என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச விண்வெளி நிலையம்"

    • சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ம் தேதி புறப்பட்டனர்.
    • 28 மணி நேரம் பயணித்து 26-ம் தேதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

    புதுடெல்லி:

    ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

    அவர்கள் 4 பேரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட, பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ம் தேதி புறப்பட்டனர்.

    விண்ணில் ஏவப்பட்ட பால்கன்-9 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த டிராகன் விண்கலம், தொடர்ந்து 28 மணி நேரம் பயணித்து 26-ம் தேதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. அதன்பிறகு அதனுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட டிராகன் விண்கலத்தில் இருந்த சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர்.

    அங்கு அவர்கள் 18 நாட்கள் தங்கி இருந்து 60 ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். அவற்றில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 7 சோதனைகள் அடங்கும்.

    இதற்கிடையே, சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் மூலம் நேற்று மாலை 4.45 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர்.

    இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம் இன்று மதியம் வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது.

    இதையடுத்து, டிராகன் விண்கலத்தில் உள்ள 2 சிறிய 'டுரோக்' பாராசூட்டுகள் பூமிக்கு மேல் சுமார் 5.5 கிலோ மீட்டர் உயரத்தில் கலிபோர்னியா கடலின் மேல் பகுதியில் திறக்கப்பட்டது. அதன்பின், 4 பெரிய பாராசூட்டுகள் விரிந்து பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது.

    அதன்பின், 10 நிமிடங்களில் ஸ்பேஸ் எக்ஸின் மீட்புக் கப்பல் விண்கலத்தை அடைந்தது. விண்கலத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களையும், மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் சென்றனர்.

    பின்னர் 4 பேரும் வாண்டன்பெர்க் விண்வெளிப் படை தளத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் மறுவாழ்வைத் தொடங்குவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இந்தியாவின் விண்வெளிப் பயணத்திற்கு சுபான்ஷு சுக்லாவின் இந்த வெற்றிகரமாக திரும்புதல் ஒரு பெருமையான தருணமாகும். சுக்லாவின் பணி இஸ்ரோவின் ககன்யான் திட்டங்களுக்கு மேலும் உதவிகரமாக இருக்கும் என நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    • பூமிக்கு திரும்புவதற்காக சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட குழுவினர் டிராகன் விண்களத்திற்குள் சென்றனர்.
    • சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு நாளை திரும்புகிறது.

    நாசாவின், கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. பின்னர், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

    அமெரிக்காவின் பெக்கி விட்சன், சுபான்ஷூ சுக்லா, ஹங்கேரியின் திபோர், போலந்தின் ஸ்லாவேஜ் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

    அவர்களின் 14 நாட்கள் ஆய்வு முடிவடைந்த நிலையில், 4 பேரும் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்.

    அதன்படி, பூமிக்கு திரும்புவதற்காக சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட குழுவினர் டிராகன் விண்களத்திற்குள் சென்றனர்.

    சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை புறப்படும் நிலையில், குழு நாளை மாலை பூமிக்கு திரும்பும் என கூறப்பட்டுள்ளது.

    ஆக்சியம் 4 திட்டத்தில் சர்வதேச விண்வெளி மையம் சென்ற சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு நாளை திரும்புகிறது.

    டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்பும் சுபான்ஷூ சுக்லா குழுவினர் நாளை கலிபோர்னியா கடற்கரையில் வந்து இறங்குவார்கள் என கூறப்பட்டது.

    அதன்பவர், இக்குழு விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு வந்தடைய 22.5 மணி நேரம் ஆகும்.

    சர்வதேச ஆய்வு மையத்தில் 7 முக்கிய ஆய்வுகள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட சோதனைகளை செய்துவிட்டு குழு திரும்புகிறது.

    அறிவியல் உபகரணங்கள் மற்றும் ஆராய்ச்சி மாதிரிகள் உள்ளிட்ட 580 பவுன்ட் எடைக்கு மேல் பொருட்களை குழு எடுத்து வருகிறது.

    நாளை பூமி திரும்பிய உடன் நாசாவின் ஜான்சன் விண்வெளி மையம் செல்லும் குழுவினர் அங்கு மருத்துவ மேற்பார்வையில் இருப்பர்.

    உடல் நிலை சீராக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் அவரவர் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவர்.

