என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "international space center"

    • சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.
    • சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டார்.

    விண்வெளியில் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

    8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.

    எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டார்.

    விண்வெளியில் 9 மாதங்கள் எப்படி சுனிதா வில்லியம்ஸ் உயிர் பிழைத்தார். எவ்வாறு அவர் உணவு உட்கொண்டார் என்று மக்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுந்தன.

    இந்நிலையில், விண்வெளியில் பெண்கள் தங்கியிருக்கும் சமயத்தில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படுமா? அப்படி மாதவிடாய் ஏற்பட்டால் வெளியேறும் ரத்தம் விண்வெளியில் மிதக்குமா? என்று பெண்களுக்கு கேள்விகள் எழலாம்.

    விண்வெளியில் தங்கியிருக்கும் பெண்கள் தங்களுக்கு மாதவிடாய் ஏற்பட வேண்டுமா? இல்லையா? என்பதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். மாதவிடாய் வேண்டாம் என்று முடிவு செய்தால் ஹார்மோன் மாத்திரைகளை பெண்கள் எடுத்து கொள்ளலாம். இது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது.

    அதே சமயம் விண்வெளியில் இருக்கும் பெண்கள் மாதவிடாய் ஏற்பட வேண்டும் என்று நினைப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். பூமியில் நிகழ்வது போலவே விண்வெளியில் இயல்பாகவே மாதவிடாய் ஏற்படும். அந்த சமயத்தில் பெண்கள் சானிட்டரி பேடுகளை பயனபடுத்திக்கொள்ளலாம்.

    • போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
    • 9 மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமியில் கால் பதிக்கவுள்ளார்.

    வாஷிங்டன்:

    விண்வெளியில் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

    8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.

    எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்துவர அமெரிக்காவின் புதிய அரசு முயற்சி செய்தது.

    இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன் என்ற விண்கலம், பால்கன்-9 என்ற ராக்கெட் மூலம் கடந்த சனிக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த மீட்பு விண்கலத்தில் ரஷிய நாட்டை சேர்ந்த கிரில்பெஸ்கோவ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் இருந்தனர். அந்த விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

    இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் இருந்து, க்ரு டிராகன் விண்கலத்துக்கு சென்றனர். அவர்களுடன் இங்கிருந்த சென்ற விண்வெளி வீரர்களும் பயணிக்கிறார்கள்.

    இது தொடர்பாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், வானிலை சீராக இருந்தால் க்ரு டிராகன் விண்கலம் புளோரிடா கடல் பகுதியை வந்தடையும் என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த டிராகன் விண்கலம், புளோரிட கடற்பரப்பை நோக்கி நெருங்கியது.

    தரையிறங்கும் டிராகன் விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்களை மீட்க தயார் நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் குழு வந்துள்ளனர்.

    17 மணி நேர பயணத்துக்கு பிறகு புளோரிடாவில் உள்ள கடற்கரையில் அவர்களது விண்கலம் தரையிறங்கியது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பாதுகாப்பாக பூமி திரும்பினார்.

    • சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் விண்வெளி மையத்தை பார்க்கலாம்.
    • சென்னையில் இருந்தே இந்த நிகழ்வு தெரியும் என்பதால் மக்கள் காண ஆர்வம்.

    சர்வதேச விண்வெளி மையம் குறிப்பிட்ட பகுதியில் வானிலை தெரியும் நேரம் பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டு வருகிறது.

    பொதுவாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வான்வெளி தெளிவாக இருக்கும்போது மட்டும் சிறிய ஒளி புள்ளியாக விண்வெளி ஆய்வு மையத்தை காண முடியும்.

    அந்த வகையில், சென்னையில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்று இரவு வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது.

    இதுபோல், சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் விண்வெளி மையத்தை பார்க்கலாம். சென்னையில் இன்றிரவு, 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தென்படும் என நாசா அறிவித்துள்ளது.

    சென்னையில் இருந்தே இந்த நிகழ்வு தெரியும் என்பதால் மக்கள் காண ஆர்வத்துடன் உள்ளனர்.

    • சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் விண்வெளி மையத்தை பார்க்கலாம்.
    • சென்னையில் இருந்தே இந்த நிகழ்வு தெரியும் என்பதால் மக்கள் காண ஆர்வம்.

    சர்வதேச விண்வெளி மையம் குறிப்பிட்ட பகுதியில் விண்ணில் தெரியும் நேரம் பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டு வருகிறது.

    பொதுவாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வான்வெளி தெளிவாக இருக்கும்போது மட்டும் சிறய ஒளி புள்ளியாக விண்வெளி ஆய்வு மையத்தை காண முடியும்.

    அந்த வகையில், சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்று இரவு வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா அறிவித்தது.

    அதன்படி, சென்னையில் இன்றிரவு, 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தென்படும் என நாசா அறிவித்தது.

    இந்நிலையில், சென்னையில் இருந்து விண்ணில் சர்வதேச விண்வெளி மையம் வெறும் கண்ணில் தென்பட்டது.

    நாசா அறிவித்தது போல், சென்னையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தென்பட்டது.

    சென்னையில் இருந்தே இந்த நிகழ்வு தெரிந்ததால், மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    அமெரிக்க ராணுவத்தில் விண்வெளிப் படைப்பிரிவு உருவாக்க வேண்டும் என்ற டிரப்பின் அறிவிப்புக்கு ரஷியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. #SpaceForce #Trump #Russia
    மாஸ்கோ:

    பூமியை போலவே விண்வெளியிலும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்த முழுமூச்சாக முயன்று வருகிறது. ஆனாலும், பூமியை போலவே விண்வெளியிலும் ரஷியா அமெரிக்காவுக்கு சரிக்கு சமமான போட்டியாளராக இருந்து வருகிறது. 

    விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஆய்வு மையத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றினாலும், தனிப்பட்ட ஆதிக்கத்தை அங்கு செலுத்த இரு நாடுகளுமே முயற்சித்து வருகின்றன.

    சமீபத்தில், அமெரிக்க ராணுவத்தில் விண்வெளி படை என்ற புதிய படைப்பிரிவை உருவாக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டார். அதற்கான, பணிகளை மேற்கொள்ள அந்நாட்டு பாதுகாப்பு துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், விண்வெளியில் ரஷியா, சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவே முதலிடத்தில் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.



    இந்நிலையில், டிரம்ப்பின் விண்வெளிப்படை அறிவிப்புக்கு ரஷியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஷஹரோவா, “டிரம்ப்பின் விண்வெளிப்படை அறிவிப்பை கேட்டுக்கொண்டோம். விண்வெளியிலும் ஆதிக்கம் செலுத்துவது அவர்களின் நோக்கம். ஆனால், இது ஆபத்தான ஒன்று.” என கூறினார்.

    மேலும், “விண்வெளியில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் அங்கு ஆயுதங்களைக் கொண்டு வருவதற்கான திட்டங்களை வளர்ப்பது சரியானதாக இருக்காது. அமைதியின் நோக்கத்தை சிதைப்பதாக இது அமையும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ×