search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூமி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகம்.
    • வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி கண்டுபிடித்துள்ளது.

    வாஷிங்டன்:

    பூமியை போன்று வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதில் சூரிய குடும்பத்துக்கு வெளியே பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி கண்டு பிடித்துள்ளது.

    நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் கடந்த 2017-ம் ஆண்டு ஜிஜே 9827டி என்று பெயரிடப்பட்ட கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியின் விட்டத்தில் ஏறக்குறைய இரண்டு மடங்கு இருக்கும் இந்த கிரகத்தில் நீர் நிறைந்த வளிமண்டலங்கள் இருப்பதை ஹப்பிள் தொலைநோக்கி தற்போது கண்டறிந்துள்ளது. இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மீனம் நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் ஒரு குறு விண்மீனை சுற்றி வரும் இந்த கிரகம் ஒவ்வொரு முறை இந்த சூரியனை கடந்து செல்லும் நேரத்தில் எடுக்கப்படும் நிறமாலை தரவுகளின் அடிப்படையில் அந்த கிரகத்தில் உள்ள மூலக்கூறுகள் கண்டறியப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறு நிறைந்த வளிமண்டலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பூமியில் உள்ள கடலை போன்று இரண்டு மடங்கு அதிகமாக நீராவியை இந்த கிரகம் பெற்றிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த கிரகம் வெள்ளி கிரகத்தை போல 800 டிகிரி பாரன்ஹீட் வெப்பமாக இருப்பதால், வளிமண்டலம் நீராவியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    பாறைகள் நிறைந்த கிரகங்களில் வளிமண்டலங்களின் நீர் மூலக்கூறுகள் இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான இது ஒரு முக்கியமான படியாகும் 97 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மீனம் நட்சத்திர மண்டலத்தில் பூமியைப் போன்ற வளிமண்டலம் பெற்ற ஒரு கிரகத்தை கண்டறிந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

    இதற்கு முன்பு கண்டறிந்த நீர் மூலக்கூறு ஆக்சிஜன் இருக்கும் கிரகங்களை ஒப்பிடுகையில், தற்போது கண்டறிந்துள்ள கிரகம் மிக அருகில் இருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    • அண்டத்தில் பூமியை போன்று பல கிரகங்கள் உள்ளது
    • உலக நாடுகள் அனைத்தும் இணைந்து நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும்.

    ஓசூர்:

    ஓசூர் அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் கையறுகே நிலா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக அறிவியல் அறிஞர் முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.

    இந்த விழாவில் சிறகை விரி சிகரம் தொடு என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதேபோல அறிவியல் ஆர்வம் கொண்ட பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு விஞ்ஞானம் சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:


    பூமியிலிருந்து 400 கி.மீ தூதரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுள் காலம் விரைவில் முடிவடைகிறது.

    அதனால் புதிதாக அமைக்க வேண்டிய சர்வதேச விண்வெளி மையத்தை நிலவில் ஆரம்பிப்போம் என நான் பல இடங்களில் கூறி வருகிறேன். உலக நாடுகள் அனைத்தும் இணைந்து நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும். இதன் மூலம் நிலவுக்கு விரைவாகவும் சிக்கனமாக போக முடியும். அனைத்து நாடுகளும் இணைந்து இதனை செய்தால் சண்டை இல்லாத உலகத்தை உருவாக்க முடியும். பூமிக்கு தேவையான எரிபொருட்களை அங்கிருந்து சிக்கனமாக கொண்டு வர முடியும் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், பூமியை துல்லியமாக அறிவதற்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ளக்கூடிய ஒரு மிகப்பெரிய திட்டம் நிசார் ஆகும், நாசா இஸ்ரோ சிந்தடிக் அப்பர்சர் ரேடார் என்று சொல்லக்கூடிய அதன் கடைசி பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இதன் மூலமாக பூமியில் இயற்கை வளங்களை பார்ப்பது மட்டுமல்லாமல் சுற்றுப்புற சூழ்நிலைகளை துல்லியமாக பார்ப்பதற்கான வாய்ப்பை இந்த கலன் உருவாக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார். சந்திரன் 3 பிரக்யான் ரோவர் உயிர்ப்பித்தாலும் விக்ரம் லேண்டர் வழியாகத்தான் செய்தி பரிமாற்றத்தை கொடுக்க முடியும். பூமிக்கு இன்னும் புதிதாக செய்திகள் வரும் என்ற நம்பிக்கை இனிமேல் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை, அண்டத்தில் பூமியை போன்று பல கிரகங்கள் உள்ளது அங்கு உயிர்கள் உள்ளதா என ஆராய்ச்சியில் ஈடுபட்டால் சந்திராயன் 3ல் அனுப்பி உள்ள கலனில் இருந்து பூமியை நோக்கி அனுப்பும் சமிக்கைகள் மூலம் ஆராய்ச்சி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.

    • சூரிய குடும்பத்தில் நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதி கைபர் பட்டை எனப்படுகிறது.
    • சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களில் இருந்து வேறுபட்டது.

    டோக்கியோ:

    இன்றைய நவீன உலகில் அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிரபஞ்சத்தில் தொலைநோக்கியின் மூலமாகவும், அறிவியல் நுணுக்கங்களையும் வைத்து தற்போது வரை ஏராளமான கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்றவைகளை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் தற்போது பூமியை போன்ற கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கிண்டாய் பல்கலைக்கழகத்தின் பாட்ரிக் சோபியா லிகாவ்கா மற்றும் டோக்கியோவில் உள்ள ஜப்பானின் தேசிய வானியல் ஆய்வகத்தின் தகாஷி இடோ ஆகியோரின் சமீபத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

    அந்த கிரகம் பூமி போன்று இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதி கைபர் பட்டை எனப்படுகிறது. இது பனி பொருட்கள் நிறைந்த இடம் என கருதப்படுகிறது.

    இது 9-வது கிரகத்தை விட மிக அருகில் உள்ளது. ஆரம்பகால சூரிய குடும்பத்தில் இதுபோன்ற பல கோள்கள் இருந்ததால், ஒரு ஆதி கோளாக இருக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

    கைபர் பெல்ட்டில் மில்லியன் கணக்கான பனிக்கட்டி பொருட்கள் இருப்பதாக அறியப்படுகிறது, அவை நெப்டியூனுக்கு அப்பால் அமைந்துள்ளதால் அவை டிரான்ஸ்-நெப்டியூனியன் பொருட்கள் என குறிப்பிடப்படுகிறது . இவை சூரிய குடும்பம் உருவானதில் இருந்து எஞ்சியவை என்று வானியலாளர்கள் நம்புகின்றனர்.

    அவை பாறை, உருவமற்ற கார்பன் மற்றும் நீர் மற்றும் மீத்தேன் போன்ற ஆவியாகும் பனிக்கட்டிகளின் கலவைகளால் ஆனவை.

    "டிரான்ஸ்-நெப்டியூனியன் பொருட்களின் சுற்றுப்பாதைகள் வெளிப்புற சூரிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்படாத கிரகம் இருப்பதைக் குறிக்கலாம்" என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த பாறை மற்றும் பனி உடல்கள் வெளிப்புற சூரிய மண்டலத்தில் கிரக உருவாக்கத்தின் எச்சங்கள். அருகாமையில் உள்ள ஏதோ ஒரு பெரிய ஈர்ப்பு விசை இந்த பொருட்களில் ஈர்க்கப்பட்டு, அவற்றுக்கு "விசித்திரமான சுற்றுப்பாதைகள்" வழங்குவதை ஆராய்ச்சி குழு கவனித்தது.

    இந்த கிரகம் ஏற்கனவே சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களில் இருந்து வேறுபட்டது. இது மிகவும் பெரியது என்பதால் தொலைதூர சுற்றுப்பாதையில் அமைந்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

    இது நெப்டியூனை விட சூரியனில் இருந்து 20 மடங்கு தொலைவில் சுற்றி வருகிறது. இருப்பினும் இன்று வரை வானியலாளர்கள் 9 கிரகம் இருப்பதாக மட்டுமே கூறி உள்ளனர்.