    • விண்வெளி நிலையத்தினுள் சென்ற 4 வீரர்களை ஏற்கெனவே உள்ள வீரர்கள் வரவேற்றனர்.
    • 4 வீரர்களும் 14 நாட்களுக்கு அங்கேயே தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பியது.

    இந்த திட்டத்தின் கீழ், அமெரிக்காவின் பெக்கி விட்சன், இந்தியாவை சேர்ந்த சுபான்ஷூ சுக்லா, ஹங்கேரியின் திபோர், போலந்தின் ஸ்லாவேஜ் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

    இந்த 4 வீரர்களும் 14 நாட்களுக்கு அங்கேயே தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுபான்ஷூ சுக்லா உடன் பிரதமர் மோடி இன்று வீடியோ காலில் கலந்துரையாடினார்.

    இதன் வீடியோவை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதில்,

    குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் அற்புதமான உரையாடல் நிகழ்த்தினேன். அங்கு அனைத்தும் சரியாக உள்ளதா? நீங்கள் நலமா?" என சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள சுபான்ஷு சுக்லாவிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.

    மேலும் அவர்,"தாய்மண்ணை விட்டு தூரம் இருந்தாலும், இந்தியர்களின் இதயத்துக்கு நெருக்கமாக உள்ளீர்கள். நாம் இருவரும் தற்போது பேசுகிறோம். ஆனால், 140 கோடி இந்தியர்களின் உணர்வு என்னுடன் இருக்கிறது.

    எனது குரலில் இருக்கும் உற்சாகம், அனைத்து இந்தியர்களையும் பிரதிபலிக்கிறது. நமது தேசியக் கொடியை விண்வெளி கொண்டு சென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்" என்றார்.

    மேலும் அவர்," விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு கேரட் அல்வா எடுத்துச் சென்றீர்களா? என சுபான்ஷு சுக்லாவிடம் பிரதமர் மோடி கேட்டதற்கு, " கேரட் அல்வா மட்டுமல்ல, பாசிப்பருப்பு அல்வாவும், ரசமும் எடுத்துச் சென்றதாக" தெரிவித்துள்ளார்.

    "சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்க்கிறேன்" என்றார்.

    சர்வதேச விண்வெளி ஆய்வு மைய அனுபவங்களை சுபான்ஷு சுக்லா பகிர்ந்து கொண்டார்.

    அப்போது, சுக்லா கூறுகையில்," விண்வெளியில் இருந்து உலகை பார்த்ததும் ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுதான் எனத் தோன்றியது.

    இங்கிருந்து பார்க்கும்போது எந்தவொரு எல்லைகளும் கண்ணுக்குத் தெரியவில்லை. மாநிலங்களும் இல்லை, நாடுகளும் இல்லை. நாமெல்லாம் மனிதநேயத்தின் ஓர் அங்கம்.

    உலகமே நமது வீடு, நாம் அங்கு வசித்து வருகிறோம். வரைப்படத்தில் காண்பதை விட விண்வெளியில் இருந்து மிகவும் பிரமாண்டமாக இந்தியா காட்சியளிக்கிறது" என்றார்.

    • விண்வெளி நிலையத்தினுள் சென்ற 4 வீரர்களை ஏற்கெனவே உள்ள வீரர்கள் வரவேற்றனர்.
    • 4 வீரர்களும் 14 நாட்களுக்கு அங்கேயே தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

    அமெரிக்காவின் பெக்கி விட்சன், சுபான்ஷூ சுக்லா, ஹங்கேரியின் திபோர், போலந்தின் ஸ்லாவேஜ் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

    விண்வெளி நிலையத்தினுள் சென்ற 4 வீரர்களை ஏற்கெனவே உள்ள வீரர்கள் வரவேற்றனர்.

    இந்த 4 வீரர்களும் 14 நாட்களுக்கு அங்கேயே தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுபான்ஷூ சுக்லா உடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். 

    இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

    அமெரிக்காவின் பெக்கி விட்சன், சுபான்ஷூ சுக்லா, ஹங்கேரியின் திபோர், போலந்தின் ஸ்லாவேஜ் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

    விண்வெளி நிலையத்தினுள் சென்ற 4 வீரர்களை ஏற்கெனவே உள்ள வீரர்கள் வரவேற்றனர்.

    இந்த 4 வீரர்களும் 14 நாட்களுக்கு அங்கேயே தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுபான்ஷூ சுக்லா உடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    அப்போது, சுக்லா கூறுகையில்," விண்வெளியில் இருந்து உலகை பார்த்ததும் ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுதான் எனத் தோன்றியது.

