் தேவஸ்தானத்தின் 2019-20-ம் ஆண்டு தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்து உள்ளது.

    அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    குருவாயூர் தேவஸ்தான புன்னத்தூர் யானைகள் முகாமில் கடந்த 2019-20-ம் ஆண்டு 522.86 கிலோ தந்தம் மற்றும் பொருட்கள் சட்டப்படி வனத்துறையிடம் ஒப்படைக்கப்படாமலும், கோவிலுக்குள் இருக்கும் தங்க கிரீடம், வெள்ளி ஆபரணமாகவும், 2.65 கிலோ வெள்ளி பாத்திரத்துக்கு பதிலாக 750 கிராம் எடையுள்ள வெள்ளி பாத்திரமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

    குருவாயூர் தேவஸ்தான சட்ட விதிமுறைகள்படி, கோவிலில் உள்ள விலைமதிப்பற்ற பொருட்களை கோவில் நிர்வாகி ஆண்டுதோறும் நேரடியாக சரிபார்க்க வேண்டியது கட்டாயம். ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக தணிக்கை நடைபெறவில்லை. அதோடு பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணத்திற்கான ரசீதுகள் முறையாக வழங்கப்படவில்லை.

    குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்படும் குன்றிமணி மூட்டைகள் மாயமாகி உள்ளது. ரூ.1½ லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூ குறித்த கணக்குகளும் சரிவர நிர்வகிக்கப்படவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க கவச முறைகேடு சம்பவத்தை தொடர்ந்து, தற்போது குருவாயூர் கோவிலில் முறைகேடுகள் நடந்து உள்ளதாக தணிக்கை அறிக்கையில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தங்க நகை தொலைந்ததையடுத்து அப்பகுதி போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
    • சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களை வரவழைத்து கடற்கரையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் சாமி தரிசனம் செய்த வந்த பெண் ஒருவர் கடலில் புனித நீராடும்போது தன்னுடைய 5 சவரன் தங்க நகையை கரையில் தவறவிட்டார்.

    தங்க நகை தொலைந்ததையடுத்து இதுகுறித்து அப்பகுதி போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. 

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களை வரவழைத்து கடற்கரையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து கடற்கரையில் தங்க நகையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதலின் முடிவாக தங்க நகை ஒரு பணியாளரின் கைகளில் சிக்கியது. நகையை கண்ட அந்த பெண் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து தங்க நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நகையை மீட்டுக்கொடுத்த குழுவினருக்கு அங்கிருந்தோர் பாராட்டுகள் தெரிவித்தனர்.

    ×