    இதுபற்றி விஞ்ஞானிகள் கூறுகையில், 450 கோடி வருடங்களுக்கு முன்பு நமது சூரியன் உருவாகியது சூரியன் உருவாகிக் கொண்டிருந்தபோது அதனை சுற்றி சுழன்று கொண்டிருந்த தூசுக்களும் வாயுக்களும் விண்கற்களும் ஈர்ப்பு விசையின் காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதியது. இந்த மோதலின் காரணமாகவே சூரியத்தொகுதியில் உள்ள 8 கோள்களும் அதன் துணைக்கோள்களும் உருவானது.

    இப்படி நடந்த மோதலில் ஒன்றுடன் ஒன்று மோதிய அனைத்து பொருட்களும் கோள்களாக மாறவில்லை. மீதம் இருந்த அனைத்தும் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கின்றன. இப்படி எஞ்சிய பொருட்கள் சூரியத் தொகுதியின் உள்ளே சிறுகோள் பட்டை எனும் பகுதியில் சூரியனைச் சுற்றி வலம்வந்து கொண்டிருக்கின்றன.

    இந்த சிறுகோள் பட்டை போன்றே நெப்டியூன் கிரகத்திற்கு அப்பால் காணப்படும் சூரிய குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட விண்கற்களின் அமைப்பே கைப்பர் பட்டை ஆகும்.

    கைப்பர் பட்டையில் உள்ள மிகப்பெரிய கோளான புளூட்டோ 1930-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டாலும் கைப்பர்பட்டையை விஞ்ஞானிகளால் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் புளூட்டோவை போன்று அதில் உள்ள ஏனைய பொருட்கள் எதுவும் சூரியஒளியை பிரதிபலிக்கவில்லை. தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாவே கைப்பர் பட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

    இந்த கைப்பர் பட்டை பகுதியில்தான் பூமி போன்ற கிரகம் இருக்கிறது. இது தொடர்பாக ஆய்வு செய்யப்படவேண்டியது அவசியம். நாங்கள் கண்டுபிடித்திருப்பது எல்லோரும் கூறிவரும் 9-வது கிரகம் அல்ல. சூரிய குடும்பத்தின் எல்லையில் இந்த கிரகம் உள்ளது என்கின்றனர் ஜப்பான் விஞ்ஞானிகள்.

    சூரியனில் இருந்து இந்த புதிய கிரகம் சுமார் 200 வானியல் அலகு தொலைவில் உள்ளது. ஒரு வானியல் அலகு என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரமாகும். ஜப்பான் விஞ்ஞானிகளின் இந்த தகவல் வானியல் அறிஞர்களின் அடுத்தகட்ட தேடுதலுக்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது.

    • விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது மகனுடன் பேசி உள்ளார்.
    • விண்வெளியில் நான் விரும்பும் சிறந்த விஷயம் என்ன என்று கேட்கிறீர்கள்.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 மாத விண்வெளி பயணமாக சென்றுள்ளார். அவர் அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இமயமலை புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் அவர் விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது மகனுடன் பேசி உள்ளார். அப்போது அவரிடம் பூமியில் உங்களுக்கு எது மிகவும் பிடிக்கும் என அவரது மகன் அப்துல்லா கேட்டுள்ளார். அதற்கு அவர் மகன், பூமியில் நான் மிகவும் விரும்பும் விஷயம் நீ தான் என்று சுல்தான் அல் நெயாடி குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், விண்வெளியில் நான் விரும்பும் சிறந்த விஷயம் என்ன என்று கேட்கிறீர்கள். அது உங்களுக்கு தெரியும். நாங்கள் இங்கே மைக்ரோ கிராவிட்டி சூழலில் இருக்கிறோம். நீங்கள் விரும்பும் பல விஷயங்களை நாங்கள் இங்கே செய்யலாம். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பறப்பது போன்ற அனைத்தையும் செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் டுவிட்டரில் வைரலாகி வரும் நிலையில் அதை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • இன்று நிலவு பூமியின் மேற்பரப்பில் இருந்து 3,57,530 கிலோமீட்டர் தொலைவிலேயே இருக்கும்
    • இதே போன்று மீண்டும் ஒரு நிகழ்வு 2037-ல் நடைபெறும்

    எப்போதாவது மட்டுமே தோன்றக்கூடிய ஒரு அபூர்வ நிகழ்வு, இன்று வானில் நடைபெற போகிறது.

