என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "water inflow"
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வரை வினாடிக்கு தொடர்ந்து 4 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தன.
- நீர்வரத்தால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.
ஒகேனக்கல்:
கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்ட உபரிநீர்- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வரத்தொடங்கியுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வரை வினாடிக்கு தொடர்ந்து 4 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 3039 கன அடி நீர் வெளியேற்றப்பட்டன.
இந்த நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு இந்த நீர்வரத்தானது நள்ளிரவு முதல் வரத்தொடங்கியுள்ள நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்த நீர்வரத்தால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
- தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக வரும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
- நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.
ஒகேனக்கல்:
தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிற நிலையில், தமிழக காவிரி கரையோர எல்லை பகுதிகளான, அஞ்செட்டி, ஒகேனக்கல், நாட்றம்பாளையம் ஆகிய வனப்பகுதிகளில் கன மழை பெய்தது.
இதனால் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக வரும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
ஒகேனக்கல்லுக்கு நேற்று வரை வினாடிக்கு 2000 கனஅடியாக இருந்த நீர்வரத்தானது கனமழை காரணமாக படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை நேரத்தில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்தானது மேலும் படிப்படியாக அதிகரித்து இன்று காலை வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து வருகிறது.
இந்த நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன. மேலும் தற்போது 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள இந்த நீர்வரத்து, சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்தே அதிகரிக்கவோ குறையவோ வாய்ப்பு உள்ளது என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் தெரியாதபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 3-வது நாளாக தடை விதித்தது.
பென்னாகரம்:
கர்நாடகா, கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த இரு அணைகளில் இருந்து 70 ஆயிரத்து 478 கனஅடி உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, நாட்றாபாளையம், அஞ்செட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரமாக கனஅடியாக தண்ணீர் வந்தது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
இதனால் ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் தெரியாதபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 3-வது நாளாக தடை விதித்தது.
அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஒகேனக்கல் மீண்டும் வெள்ளக்காடாக மாறி உள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
- அணையின் நீர் மட்டம் 140 அடி வரை உயர்ந்தபோது அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டது.
- தற்போது மழை முற்றிலும் நின்று விட்டதால் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
கூடலூர்:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு கடந்த வாரம் நீர் வரத்து அதிக அளவு இருந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 140 அடி வரை உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டது.
தற்போது மழை முற்றிலும் நின்று விட்டதால் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலையில் நீர் மட்டம் 136.80 அடியாக உள்ளது. நேற்று 1379 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 542 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து 1866 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 6320 மி.கன அடியாக உள்ளது.
இதே போல் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டமும் கடந்த வாரம் முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று 969 கன அடி மட்டுமே
வெளியேற்றப்படுகிறது. நீர் மட்டம் 69.31 அடியாக உள்ளது. வரத்து 1818 கன அடி. இருப்பு 5652 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 124 அடியாகவும் உள்ளது.
- திருச்சி முக்கொம்பு மேலணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது
- காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்ததோடு, அவர்களுக்கு பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைத்து தங்கவும் அமைச்சர், கலெக்டர் ஏற்பாடுகள் செய்தனர்
திருச்சி:
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பியதையடுத்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை மீண்டும் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் முழுவதுமாக திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதிகபட்சமாக 2 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடியது.
இருகரைகளையும் தொட்டுச்சென்ற காவிரியுடன் மாயனூரில் பவானி, அமராவதி அணை தண்ணீரும் சேர்ந்து திருச்சியில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் வந்தது.
இதையடுத்து அங்கிருந்து கொள்ளிடத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியும், மீதமுள்ள தண்ணீர் காவிரி ஆற்றிலும் திறக்கப்பட்டது. இதனை அமைச்சர் கே.என்.நேரு, கண்காணிப்பு அலுவலர், மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். அணையின் உறுதித்தன்மை குறித்தும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்ததோடு, அவர்களுக்கு பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைத்து தங்கவும் ஏற்பாடுகள் செய்தனர்.
காவிரியில் வெள்ளம் குறையும் வரை அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அமைச்சர் கே.என்.நேரு திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காவிரியில் தண்ணீர் வரத்து சற்றே குறையத்தொடங்கி உள்ளது. அதாவது இன்று காலை 8 மணி நிலவரப்படி 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அதில் காவிரியில 50 ஆயிரம் கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 31 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டது.
காவிரியாற்றில் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்லும் அழகை காண விடுமுறை தினமான இன்று காலை முதல் திருச்சி காவிரி பாலத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது குடும்பத்தினருடன் குவிந்து வருகிறார்கள்.