    இங்கிருந்து பார்க்கும்போது எந்தவொரு எல்லைகளும் கண்ணுக்குத் தெரியவில்லை. மாநிலங்களும் இல்லை, நாடுகளும் இல்லை. நாமெல்லாம் மனிதநேயத்தின் ஓர் அங்கம்.

    உலகமே நமது வீடு, நாம் அங்கு வசித்து வருகிறோம். வரைப்படத்தில் காண்பதை விட விண்வெளியில் இருந்து மிகவும் பிரமாண்டமாக இந்தியா காட்சியளிக்கிறது" என்றார்.

    • விண்வெளி நிலையத்தினுள் சென்ற 4 வீரர்களை ஏற்கெனவே உள்ள வீரர்கள் வரவேற்றனர்.
    • ஆரத்தழுவி சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

    அமெரிக்காவின் பெக்கி விட்சன், சுபான்ஷூ சுக்லா, ஹங்கேரியின் திபோர், போலந்தின் ஸ்லாவேஜ் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

    விண்வெளி நிலையத்தினுள் சென்ற 4 வீரர்களை ஏற்கெனவே உள்ள வீரர்கள் வரவேற்றனர். ஆரத்தழுவி சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது.

    விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு உள்ளிட்ட 4 பேரும் வரவேற்பு பானத்தை அருந்தினர்.

    634வது விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லாவுக்கு ஆக்ஸியம்-4 மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன் "விண்வெளி வீரர் பின்" வழங்கினார்.

    இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுபான்ஷூ சுக்லா கூறுகையில்," இதற்காக ஆவலுடன் காத்திருந்தேன். குழுவினர் என்னை வரவேற்று, எங்களுக்காக தங்கள் கதவுகளைத் திறந்தனர்.

    நான் இன்னும் நன்றாக உணர்கிறேன், எனது எதிர்பார்ப்புகளை காட்சி மற்றும் தற்போதைய குழுவினர் விஞ்சியுள்ளனர்.

    இந்த சாதகமான இடத்திலிருந்து பூமியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த சிலரில் ஒருவராக இருப்பது என் பாக்கியம்" என்றார்.

    • இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.
    • புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் விண்வெளிக்கு பயணித்தனர்.

    அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பியது.

    இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.

    புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் விண்வெளிக்கு பயணித்தனர்.

    இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

    பின்னர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் விண்வெளி வீரர்கள் சென்றனர். அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஹூ சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்றனர்.

    அமெரிக்காவின் பெக்கி விட்சன், சுபான்ஷூ சுக்லா, ஹங்கேரியின் திபோர், போலந்தின் ஸ்லாவேஜ் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

    விண்வெளி நிலையத்தினுள் சென்ற 4 வீரர்களை ஏற்கெனவே உள்ள வீரர்கள் வரவேற்றனர். ஆரத்தழுவி சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது.

    விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு உள்ளிட்ட 4 பேரும் வரவேற்பு பானத்தை அருந்தினர்.

    இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, டிராகன் விண்கலத்தை சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைத்த காட்சியை, நேரலையில் கண்டு மனம் நெகிழ்ந்து அவரது பெற்றோர் ஆனந்த கண்ணீர் சிந்தினர்.

    இந்நிலையில், டிராகன் விண்கலம் பத்திரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த நிலையில் சுபான்ஷு சுக்லா மனைவி காம்னா நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

    அதில்," திக்... திக்... நிமிடங்கள் பறந்துவிட்டன. நிம்மதியாக உணர்கிறேன். இவ்வளவு நாட்களாக பயத்தோடு இருந்தேன். இப்போது அது நிம்மதியாக மாறிவிட்டது" என்றார்.

    • புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் விண்வெளிக்கு பயணித்தனர்.
    • இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.

    அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பியது.

    இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்றுள்ளார். இவருடன் 3 விண்வெளி வீரர்கள் சென்றுள்ளனர்.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஆக்சியம் 4 திட்டம் நேற்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.

    புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் விண்வெளிக்கு பயணித்தனர்.

    இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

    இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் விண்வெளி வீரர்கள் சென்றனர். அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஹூ சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்றனர்.

    அமெரிக்காவின் பெக்கி விட்சன், சுபான்ஷூ சுக்லா, ஹங்கேரியின் திபோர், போலந்தின் ஸ்லாவேஜ் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

    • இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்றுள்ளார்.
    • சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

    அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பியது.

    இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்றுள்ளார். இவருடன் 3 விண்வெளி வீரர்கள் சென்றுள்ளனர்.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஆக்சியம் 4 திட்டம் நேற்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.

    புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் விண்வெளிக்கு பயணித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

    • கடந்த 10 நாட்களாகச் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்தனர்.
    • ஆக்ஸியம் திட்டத்தில் இந்தியரான சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்ல இருப்பது மிகவும் அருமையான விஷயம்.

    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

    8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.

    கடந்த மார்ச் 18 ஆம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். கடந்த 10 நாட்களாகச் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்தனர்.

    இந்நிலையில் விண்வெளி நிலையத்தில் இருந்த அனுபவம் பற்றி சுனிதா வில்லயம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளனர்.

    அதில் விண்வெளியில் இருந்து இந்தியா பார்ப்பதற்கு எப்படி இருந்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த சுனிதா, "விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு இந்தியா அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு மேல் நாங்கள் வரும்போது, புட்ச் வில்மோர் அருமையான புகைப்படங்களை எடுத்தார்.

     

    கிழக்கிலிருந்து மும்பை, குஜராத்தின் மேற்பரப்பில் செல்லும்போது அழகிய கடற்கரையைக் கண்டோம். இரவு நேரங்களில் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை இந்தியா ஒளிந்தபடி இருக்கும்" என்று தெரிவித்தார்.

    மேலும் இந்தியாவுக்கு அடுத்து பயணம் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எனது தந்தையின் சொந்த நாட்டுக்குத் சென்று மக்களை சந்தித்து உற்சாகமடைவேன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

    மேலும் ஆக்ஸியம் திட்டத்தில் இந்தியரான சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்ல இருப்பது மிகவும் அருமையான விஷயம். அவர் ஹீரோவாக திகழ்வார்.

    அவருக்கும் உங்களுக்கு அங்கிருந்து இந்தியா எப்படி உள்ளது என்பதை கூறுவார். இந்தியர்களுடன் எனது அனுபவங்களை பகிர ஆர்வமுடன் இருக்கிறேன். நிச்சயம் ஒரு நாள் அது நடக்கும். விண்வெளியில் கால்பதிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு நான் உதவுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    • சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.
    • சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டார்.

    விண்வெளியில் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

    8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.

    எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டார்.

    விண்வெளியில் 9 மாதங்கள் எப்படி சுனிதா வில்லியம்ஸ் உயிர் பிழைத்தார். எவ்வாறு அவர் உணவு உட்கொண்டார் என்று மக்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுந்தன.

    இந்நிலையில், விண்வெளியில் பெண்கள் தங்கியிருக்கும் சமயத்தில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படுமா? அப்படி மாதவிடாய் ஏற்பட்டால் வெளியேறும் ரத்தம் விண்வெளியில் மிதக்குமா? என்று பெண்களுக்கு கேள்விகள் எழலாம்.

    விண்வெளியில் தங்கியிருக்கும் பெண்கள் தங்களுக்கு மாதவிடாய் ஏற்பட வேண்டுமா? இல்லையா? என்பதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். மாதவிடாய் வேண்டாம் என்று முடிவு செய்தால் ஹார்மோன் மாத்திரைகளை பெண்கள் எடுத்து கொள்ளலாம். இது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது.

    அதே சமயம் விண்வெளியில் இருக்கும் பெண்கள் மாதவிடாய் ஏற்பட வேண்டும் என்று நினைப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். பூமியில் நிகழ்வது போலவே விண்வெளியில் இயல்பாகவே மாதவிடாய் ஏற்படும். அந்த சமயத்தில் பெண்கள் சானிட்டரி பேடுகளை பயனபடுத்திக்கொள்ளலாம்.

    • போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
    • 9 மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமியில் கால் பதிக்கவுள்ளார்.

    வாஷிங்டன்:

    விண்வெளியில் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

    8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.

    எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்துவர அமெரிக்காவின் புதிய அரசு முயற்சி செய்தது.

    இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன் என்ற விண்கலம், பால்கன்-9 என்ற ராக்கெட் மூலம் கடந்த சனிக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த மீட்பு விண்கலத்தில் ரஷிய நாட்டை சேர்ந்த கிரில்பெஸ்கோவ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் இருந்தனர். அந்த விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

    இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் இருந்து, க்ரு டிராகன் விண்கலத்துக்கு சென்றனர். அவர்களுடன் இங்கிருந்த சென்ற விண்வெளி வீரர்களும் பயணிக்கிறார்கள்.