    சூப்பர் மூன் எனப்படும் இந்த நிகழ்வில் வழக்கமான முழு அளவை விட நிலவு சற்று பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும்.

    நிலவோ அல்லது ஒரு செயற்கைகோளோ அதனுடைய சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வருகின்றபோது அது பெரிஜி என அழைக்கப்படும். அவ்வாறு நிலவு வரும்போது அதன் அளவு பெரியதாகவும், அதிக ஒளியுடன் பிரகாசமாகவும் தெரியும்.

    இன்று நிலவு பூமியின் மேற்பரப்பில் இருந்து 3,57,530 கிலோமீட்டர் தொலைவிலேயே இருக்கும். அதனால் பூமியின் மீது அதிக ஒளி வீசப்படும்.

    வானியலில் பெரிஜி-சிஜிஜி (perigee-syzygy) என இந்த நிகழ்வு அழைக்கப்பட்டாலும், பார்க்க மிக அழகாக வசீகரிக்கும் விதத்தில் நிலவு தென்படுவதால், இது வழக்கத்தில் "சூப்பர் மூன்" என அழைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன், ஜூலை மாதம் தோன்றியது.

    2023-ம் ஆண்டின் 4-வது மற்றும் கடைசி சூப்பர் மூன் செப்டம்பர் மாதத்தில் நிகழும்.

    ஆகஸ்ட் மாதம் 2 சூப்பர் மூன் தோன்றும் நிகழ்வு, இதற்கு முன்பு கடைசியாக 2018-ல் நடந்தது.

    இதே போன்று மீண்டும் ஒரு நிகழ்வு 2037-ல் நடைபெறும்.

    ஆகஸ்ட் 1-ம் தேதி சூப்பர் மூன் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தென்கிழக்கு அடிவானத்திற்கு மேலே எழும்போது முழுமையானதாகவும் பிரகாசமாகவும் தோன்றும். ஆகஸ்ட் 2-ம் தேதி நள்ளிரவு 12.02 மணிக்கு இந்தியாவில் இதனை காண முடியும்.

    இந்த மாதத்தின் 2-வது சூப்பர் மூன் ஆகஸ்ட் 31 அன்று நடக்கும். ஆனால், அது காலை 7.05 மணிக்கு உச்சம் அடையும் என்பதால் இந்தியாவில் அது தெரிய வாய்ப்பில்லை.

    • பல ஆயிரம் ஆண்டுகளாக புவியின் வெப்ப நிலை உள்ளிட்டவை ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
    • மனிதர்களால் அதிக அளவு பசுமை இல்லாவாயுக்களை தொடர்ந்து வெளியிடுவதே வெப்ப நிலை உயர்வுக்கு காரணம்.

    நியூயார்க்:

    பருவ நிலை மாற்றம் காரணமாக பூமியின் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகிறது.

    தற்போது ஐரோப்பா நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வெப்ப அலை காரணமாக காட்டுத்தீயும் பரவி வருகிறது.

    நிலக்கரி, எண்ணெய், எரிவாயு மற்றும் பிற மனித செயல்பாடுகளால் பூமி வெப்ப நிலை 1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஐ.நா.வில் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பனிக்கட்டிகள், மரங்களின் வயது, பல ஆயிரம் ஆண்டுகளாக புவியின் வெப்ப நிலை உள்ளிட்டவை ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் அதிகபட்சமாக சீனாவின் 126 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை பதிவாகி இருந்ததையும், கனடாவில் இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதையும் ஆராயப்பட்டது.

    இந்த வெப்ப நிலை தொடர்ந்து நீடிக்கும்போது பனிப்பாறைகள் மேலும் உருவாகி கடல்நீர் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகள் மூழ்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். மேலும் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து உள்ளதாகவும், உலகின் மிகவும் குளிர் நிலவக்கூடிய அண்டார்டிகா பகுதியிலும் வெப்ப காற்றை உணர முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே 1.20 லட்சம் ஆண்டுகளில் மிகவும் வெப்பமான மாதமாக இந்த ஜூலை இருக்கும் என்று கால நிலை விஞ்ஞானி கார்ஸ்டன் ஹவுஸ்டீன் தெரிவித்தார்.

