search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Atmosphere"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகம்.
    • வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி கண்டுபிடித்துள்ளது.

    வாஷிங்டன்:

    பூமியை போன்று வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதில் சூரிய குடும்பத்துக்கு வெளியே பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி கண்டு பிடித்துள்ளது.

    நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் கடந்த 2017-ம் ஆண்டு ஜிஜே 9827டி என்று பெயரிடப்பட்ட கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியின் விட்டத்தில் ஏறக்குறைய இரண்டு மடங்கு இருக்கும் இந்த கிரகத்தில் நீர் நிறைந்த வளிமண்டலங்கள் இருப்பதை ஹப்பிள் தொலைநோக்கி தற்போது கண்டறிந்துள்ளது. இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மீனம் நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் ஒரு குறு விண்மீனை சுற்றி வரும் இந்த கிரகம் ஒவ்வொரு முறை இந்த சூரியனை கடந்து செல்லும் நேரத்தில் எடுக்கப்படும் நிறமாலை தரவுகளின் அடிப்படையில் அந்த கிரகத்தில் உள்ள மூலக்கூறுகள் கண்டறியப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறு நிறைந்த வளிமண்டலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பூமியில் உள்ள கடலை போன்று இரண்டு மடங்கு அதிகமாக நீராவியை இந்த கிரகம் பெற்றிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த கிரகம் வெள்ளி கிரகத்தை போல 800 டிகிரி பாரன்ஹீட் வெப்பமாக இருப்பதால், வளிமண்டலம் நீராவியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    பாறைகள் நிறைந்த கிரகங்களில் வளிமண்டலங்களின் நீர் மூலக்கூறுகள் இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான இது ஒரு முக்கியமான படியாகும் 97 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மீனம் நட்சத்திர மண்டலத்தில் பூமியைப் போன்ற வளிமண்டலம் பெற்ற ஒரு கிரகத்தை கண்டறிந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

    இதற்கு முன்பு கண்டறிந்த நீர் மூலக்கூறு ஆக்சிஜன் இருக்கும் கிரகங்களை ஒப்பிடுகையில், தற்போது கண்டறிந்துள்ள கிரகம் மிக அருகில் இருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    • முத்துப்பேட்டை தாலுகா தொண்டியக்காடு, தில்லைவிளாகம் கடற்கரை பகுதியை தூய்மை செய்யும் பணி நடந்தது.
    • கடற்கரை பகுதிகளில் போடப்படும் குப்பைகளால் நீர் வாழ் உயிரினங்கள் அழிகின்றன.

    திருத்துறைப்பூண்டி:

    உலக ஓசோன் தினம் மற்றும் சர்வதேச கடற்கரை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்கள், பள்ளிகல்வித் துறை இணைந்து முத்துப்பேட்டை தாலுகா தொண்டியக்காடு, தில்லைவிளாகம் கடற்கரை பகுதியை தூய்மை செய்யும் பணி நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார்.

    திருவாரூர் மாவட்ட சுற்று ச்சூழல் உதவி பொறியாளர் விஜயகுமார், தில்லைவிளாகம் ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன், பாலம் தொண்டு நிறுவனச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராசேந்திரன் வரவேற்றார். தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் மாயகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.

    பள்ளி மாணவ மாணவி களின் விழிப்புணர்வு பேரணி, தூய்மை பணியை துவக்கிவைத்து முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி பேசும்போது ஓசோன் என்ற வாயுமண்டலம் சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதா கதிர்களை பூமிக்கு வராமல் தடுத்து மனிதனையும், உயிரினங்களையும் காக்கிறது, பல்வேறு காரணங்களால் அதில் ஓட்டை விழுந்துள்ளது, சுற்றுச்சூழலை காப்பதன் மூலம் அதை சரிசெய்ய முடியும்,

    கடற்கரை பகுதிகளில் போடப்படும் குப்பைகளால் நீர் வாழ் உயிரினங்கள் அழிகின்றன. கரைக்கு முட்டையிட வரும் ஆமைகள் வலைகளில் சிக்கி உயிரிழக்கின்றன.

    இதனால் உயிர் பன்மயம் பாதிக்கப்ப டுகிறது எனவே நீர் நிலைகளில் குப்பைகளை போடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்று தூய்மை பணியை மேற்கொண்டனர் கிழிந்தவலைகள், பிளாஸ்டிக், மரத்துண்டுகள், பழைய துணிகளை சேகரித்து ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். பிறகு சுற்றுசூழல் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சியை தேசிய பசுமைப்படை ஒருங்கி ணைப்பாளர் நடனம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பசுமைத் தோழர் பேகன் ஜமீன் ஆகியோர்

    ஒருங்கிணைத்தனர்.மாவட்ட சுற்றுச்சூழல் மன்றங்க ளின் ஒருங்கிணை ப்பாளர் முத்துக்குமார் நன்றி கூறினார். தொண்டியக்காடு கீழ வாடியக்காடு பள்ளி மாணவ மாணவிகள் தூய்மை பணியில் கலந்துக்கொண்டனர்.

    ×