ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து 5-வது நாளாக நீர்வரத்து 1000 கன அடியாக நீடிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு முற்றிலுமாக குறைந்தது. காவிரி ஆற்றில் தொடர்ந்து 5-வது நாளாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,000 கன அடியாக நீடிக்கிறது.
ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து 5-வது நாளாக நீர்வரத்து 1000 கன அடியாக நீடிப்பு
Published on

ஒகேனக்கல்:

கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது.

இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு முற்றிலுமாக குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.

இந்தநிலையில் காவிரி ஆற்றில் தொடர்ந்து 5-வது நாளாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,000 கன அடியாக நீடிக்கிறது.

இருப்பினும், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குறைந்த அளவில் தண்ணீர் கொட்டியது.

காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com