    ஜெர்மனியின் லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஹவுஸ்டீன் நடத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்த வெப்பத்தை விட இந்த ஜூலை மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது. முழுமையான உலகளாவிய சராசரி வெப்ப நிலையின் அடிப்படையில் எப்போதும் வெப்பமான மாதமாக இது இருக்கும்.

    மனிதர்களால் அதிக அளவு பசுமை இல்லாவாயுக்களை தொடர்ந்து வெளியிடுவதே வெப்ப நிலை உயர்வுக்கு காரணம். எல் நினோவின் விளைவுகள் ஆண்டின் 2-ம் பாதியில் ஜூன் மற்றும் ஜூலையில் மட்டுமே முழுமையாக வெளி வருவதால் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை அதிக வெப்பம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    • பூமியில் இருந்து 33 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்குள் விண்கல் கடந்து செல்கிறது.
    • சமீபத்தில் பூமிக்கு மிக அருகில் 2023 ஜெஎல்1 என்ற விண்கல் கடந்து செல்லும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வாஷிங்டன்:

    விண்வெளியில் ராட்சத விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவற்றில் சில விண்கற்கள் பூமிக்கு அருகில் வந்து கடந்து செல்கின்றன.

    இந்நிலையில் 298 அடி அகலம் கொண்ட ராட்சத விண்கல் இன்று பூமியை கடந்து செல்கிறது. 2013 டபிள்யூ-வி.44 என்று பெயரிடப்பட்ட இந்த ராட்சத விண்கல்லை அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    இந்த விண்கல்லை நாசா 2013-ம் ஆண்டு கண்டு பிடித்தது. இது ஒலியின் வேகத்தை விட 34 மடங்கு வேகத்தில் வினாடிக்கு 11.8 கி.மீ வேகத்தில் பயணிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த ராட்சத விண்கல் இந்திய நேரப்படி இன்று பிற்பகலில் பூமிக்கு மிக அருகில் வந்து கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 33 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்குள் விண்கல் கடந்து செல்கிறது.

    ராட்சத விண்கல் கடந்து பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது. சமீபத்தில் பூமிக்கு மிக அருகில் 2023 ஜெஎல்1 என்ற விண்கல் கடந்து செல்லும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது பூமியில் இருந்து 24.90 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என்றும் இது மணிக்கு 26 ஆயிரத்து 316 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும் தெரிவித்தனர்.

    • 80 சென்டிமீட்டர் அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
    • நிலத்தடி நீரை மறு பகிர்வு செய்வதே இந்த பூமியின் சாய்வுக்கான முதன்மை காரணியாக கண்டறிந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி வெளியேற்றி வருவதன் காரணமாக பூமி 1993 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 80 சென்டிமீட்டர் அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

    அமெரிக்க புவியியல் ஒன்றியத்தின் நாளிதழான ஜியோ பிஸிக்கல் ரிசர்ச் லெட்டர்சில் வெளியாகி உள்ள ஆய்வு முடிவுகள் இதனைத் தெரிவித்துள்ளது. மேற்கண்ட கால கட்டத்தில் மக்கள் 2,150 ஜிகாடன் நிலத்தடி நீரை 6 மில்லி மீட்டர் (0.24 அங்குலம்) கடல் மட்டத்திற்கு சமமாக உயர்த்தி உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.

    கடந்த காலங்களில் துருவங்களின் சறுக்கல் கடல் நீரோட்டங்கள் மற்றும் பூமிக்கு அடியில் ஆழமான வெப்பமான பாறைகளின் வெப்ப சலனம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் மட்டுமே மேற்கண்ட மாற்றங்கள் ஏற்பட்டது. ஆனால் புதிய ஆராய்ச்சி முடிவுகள் நிலத்தடி நீரை மறு பகிர்வு செய்வதே இந்த பூமியின் சாய்வுக்கான முதன்மை காரணியாக கண்டறிந்துள்ளனர்.

