என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dharmapuri rain"

    • வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது.
    • வத்தல்மலை பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில், கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திர காலம் தொடங்கியது. அன்று முதல் தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. காய்ந்து போன மரங்கள் துளிர்விட தொடங்கின. பூமியில் வெப்பம் தணிந்தது.

    குறிப்பாக கடந்த 4 நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது.

    வத்தல்மலை பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. வத்தல்மலை அடிவாரத்தில் உள்ள தடுப்பணையில் மழைநீர் நிரம்பி, உபரிநீராக ஏரிக்கு செல்கிறது. இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிக பட்சமாக 102.7 டிகிரி பாரான்ஹீட் வெயில் பதிவானது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது.

    இதனால் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. மதிய நேரத்தில் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் தருமபுரி நகர பகுதியில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது.

    இது மக்களுக்கு ஆறுதலாக உள்ளது. தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடக்கிறது என்றனர்.

    கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரியில் இன்று காலை மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 7மணி அளவில் திடீரென மழை பெய்ய துவங்கியது. இந்த மழையால் சாலையில், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

    இதையடுத்து பூமி குளிர்ச்சியடைந்து, வெப்ப காற்று தணிந்து, குளிர்காற்று வீச துவங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குறிப்பாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இன்று அதிகாலை கிருஷ்ணகிரி பகுதியில் லேசான தூறல் மழை இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் வருமாறு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக நெடுங்கல்லில் 86.20 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. பாரூர் - 37.80 மி.மீ., போச்சம்பள்ளி - 20.40 மி.மீ., கிருஷ்ணகிரி - 10 மி.மீ., ஊத்தங்கரை - 1 மி.மீ., என மொத்த மழை அளவு 155.40 மி.மீ பதிவாகியிருந்தது.

    தருமபுரி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. ஒகேனக்கல் -பென்னாகரத்திலும் மழை பெய்து வருகிறது. தருமபுரி நகரில் இன்று காலை 6 மணி முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த இரு நாட்களாக வெயில் அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் மிகுந்த அவதிப்பட்டனர். மாலை நேரத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சுமார் 4 மணி நேரம் மிதமான மழை பெய்தது. மழையானது தற்போது காலைவரை நீடித்த நிலையில் காணப்பட்டது.

    இதனால் வானம் பார்த்து பூமியில் பயிரிடப்பட்ட மானாவாரி பயிர்களான சோளம், கம்பு, கேழ்வரகு ஆகிய பயிர்களுக்கு இந்த மழை சற்று ஆறுதல் தருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×