அங்கு பாதுகாப்புக்காக போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதேபோல் கொள்ளிடம் பழைய இரும்பு பாலத்தின் தூண்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. 20-வது தூண் பகுதி சிறிது சிறிதாக தண்ணீருக்குள் மூழ்கி வருகிறது.
கடந்த சில தினங்களாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே செல்லும் கல்லணை சாலையில் உத்தமர்சீலி பகுதியில் தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கியது. மேலும் 300 ஏக்கருக்கும் மேல் வாழையும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
இதனால் உத்தமர்சீலி பகுதியில் அந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலையை கடக்க கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் அந்த தரைப்பாலத்தை இருசக்கர வாகனம் மற்றும் நடந்து சென்று கடப்பதும், செல்போனில் புகைப்படம் எடுப்பதுமாக இருந்து வருகிறார்கள்.
இன்னும் ஒரு சில தினங்களில் படிப்படியாக வெள்ளம் குறையத் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தா.பழூர் அருகே அணைக்குடி கிராமம் கொள்ளிடத்தை ஒட்டி அமைந்துள்ளது.
நேற்றைய தண்ணீர் திறப்பின் அடிப்படையில் கொள்ளிடத்தில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் சென்றதால் அந்த கிராமத்தை நீர் சூழ்ந்தது. சுமார் 70 குடும்பங்கள் வீட்டை காலி செய்து வெளியேறினர். இந்த கிராமத்தில் முகாம் இல்லாத காரணத்தினால் எங்கு செல்வது என தெரியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
தங்களுக்கு நிரந்தர தீர்வாக கொள்ளிடத்தின் கரையை உயர்த்தி பலப்படுத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
- கர்நாடக அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
பென்னாகரம்:
கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று மாலை ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
கர்நாடக அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. இதனால் அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் 16-வது நாளாக தடை விதித்துள்ளது.
போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.
- காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டு மூழ்கடித்தப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளே தெரியாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
பென்னாகரம்:
கர்நாடக மாநிலம் மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் 87 ஆயிரத்து 448 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் இன்று 9-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டு மூழ்கடித்தப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளே தெரியாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் 10-வது நாளாக தடை விதித்துள்ளது.
தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் கிணறுகள் மற்றும் தோட்டங்களில் உள்ள ஆழ்துளை குழாய்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
வைகை அணையில் கடந்த 2 மாதமாக நீர் வரத்து வராமல் இருந்தது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக 280 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 38.43 அடியாக உள்ளது. அணையில் இருந்து 60 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பெரியாறு அணையின் நீர் மட்டம் 112.30 அடி. அணைக்கு வரும் 100 கன அடி தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 35.40 அடி. வரத்து 175 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 94.95 அடி. வரத்து 18 கன அடி. திறப்பு 3 கன அடி.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 18, அரண்மனைப்புதூர் 15.2, போடி 15.4, கூடலூர் 53, மஞ்சளாறு 73, பெரியகுளம் 63, சோத்துப்பாறை 48, உத்தமபாளையம் 31.6, வைகை அணை 31.2, வீரபாண்டி 37 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
இதே போல பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான பெரியாறில் 2.6, தேக்கடியில் 5.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் 8.2, கொடைக்கானல் 37.6, பழனி 10.5, ஒட்டன்சத்திரம் 32.5, கொடைக்கானல் போர்ட் கிளப் 40 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பங்குனி மாத கடைசியில் விவசாயிகள் மானாவாரி விதைப்பை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த முறை கோடை மழை தாமதமாக பெய்து வருவதால் தற்போது நிலக்கடலை, எள், மொச்சை ஆகிய பயிர்கள் விதைக்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். #VaigaiDam
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 1 மாதத்திற்கும் மேலாக வெகுவாக குறைந்தது.
நேற்று அணைக்கு 39 கன அடி தண்ணீர் வந்தது. இன்று இது காலை அடியோடு சரிந்து 16 கன அடி தண்ணீர் மட்டும் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 64.34 அடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி இது 64.21 அடியாக குறைந்துள்ளது.
நீர்வரத்து இதேநிலை நீடித்தால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. #MetturDam
வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் வைகை, பெரியாறு அணகளின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது.
அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வரை 510 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. இன்று காலை அது 615 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 115.85 அடியாக உள்ளது. தமிழக பகுதிக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணயின் நீர்மட்டம் 48.92 அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 760 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.15 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.39 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
வைகை அணை 2.2., மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.