    மேலும் பூமியின் சுழற்சி துருவம் உண்மையில் நிறைய மாறுதல்களை கண்டுள்ளது என ஆய்வுக்கு தலைமை தாங்கிய சியோல் தேசிய பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியலாளர் கி. வியோன் சியோ தெரிவித்துள்ளார். இதனை ஆய்வில் ஈடுபடாத ஜெட் பிரபல்சன் ஆய்வகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி சுரேந்தரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சியதால் ஏற்பட்ட மாற்றங்களால் பருவங்கள் மாறும் அபாயம் இல்லை. அதே வேளையில் புவியியல் நேர அளவீடுகளில் துருவ சறுக்கல் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலநிலை தொடர்பான காரணங்களில் நிலத்தடி நீரின் பகிர்வு உண்மையில் பூமி சுழற்சி சறுக்கலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளதாக விஞ்ஞானி சியோ கூறியுள்ளார். மேலும் மத்திய அட்சரேகையில் இருந்து தண்ணீரை மறு பகிர்வு செய்வது துருவ சறுக்கலை கணிசமாக பாதிக்கிறது.

    பெரும்பாலான மறு பகிர்வு வட அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்திய பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளும் மத்திய அட்சரேகைகளில் அமைந்துள்ளன. பூமியின் சுழற்சியை மாற்றுவதில் நீரின் பங்கு இருப்பதாக கடந்த 2016-ல் கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆனால் இப்போது வரை அதன் சறுக்கல்களுக்கான நிலத்தடி நீரின் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்யப்படவில்லை. இதுவே முதன் முறை என தெரிவித்துள் ளனர்.

    ஆனால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதை தடுக்க பல நாடுகள் பல்வேறு திட்டங்களை தீட்டுவதன் மூலம் பூமியின் சுழற்சி மாற்றத்தை மீண்டும் மாற்ற இயலும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இதன் பிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் இதழில் வெளியிடப்பட்ட 2021 ஆய்வில், 1995-ம் ஆண்டில் துருவ சறுக்கலின் திசை தெற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்தது. அதே போன்று 1995-2020 வரையிலான சராசரி சாய்வின் வேகம் 1981-95 காலகட்டத்தை ஒப்பிடும்போது 17 மடங்கு வேகமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

    கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்கள் நீர் நிலைகளில் இருந்து 18 ட்ரில்லியன் டன் தண்ணீரை மாற்றாமல் பிரித்தெடுத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    • பவுர்ணமி அன்று சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கி கொண்டிருக்கிறது.
    • மூலவர் போற்றிகளை பாராயணம் செய்ய ஸ்ரீ காங்கேய சித்தர் பீட வழிபாட்டு குழு ஏற்பாடு செய்திருந்தார்.

    நாகப்பட்டினம்:

    மார்கழி திருவாதிரை நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்த நாளான நேற்று நாகூரில் உள்ள காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் பவுர்ணமி யாகம் சிறப்பாக நடைபெற்றது.

    இந்நாளில் சித்தர்கள் பீடத்தில் யாகம் செய்து வழிபடுபவர்களுக்கு உடல், மனம், ஆன்மாவால் செய்த பாவங்கள் சித்தர்கள் அருளால் நீங்கும் என்பது நம்பிக்கையாகும். பவுர்ணமி அன்று சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கி கொண்டிருக்கிறது.

    மாதம்தோறும் பௌர்ணமியாகத்தை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையின் ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், குமார், பழனிவேல் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    யாகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் சிவபுராணம் மற்றும் 108 மூலவர் போற்றிகளை பாராயணம் செய்ய ஸ்ரீ காங்கேய சித்தர் பீட வழிபாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஆசிரியர் சசிகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.

    • உடல் உறுப்புகள் அனைத்தும் சீக்கிரமாக சீர்கெட்டுவிடும்.
    • ஆக்ஸிஜன் அளவு முற்றிலும் குறையத் தொடங்கும்.

     திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் திருப்பூர் மாவட்டம் இணைந்து உலக ஓசோன் தினம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ஓசோன் இல்லாமல் பூமியில் உயிர் வாழ முடியாது, ஓசோன் பூமியை காக்கும் காவலன், இவற்றின் முக்கிய பணி சூரிய ஒளியிலிருந்து வரும் அதிக வெப்பத்தையும், புற ஊதாக் கதிர்களையும் தடுத்து பூமியில் உள்ள உயிரினங்களை பாதுகாக்கிறது.

