என் மலர்

    நீங்கள் தேடியது "soil erosion"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடலூர் தாழங்குடா முதல் தேவனாம்பட்டினம் வரை கடற்கரை ஓரமாக பாதுகாப்பு கருதி நடப்பட்டிருந்த சவுக்கு மரங்கள் கடல் அலை சீற்றம் காரணமாக அடித்து சென்றது,.
    • தொடர்ந்து வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்படுவதால் சீல்வர் பீச்சிற்கு வரும் பொதுமக்களை கடலோரம் அனுமதிக்கவில்லை

    கடலூர்:

    சில மாதங்களாக தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி கடல் சீற்றம், திடீர் மழை போன்றவை நிகழ்கிறது. இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அடிக்கடி அறிவிப்பு வெளியாகிறது. கடல் அலை முன்னோக்கி அதிக அளவில் வந்து செல்வதால் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் படகுகளை நிறுத்தி செல்கின்றனர்

    மேலும், கடலூர் தாழங்குடா முதல் தேவனாம்பட்டினம் வரை கடற்கரை ஓரமாக பாதுகாப்பு கருதி நடப்பட்டிருந்த சவுக்கு மரங்கள் கடல் அலை சீற்றம் காரணமாக அடித்து செல்கிறது.இந்நிலையில் கடலில் அலைகள் வழக்கத்தை விட சீற்றம் அதிகமாக இன்று காலை முதல் காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தற்போது கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்படுவதால் சீல்வர் பீச்சிற்கு வரும் பொதுமக்களை கடலோரம் அனுமதிக்கவில்லை. மேலும், போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்ட காரணத்தினால் பரபரப்பாக காணப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பலத்த காற்றுடன் கூடிய மழை கடும் குளிரும் இருந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
    • கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர், நவம்பர் மாதம் மிக கனமழை பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் மாண்டஸ் புயல், இதனை தொடர்ந்து கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை கடந்த சில தினங்களாக பெய்து வந்தது. மேலும் கடும் குளிரும் இருந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் மார்கழி மாதம் என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவு இருந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். 

    இந்த நிலையில் நேற்று கடலூர் பகுதியில் திடீரென்று மழை பெய்தது இதன் காரணமாக திடீர் மழை கடும் பனிப்பொழிவு சீதோசன மாற்றம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் இந்த நிலையில் கடலில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தற்போது கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து வழக்கத்தை விட கடல் அலை சீற்றமாக காணப்படுவதால் பொதுமக்களை போலீசார் அனுமதிக்காமல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்ட காரணத்தினால் பரபரப்பாக காணப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மலைச்சரிவுகளில் தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் பயிரிட உதவுகிறது.
    • There is a risk of soil erosion in an area of ​​68 thousand hectares due to rainfall.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர் வளப்பாதுகாப்பு நிறுவனம் சார்பில், விவசாயிகளுக்கு 'மலைப்பகுதிகளில் மண் அரிப்பை தடுக்கும் விவசாய முறைகள்' குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமில் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன், விவசாயிகளுக்கு மலைப்பகுதிகளில் மண் அரிப்பை தடுக்கும் விவசாய முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-

    நீலகிரியில் மண் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் காய்கறி சாகுபடி செய்ததால், மாவட்டத்தில் சராசரியாக 20 முதல் 40 டன் மண் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இங்கு நிலவும் சூழல், மலைச்சரிவுகளில் தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் பயிரிட உதவுகிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக ஒழுங்கற்ற மழைப்பொழிவு உள்ளதுடன், அபாயகரமான வகையில் மண் அரிப்பு ஏற்படுகிறது.

    அதிக மழைப்பொழிவு நீலகிரியில் அதிக மழைப்பொழிவால் 68 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மண் அரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வளமான மண் இழப்பு மற்றும் மகசூல் குறைவு ஏற்படுகிறது. வடிகால் வாய்க்கால் மற்றும் நீர்நிலைகளில் வண்டல் மண் படிகிறது. இதனால் நீர்நிலைகளின் கொள்ளளவு குறைவதோடு, வெள்ளம் ஏற்படுகிறது.


    இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுப்படி, படிமட்டங்கள் முறையில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டு விளைச்சலை அதிகரித்து உள்ளது. மேலும் 50 சதவீதம் நீரோட்டம் குறைந்து, 98 சதவீதம் மண் இழப்பும் குறைந்து உள்ளது. எனவே, விவசாயத்தில் மண் அரிப்பு பிரச்சினை மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகள் குறித்து விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார். முகாமில் 375 விவசாயிகளுக்கு 15 சுற்றுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இர்வின் பாலத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை கரையின் இருபுறமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பக்கவாட்டு தடுப்பு கம்பிகளுடன் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
    • நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரின் மையப் பகுதியில் கல்லணை கால்வாய் ஆறு ஓடுகிறது. . இர்வின் பாலத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை கரையின் இருபுறமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பக்கவாட்டு தடுப்பு கம்பிகளுடன் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைபாதையில் தினமும் ஏராளமான பொது மக்கள் நடந்து செல்கின்றனர். பலர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.

    தற்போது கல்லணை கால்வாய் ஆற்றில் விநாடிக்கு 3221 கன அடி வீதம் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்த நிலையில் ஆற்றின் இடதுபுற கரையில் நடைபாதை சரிந்து பக்கவாட்டு தடுப்பு கம்பியுடன் ஆற்றில் விழுந்துள்ளது. அந்த நேரத்தில் யாரும் நடந்து செல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சில மீட்டர் தூரத்திற்கு நடைபாதை தற்போது மிக குறுகியதாக காட்சியளிக்கிறது. அந்த இடங்களில் பிடிமானம் ஏதும் இல்லாததை கண்டு கொள்ளாமல் சிலர் ஆபத்தான முறையில் நடந்து செல்கின்றனர். இதனால் அவர்கள் தவறி விழக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே முழுவதுமாக கரை உடைப்பு ஏற்பட்டு பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்னர் அதிகாரிகள் விரைந்து வந்து மண் அரிப்பை சரி செய்து கரையை பலப்படுத்த வேண்டும். நடைபாதையை பலமாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆத்தூர் அருகே இன்று காலை பலத்த மழை பெய்ததில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் சேலம் ரெயில் வந்ததால் பொதுமக்கள் துணியை காட்டி நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால் ஆத்தூர் அருகே உள்ள அம்மம் பாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தண்டவாளத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் மண் அரிப்பு காரணமாக தொங்கி கொண்டிருந்தது. அந்த சமயம் விருத்தாச்சலத்தில் இருந்து சேலம் நோக்கி, பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ரெயில் என்ஜீன் டிரைவரை பார்த்து சிகப்பு துணியை காட்டி ரெயிலை நிறுத்துமாறு கூறினார்கள். உடனே டிரைவரும் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்.

    இதையடுத்து, தண்டவாளத்தில் மண் அரிப்பு குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்தி ரம் மூலம் சீரமைப்பு பணி நடந்தது.

    பின்னர், சேலம்- விருத் தாச்சலம் ரெயில் அங்கிருந்து 8.05 மணிக்கு புறப்பட்டது. வழக்கமாக இந்த ரெயில் தினமும் காலை 9 மணிக்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு வந்தடையும். ஆனால், இன்று ½ மணி நேரம் தாமதமாக ரெயில் சேலம் வந்து சேர்ந்தது.

    இதனால் ரெயிலில் பயணம் செய்த மாணவ, மாணவிகள், வேலைக்கு வரும் ஊழியர்கள், பொதுமக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

    தக்க சமயத்தில் பொதுமக்கள் சிகப்பு துணியை காட்டியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

    ×