search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    68 ஆயிரம் ஹெக்டரில் மண் அரிப்பு ஏற்படும் அபாயம்
    X

    68 ஆயிரம் ஹெக்டரில் மண் அரிப்பு ஏற்படும் அபாயம்

    • மலைச்சரிவுகளில் தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் பயிரிட உதவுகிறது.
    • There is a risk of soil erosion in an area of ​​68 thousand hectares due to rainfall.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர் வளப்பாதுகாப்பு நிறுவனம் சார்பில், விவசாயிகளுக்கு 'மலைப்பகுதிகளில் மண் அரிப்பை தடுக்கும் விவசாய முறைகள்' குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமில் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன், விவசாயிகளுக்கு மலைப்பகுதிகளில் மண் அரிப்பை தடுக்கும் விவசாய முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-

    நீலகிரியில் மண் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் காய்கறி சாகுபடி செய்ததால், மாவட்டத்தில் சராசரியாக 20 முதல் 40 டன் மண் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இங்கு நிலவும் சூழல், மலைச்சரிவுகளில் தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் பயிரிட உதவுகிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக ஒழுங்கற்ற மழைப்பொழிவு உள்ளதுடன், அபாயகரமான வகையில் மண் அரிப்பு ஏற்படுகிறது.

    அதிக மழைப்பொழிவு நீலகிரியில் அதிக மழைப்பொழிவால் 68 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மண் அரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வளமான மண் இழப்பு மற்றும் மகசூல் குறைவு ஏற்படுகிறது. வடிகால் வாய்க்கால் மற்றும் நீர்நிலைகளில் வண்டல் மண் படிகிறது. இதனால் நீர்நிலைகளின் கொள்ளளவு குறைவதோடு, வெள்ளம் ஏற்படுகிறது.


    இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுப்படி, படிமட்டங்கள் முறையில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டு விளைச்சலை அதிகரித்து உள்ளது. மேலும் 50 சதவீதம் நீரோட்டம் குறைந்து, 98 சதவீதம் மண் இழப்பும் குறைந்து உள்ளது. எனவே, விவசாயத்தில் மண் அரிப்பு பிரச்சினை மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகள் குறித்து விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார். முகாமில் 375 விவசாயிகளுக்கு 15 சுற்றுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    Next Story
    ×