    ஓசோன் படலம் அழிந்தால் பூமியில் அனைத்து உயிரினங்களும் அழிந்து விடும். மேலும் நீர் நிலைகள் வறண்டு போய்விடும்.வெப்பம் அதிகமானால் நம்முடைய தோள் சுருங்கும். உடல் உறுப்புகள் அனைத்தும் சீக்கிரமாக சீர்கெட்டுவிடும். பல நோய்கள் உயிரனங்களை தாக்கும். உணவு சங்கிலி அறுபட்டு விடும். ஆக்ஸிஜன் அளவு முற்றிலும் குறையத் தொடங்கும், ஓசோன் என்பது உலகிற்கும்,உயிரினங்களுக்கும் உற்ற தோழன். தலைமறைவாக இருந்தாலும் தலைமுறை தலைமுறையாக நம்மை காக்கிறது ஓசோன்.

    பூமியில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களை பாதுகாக்கவும், காப்பாற்றவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றார். தெற்கு காவல் ஆய்வாளர் பிச்சையா பேசுகையில், மாணவர்கள் ஓசோனை பாதுகாக்க வலியுறுத்தி குழுக்களாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து மாணவ செயலர்கள் அருள்குமார், பூபாலன், ரமேஷ், சர்நித்தா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஓசோன் விழிப்புணர்வு நடனம் மற்றும் நாடகத்தை அரங்கேற்றினார்கள். பின்னர், மாணவ மாணவிகளும், பொது மக்களும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அலுவலர்களும் இணைந்து ஓசோன் படலத்தை காக்க பதாகைகளை ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் முரளி, பாரதிராஜா, சத்தியன் மற்றும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் எடுத்து கொள்கிறது.
    • கடந்த ஜூலை 29-ந் தேதி பூமியானது வழக்கத்துக்கு மாறாக 1.59 மில்லி வினாடிகள் முன்னதாகவே தனது சுழற்சியை நிறைவு செய்துள்ளது.

    நியூயார்க்:

    பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் எடுத்து கொள்கிறது. தன்னைத் தானே சுற்றி கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது.

    இந்நிலையில் சமீபகாலமாகவே பூமி அதன் சுற்றும் வேகத்தை அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    1960-ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு பூமியில் குறுகிய மாதம் பதிவானது. 2020 ஜூலை 19-ந் தேதி மிகவும் குறுகிய நாள் பதிவானது. அன்றைய தினம் வழக்கமான 24 மணி நேர நாளை விட 1.47 மில்லி வினாடிகள் குறைவாக இருந்தது.

    அதாவது அன்றைய தினம் பூமி வழக்கத்தை காட்டிலும் வேகமாக சுற்றி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதன்பிறகும் பூமியின் சுழற்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால் குறிப்பிடத்தக்க சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.

    இந்நிலையில் கடந்த ஜூலை 29-ந் தேதி பூமியானது வழக்கத்துக்கு மாறாக 1.59 மில்லி வினாடிகள் முன்னதாகவே தனது சுழற்சியை நிறைவு செய்துள்ளது.

    இதன் மூலம் மிக குறுகிய நாள் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கு சற்று அதிகம் ஆகும். என்றாலும் 1.59 மில்லி வினாடிகள் கூட பூமியின் சுழற்சியில் மிக முக்கியம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

    வரும் நாட்களில் மேலும் குறுகியதாக மாறலாம் என்றும், அதற்கான தொடக்கமாக இது இருக்கலாம் என்றும் இன்ட்ரஸ்டிங் என்ஜினீயரிங் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

    பூமி சுழற்சி ஏன் வேகமாகிறது? என்பதற்கான தெளிவான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை. பூமியின் மையப்பகுதி அல்லது வெளிப்புற அடுக்குகள், கடல்கள், அலைகளில் ஏற்படும் மாற்றம் இதற்கான காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    பூமியின் சுழலும் வேகம் இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வந்தால் அது நெகடிவ் லீப் வினாடிகளுக்கு வழிவகுக்கும். அதாவது பூமி சூரியனை சுற்றி வரும் விகிதத்துக்கும், கடிகாரங்களுக்கும் பொருந்தாமல் போகலாம். இதுபோன்ற லீப் வினாடிகள் ஸ்மார்ட் போன்கள், கம்ப்யூட்டர்கள், தொலை தொடர்பு அமைப்புகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