    இது தொடர்பாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், வானிலை சீராக இருந்தால் க்ரு டிராகன் விண்கலம் புளோரிடா கடல் பகுதியை வந்தடையும் என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த டிராகன் விண்கலம், புளோரிட கடற்பரப்பை நோக்கி நெருங்கியது.

    தரையிறங்கும் டிராகன் விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்களை மீட்க தயார் நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் குழு வந்துள்ளனர்.

    17 மணி நேர பயணத்துக்கு பிறகு புளோரிடாவில் உள்ள கடற்கரையில் அவர்களது விண்கலம் தரையிறங்கியது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பாதுகாப்பாக பூமி திரும்பினார்.

    • நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான கேடி கோல்மேன் பேட்டியளித்தார்.
    • பணி முடிந்த பிறகும், தொழில்நுட்ப காரணங்களால் இரண்டு விண்வெளி வீரர்களும் அங்கேயே சிக்கிக் கொள்கிறார்கள்.

    அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்கள் கடந்த 9 மாதங்களாகச் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8 நாள் பயணமாக விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர்.

    பணி முடிந்த பிறகும், தொழில்நுட்ப காரணங்களால் இரண்டு விண்வெளி வீரர்களும் அங்கேயே சிக்கிக் கொள்கிறார்கள். தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அவர் திரும்பி வருவதும் பல முறை தாமதமானது. இப்போது அவர் இறுதியாக இன்று அல்லது நாளைக்குள் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் திட்டமிடப்பட்டதை விட அதிக நாட்கள் சிரமத்தை பொறுத்துக்கொண்டு விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ்க்கு நாசா எவ்வளவு பணம் கொடுக்கும் என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை முன்னாள் விண்வெளி வீரர் ஒருவர் வழங்கியுள்ளார்.

    நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான கேடி கோல்மேன் கூறுகையில்,  விண்வெளி வீரர்கள் அமெரிக்க அரசு ஊழியர்கள் என்பதால், அவர்கள் விண்வெளியில் செலவிடும் நேரம் எந்தவொரு சாதாரண வேலையையும் போலவே கருதப்படுகிறது. அவர்கள் வழக்கமான ஊதியத்தைப் பெறுகிறார்கள். கூடுதலாக, விண்வெளி நிலையத்தில் அவர்களின் உணவு மற்றும் தங்குமிட செலவுகளை நாசா ஏற்கிறது.

     

    விண்வெளி வீரர்கள் பெறும் ஒரே கூடுதல் இழப்பீடு, தற்செயலான செலவுகளுக்கான ஒரு சிறிய தினசரி கொடுப்பனவு மட்டுமே. இது ஒரு நாளைக்கு வெறும் 4 டாலர் தான் என்று கூறினார். அதாவது ஒரு நாளைக்குத் தோராயமாக 347 ரூபாய்.

    2010-11 ஆம் ஆண்டில் கேடி கோல்மேன் 159 நாள் விண்வெளிப் பயணத்திற்குச் சென்றபோது, அவருக்கு மொத்தம் 636 டாலர், அதாவது அவரது சம்பளத்தைத் தவிர தோராயமாக ரூ.55,000 கூடுதலாகப் கிடைத்தது.

    இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் விண்வெளியில் 285 நாட்களுக்கு மேல் செலவிட்டுள்ளனர். இதன்படி, சம்பளத்தைத் தவிர, அவருக்கு 1,100 டாலர்கள் மட்டுமே, அதாவது தோராயமாக 1 லட்சம் ரூபாய் கூடுதல் தொகையாகக் கிடைக்கும்.   

    அதன்படி, 9 மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த  இருவருக்கும் ரூ.81 லட்சம் முதல் ரூ.1.05 கோடி வரை (93 ஆயிரத்து 850 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 22 ஆயிரத்து 4 அமெரிக்க டாலர் வரை) வளநாகமான சம்பளம் கிடைக்கும்.

    கூடுதல் ஊக்கத்தொகையையும் சேர்த்து, அவர்களுக்கு கிடைக்கும் மொத்த சம்பளம் ரூ.82 லட்சம் முதல் ரூ.1.06 கோடி வரை (94 ஆயிரத்து 998 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 23 ஆயிரத்து 152 அமெரிக்க டாலர் வரை) இருக்கும் என தெரிய வந்துள்ளது. 

    ×