    ஏனெனில் கடிகாரம் 23:59:59-ல் இருந்து 23:59:60 வந்த பின்னர் தான் 00:00:00 என்று அடுத்த நாளுக்கு மாறும். பூமி வேகமாக சுற்றுவதால் லீப் வினாடிகள் ஏற்படும் பட்சத்தில் அது தொலை தொடர்பு புரோகிராம்களில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

    இதனை சரிகட்ட ஒருங்கிணைந்த யூனிவர்சல் டைம் (யு.டி.சி) ஏற்கனவே 27 முறை லீப் நொடிகளை மாற்றி அமைத்துள்ளது. இப்பொழுது மீண்டும் அதனை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

    அப்போது தான் தொலை தொடர்பு சாதனங்களிலும், உலக அளவிலும் நேரத்தை சரியாக கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    • பூமி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதை பெரிஹேலியன் என்று அழைக்கப்படும்.
    • அல்பெலியன் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6-ந்தேதியும், பெரிஹேலியன் ஜனவரி 2-ந்தேதி தொடங்கும்.

    புதுடெல்லி:

    சூரியனை பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றன.

    சூரியனை சுற்றியுள்ள பூமியின் சுற்று வட்ட பாதை ஒரு சரியான வட்டமானதால் 0.0167 நீள்வட்ட அளவுடன் சிறிது ஓவல் வடிவத்தில் இருக்கும்.

    பூமி, ஒரு வருடத்தில் சூரியனில் இருந்து அதன் தொலை தூர நிலைக்கு செல்லும். இது அல்பெலியன் என்று அழைக்கப்படும். பூமி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதை பெரிஹேலியன் என்று அழைக்கப்படும்.

    அல்பெலியன் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6-ந்தேதியும், பெரிஹேலியன் ஜனவரி 2-ந்தேதி தொடங்கும்.

    பூமியில் இருந்து சூரியனுக்கான சராசரி தூரம் 150 மில்லியன் கிலோமீட்டர் தூரம் ஆகும். அல்பெலியன் நிலையில் இருக்கும் போது 152 மில்லியன் கிலோ மீட்டர் தூரமாக மாறும். பின்னர் அது ரெிஹேலியன் நிலையில் இருக்கும் போது பூமியில் இருந்து சூரியனுக்கான தூரம் 147 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும்.

    அல்பெலியன் மற்றும் பெரிஹெலியன் இடையே உள்ள வேறுபாடு 5 மில்லியன் கிலோ மீட்டர் தூரம். பூமி, அல்பெரியன் நிலையில் இருக்கும்போது வழக்கத்தை விட குளிர் அதிகம் இருக்கும்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு சூரியனில் இருந்து பூமி மிக தொலை தூர புள்ளியான அல்பெலியன் நிலையை நாளை (திங்கட்கிழமை 4-ந்தேதி) அடைகிறது. இது வருகிற ஆகஸ்டு 22-ந்தேதி முடிவடையும். அல்பெலியன் நிகழ்வு நாளை காலை 5.27 மணிக்கு தொடங்கும்.

    அதன்படி நாளை முதல் பூமி, சூரியனில் இருந்து 15 கோடியே 20 லட்சத்து, 98 ஆயிரத்து 455 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தூரம் 9 கோடி கிலோ மீட்டர் ஆகும். ஆனால் அல்பெலியன் நிகழ்வு காலத்தில் 15.20 கோடி கி.மீ. தூரமாக அதிகரிக்கும். சுமார் 66 சதவீதம் தூரத்தின் அளவு அதிகரிக்கும்.

    சூரியனில் இருந்து பூமி தனது உச்சப்பட்ச தூரத்தை அடைவதால் குளிர்ச்சி அதிகரிக்கும். அல்பெலியன் கால கட்டத்தில் உடல்வலி, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாச பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம.

    எனவே வைட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுப் பொருட்களுடன் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது நல்லது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×